السلام عليكم ورحمه الله وبركاته
الحمد لله رب العالمين الصلاه والسلام على رسول الله المرسلين اما بعد
فقال الله تعالى في القران العظيم والقران المجيد
اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
لَقَدْ كَانَ لَكُمْ فِىْ رَسُوْلِ اللّٰهِ اُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ يَرْجُوا اللّٰهَ وَالْيَوْمَ الْاٰخِرَ وَذَكَرَ اللّٰهَ كَثِيْرًا
அல்லாஹ்வின் மீதும் ، இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து ، அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.
(அல்குர்ஆன்: 33:21)
أَنَسِ بْنِ مَالِكٍؓ قَالَ: قَالَ لِي رَسُولُ اللّٰهِؐ: يَا بُنَيَّ إِنْ قَدَرْتَ أَنْ تُصْبِحَ وَتُمْسِيَ لَيْسَ فِي قَلْبِكَ غِشٌّ لأَحَدٍ فَافْعَلْ، ثُمَّ قَالَ لِي: يَابُنَيَّ وَذلِكَ مِنْ سُنَّتِي
وَمَنْ أَحْيَا سُنَّتِي فَقَدْ أَحَبَّنِي، وَمَنْ أَحَبَّنِي كَانَ مَعِي فِي الْجَنَّةِ.
“என்னருமை மகனே! நீர் காலையும், மாலையும் (எல்லா நேரங்களிலும்) உன் மனதில் பிறரைப் பற்றி எந்தக் குறையும் இல்லாத நிலையில் இருக்க முடிந்தால் அவசியமாக அவ்வாறே” இருந்து கொள்ளவும். எனது மகனே! இது எனது வழியைச் சேர்ந்தது,
எவர் எனது வழியை உயிர்ப்பித்தாரோ, அவர் என்னை நேசித்தார், எவர் என்னை நேசித்தாரோ அவர் சுவனத்தில் என்னுடன் இருப்பார்!’’
என்று தம்மிடம் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
கண்ணியமானவர்களே பாக்கியம் நிறைந்த ரபியுல் அவ்வல் மாதத்தில் நாமெல்லாம் இருக்கிறோம். பெருமானாரின் பரக்கத் இந்த மாதத்தில் மட்டும் சுருக்கிக் கொள்ளாமல், சஹாபாக்களை போல் வாழ்நாள் முழுக்க மீலாதாக்க வேண்டும். சஹாபாக்கள் நபியவர்களை உற்று நோக்கினார்கள், நபியவர்களின் சின்னச்சின்ன செயல்களையும் உன்னிப்பாக கவனித்தார்கள், இதனால் நபியை முழுமையாக பின்பற்றுவது சஹாபாக்களுக்கு மிகவும் லேசாக இருந்தது. எனவே முதலில் நபியின் ஒவ்வொரு சுன்னத்து களையும் படிக்க வேண்டும், அதன் ருசியை உணர வேண்டும், அதை நம் வாழ்க்கையில் கொண்டு வரவேண்டும்.
சிறிய விஷயமோ மிகப்பெரிய விஷயமோ நபி செய்தால் அதை செய்வார்கள்:-
عن عمر بن الخطاب رضي الله عنه أنه جاء إلي الحجر الاسود فقبله فقال ((إني اعلم حجر لا تجنب ولا تنفع ولولا أني رأيت النبي صلي الله عليه وسلم يقبلك ما قبلتك)) رواه البخاري
ஹஜ்ரத் உமர் இப்னுல் கத்தாப் (ரழி) அவர்கள் ஹஜருல் அஸ்வத் கல்லின் அருகில் வந்தார்கள். அதை முத்தமிட்டார்கள். மேலும் சொன்னார்கள் ، நிச்சயமாக நான் அறிந்துள்ளேன். "நீ ஒரு கல். உன்னால் எந்த தீங்கும் இழைக்க முடியாது ، எந்த பிரயோஜனமும் கொடுக்கமுடியாது.நிச்சயமாக நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உன்னை முத்தமிடுவதாக பார்க்கவில்லையென்றால் ، உன்னை நான் முத்தமிட்டுருக்கமாட்டேன்".
நபி ஸலலல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் வேண்டாமென்ற விஷயம் தன் வாழ்வில் எவ்வளவு பெரிய பிரயோஜனம் தருவதாக இருந்தாலும் அதை விட நபியின் வார்த்தை தான் தன் வாழ்க்கை என எடுத்து கொண்டவர்கள் நபித்தோழர்கள்:-
وعن عبد الله بن عباس أن رسول الله صلى الله عليه وسلم رأى خاتما من ذهب في يد رجل فنزعه فطرحه فقال: «؟ يعمد أحدكم إلى جمرة من نار فيجعلها في يده» فَقِيلَ لِلرَّجُلِ بَعْدَمَا ذَهَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: خُذْ خَاتَمَكَ انْتَفِعْ بِهِ. قَالَ: لَا وَاللَّهِ لَا آخُذُهُ أَبَدًا وَقَدْ طَرَحَهُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. رَوَاهُ مُسلم
ஒருமுறை அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைச் சுற்றி அருமைத் தோழர்கள் அமர்ந்திருக்க தோழர் ஒருவரின் கைவிரலில் தங்கமோதிரம் மின்னக்கண்ட போது சட்டென நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கன்னங்கள் கோபத்தால் சிவக்கத் தொடங்கியது. அவரிடமிருந்த அந்த மோதிரத்தைக் கழட்டி، தூர வீசி எறிந்தார்கள்.பிறகு வினவினார்கள் உங்களில் எவரேனும் நரகத்தின் நெருப்புத்துண்டை அடைய விரும்புகிறாரா ...؟ என்று.
சற்று நேரத்தில் சபை கலைந்தது. அருகேயிருந்த இன்னொரு தோழர் நண்பரே! தூக்கி எறியப்பட்ட அந்த மோதிரத்தை (மோதிரமாகத் தானே அணியக் கூடாது ...؟)
வேறு பயன்பாடுக்காக பயன்படுத்திக் கொள்ளலாமே.! என்று சொன்னது தான் தாமதம், உடனே மோதிரக்காரர் சொன்னார்: அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கிறேன், அதை நான் என்றென்றைக்கும் எடுக்கவே மாட்டேன். அதுவும் அல்லாஹ்வின் தூதர் தூக்கி வீசியதற்குப்பிறகு அதை நான் எடுப்பேனா என்று பதிலளித்தார்கள்.
நூல்: முஸ்லிம்
நபியவர்களின் குணாதிசயங்களை தங்களுக்குள் ஆக்கிய ஹஜ்ரத் இப்னு உமர் ரலி யல்லாஹு அன்ஹு:-
ஒரு போதும் அவர் ஒப்பந்தங்களை மீறியதில்லை. வார்த்தைகளை மாற்றிப் பேசியதில்லை.
குழப்ப வாதிகளுக்கு உடன்பட்டதில்லை
அவரது இன்னொரு இயல்பு அவர் எவ்வளவு நல்லவர் என்ற பிரமிப்பை ஏற்படுத்துகிறது؟ உறங்கும் ஒருவரை அவர் எழுப்பியதில்லை.
அப்துல்லாஹ் ரலி கூறுகிறார் ،
لقد بايعت رسول الله صلى الله عليه وسلم
فما نكثت ولا بدّلت الى يومي هذا..وما بايعت صاحب فتنة..ولا أيقظت مؤمنا من مرقده
என்பத்து ஐந்து ஆண்டுகள் இந்த உலகில் வாழ்ந்த ஒருவர் நபியவர்களின் வழி முறைகளை கடைப்பித்த "பாலிஸி" எத்தகை சிறப்புமிக்கது என்பதை இன்றைய நவீன உலகு நினைவில் கொள்ள வேண்டும்.
எப்படிப்பட்ட நிலை வந்தாலும் யாருக்கு முன் நின்றாலும் நபியவர்களின் சொல்லுக்கும் செயலுக்குயும் மாறு செய்யாத உத்தமர்கள்:-
ஹுதைபிய்யா உடன் படிக்கையின்போது முஸ்லிம்களின் தூதுவராக ஹள்ரத் உஸ்மான் (ரலி) அவர்கள் மக்காவிற்கு சென்றார்கள். தங்களின் சிறிய தந்தையின் மகன் அபான் இப்னு சயீத் வீட்டில் தங்கினார்கள். காலையில் மக்காவின் தலைவர்களை சந்திக்க கிளம்பினார்கள். அந்நேரத்தில் ஹள்ரத் உஸ்மான் (ரலி) அவர்கள் கீழாடை இஸ்லாமிய போதனையின் படி கரண்டைக்கு மேல் இருந்தது. இதைக் கண்ட அபான் இப்னு சயீத் கூறினார். "உஸ்மான் அவர்களே! எந்த மனிதர் எவ்வளவு கீழ்நோக்கி (கரண்டை வரை) ஆடைகளை அணிவாரோ அந்தளவு அவர் உயர்ந்தவராக கருதப்படுகிறார் என்பது உங்களுக்கு தெரியும்! தாங்கள் மக்கா தலைவர்களிடம் பேச்சுவார்த்தைக்குச் செல்கிறீர்கள். இவ்வாறு ஆடையை அணிந்து சென்றால் அவர்கள் உங்களை கண்ணியமாக பார்க்கமாட்டார்கள். பேச்சு வார்த்தை முழுமை பெறாது என்று கூறியபோது உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள். ”முடியாது! நீர் கூறுவதை போன்று ஒருபோதும் என்னால் அணிய முடியாது. நான் அணிந்திருப்பதைப் போன்று தான் எனது தலைவர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அணிந்திருப்பார்கள் என்று கூறி மறுத்து விட்டார்கள்.
(நூல்: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபஹ்)
நாயகம் சொன்னதாக கேட்டதை தங்கள் வாழ்நாள் முழுதும் விடாது செய்த ஸாலிஹீன்கள்:-
لقد كان السلف الصالح شديدي الحرص على تتبع سنة رسولنا صلى الله عليه وسلم
قال عبد الرحمن بن مهدي: سمعت سفيان يقول: ما بلغني عن رسول الله -صلى الله عليه وسلم - حديث قط إلا عملت به ولو مرة.
- روى مسلم. قال: حدثني عنبسة بن أبي سفيان، قال: سمعت أم حبيبة تقول: سمعت رسول الله صلي الله عليه وسلم يقول: «من صلى اثنتي عشرة ركعة في يوم وليلة، بني له بهن بيت في الجنة». قَالَتْ أُمُّ حَبِيبَةَ: فَمَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ رَسُولِ اللّهِ.
وَقَالَ عَنْبَسَةُ: فَمَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ أُمِّ حَبِيبَةَ.
وَقَالَ عَمْرُو بْنُ أَوْسٍ: مَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ عَنْبَسَةَ.
وَقَالَ النُّعْمَانُ بْنُ سَالِمٍ: مَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ عَمْرِو بْنِ أَوْسٍ.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஒவ்வொரு நாளும் பன்னிரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுகின்றாரோ அதற்காக அவருக்குச் சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுகிறது.
இதை உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை.
அறிவிப்பாளர் அம்பசா பின் அபீசுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதை நான் உம்மு ஹபீபா (ரலி) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை.
அறிவிப்பாளர் அம்ர் பின் அவ்ஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அம்பசா (ரஹ்) அவர்களிடமிருந்து கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் விட்டதேயில்லை.
அறிவிப்பாளர் நுஅமான் பின் சாலிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அம்ர் பின் அவ்ஸ் (ரஹ்) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை.
நூல்: முஸ்லிம் ...
பெரியார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒவ்வொரு சுன்னத்தையும் பின்பற்றுவதற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தார்கள்:-
தேவ்பந்த் மதரஸாவினுடைய பாணி மௌலானா காஸிம் நானூதவி (ரஹ்) அவர்களை ஒரு முறை ஆங்கிலேயர் கைது செய்வதற்கு வந்தார்கள்.
மௌலானா அவர்கள் மூன்று நாட்கள் வரை யாருடைய கண்ணிலும் படாமல் ஒளிந்து கொண்டு பின்னர் வெளியே வந்தார்கள்.
ஒருவர் மௌலானாவிடம் சொன்னார்கள் ஹஜ்ரத் மூன்று நாட்களுக்கு பின் தாங்கள் வெளியே வந்துள்ளீர்கள். ஆனால் இப்பொழுதும் தங்களின் வாரண்ட் நிலுவையில் உள்ளது. எனவே ஆங்கிலேயர் தாங்களை கைது செய்து தூக்கிலிடுவார்கள்.
உடனே மௌலானா அவர்கள் ஒரு ஆச்சரியமான விஷயத்தை சொன்னார்கள். என்னை கைது செய்து விடுவார்கள் என்ற பயத்தில் நான் மறைந்திருக்கவில்லை. எனக்கு உயிரை பற்றி எந்த கவலையும் கிடையாது. ஆங்கிலேயர் என்னை கைது செய்து தூக்கிலிட்டு விடுவார்களே என்ற கவலையும் கிடையாது.
இனி, நான் ஒரு பொழுதும் ஒளிந்து கொள்ள மாட்டேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தவ்ர் குகையில் மூன்று நாட்கள் ஒளிந்திருக்கவில்லையென்றால், நானும் மூன்று நாட்கள் ஒளிந்திருக்கமாட்டேன்.
நபியின் சுன்னத்தை பின்பற்றும் நோக்கத்திலேயே இப்படி செய்தேன் என்றார்கள்.
நபியின் மீது பிரியம்:-
ஒரு பெரியார், ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தர்பூசணி பழத்தை எந்த முறையில் சாப்பிட்டார்கள் என்ற ஹதீஸ் தெரியாததின் காரணமாக அவர் தன் வாழ்நாள் முழுவதும் தர்பூசணி பழம் சாப்பிடவில்லை.
எவ்வளவு பிரியம் இருந்திருந்தால் நபி சாப்பிட்ட முறை தெரியாததால் வாழ்நாள் முழுவதும் ஒரு பழத்தை சாப்பிடாமல் இருந்திருப்பார். .
நாம், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எத்தனையோ ஹதீஸ்களை தெரிந்து வைத்துள்ளோம்.
எத்தனை ஹதீஸ்களின் படி அமல் செய்கிறோம்.
இது தான் நபியின் மீது நாம் வைத்துள்ள பிரியத்தின் நிலை!
நபியுடைய வாழ்க்கையை பின்பற்றுவதில் பெருமக்களின் ஆவல்:-
ஹஜ்ரத் முஜத்தித் அல்ஃப தானீ (ரஹ்) அவர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒரு சுன்னத்தை பின்பற்றுவதற்கு மிகுந்த ஆசை இருந்தது.
ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஜ்ரத் ஹூஸைன் (ரழி) அவர்களை சிறு பிராயத்தில் இருக்கும் சமயம் தூக்கி வைத்திருந்தார்கள். அப்பொழுது ஹஜ்ரத் ஹூஸைன் (ரழி) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது சிறுநீர் கழித்து விடுவார்கள். இதனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆடை ஈரமாகிவிடும்.
ஹஜ்ரத் அவர்களுக்கு இந்த சுன்னத்தை நிறைவேற்றுவதற்கு ஆவல் இருந்தது. ஆனால் அதை நிறைவேற்றுவதில் ஒரு சிக்கல் இருந்தது. ஹஜ்ரத் ஹூஸைன் (ரழி) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மகள் வழியில் பேரன் ஆவார். ஹஜ்ரத் அவர்களுக்கு மகள் வழியில் பேரன் இல்லை. எனவே இந்த சுன்னத்தை நிறைவேற்ற முடியவில்லையே என்ற ஆதங்கம் இருந்து கொண்டிருந்தது.
மேலும் சொன்னார்கள் நான் இறந்த பிறகு என் மகளுக்கு ஆண் குழந்தை பிறந்தால் அந்த குழந்தையை தூக்கி என் கப்ரின் மீது சிறுநீர் கழிக்க செய்யுங்கள் என்றார்கள்.
நபி ஸல்லலாஹூ அலைஹி வஸ்ஸலம் அவர்களின் வாழ்க்கையை பின்பற்றாததின் விளைவுகள்:-
இன்றிலிருந்து நூறாண்டுகளுக்கு முன் லார்ட் மெக்காலே என்பவன் சொன்னான். நான் இப்படிப்பட்ட கல்விமுறையை தயாரித்துள்ளேன். அதன் மூலம் ஒரு முஸ்லிமை யூதனாகவோ, கிறிஸ்தவனாகவோ மாற்ற முடியாது. எனினும் முஸ்லிம் முஸ்லிமாகவும் இருக்கமாட்டான்.
அதன் விளைவை நாம் கண்கூடாக காண்கிறோம். உலகம் முழுவதும் எங்கெல்லாம் முஸ்லிம்கள் இருக்கிறார்களோ, தனி நபரோ, அல்லது ஒரு ஜமாஅத்தோ, முஸ்லிம் அல்லாத நாடுகளில் வசிக்கக்கூடிய சிறுபான்மை முஸ்லிம்களோ, அல்லது முஸ்லிம் நாடுகளில் வசிக்கக்கூடிய பெரும்பான்மை முஸ்லிம்களோ, ஆக எல்லா முஸ்லிம்களும் தங்களை முஸ்லிம் என்று வாதிடுகிறார்கள். ஆனால் வெளித் தோற்றத்திலோ, அல்லது நடந்து கொள்ளும் முறையிலோ அவர்களுக்கும், இஸ்லாத்திற்கும் எந்த தொடர்பும் இல்லாததை போன்று காட்சியளிக்கிறார்கள்.
சுன்னத்தை, சுன்னத் என்ற காரணத்தினால் விட்டுவிடுகிறார்கள். எங்கு திரும்பினாலும் சுன்னத்தான விஷயங்கள் மிக சொற்பமாகவே மட்டுமே காணப்படுகின்றன..
விளைவு முஸ்லிம்கள் அதிகமாக இருந்தாலும் அடிக்கபடுகிறார்கள். அவர்கள் வசிக்கக்கூடிய பகுதிகள் அடித்து நொறுக்கப்படுகறது. முஸ்லிம்களின் இரத்த ஆறு ஓடுகிறது.
இன்னொரு புறம் ஆபாசமான, அசிங்கமான, ஒழுக்கக்கேடான விஷயங்கள் படுவேகமாக பரவி கொண்டிருக்கிறது. மேற்கத்திய கலாச்சாரம் நம்முடைய இரத்தங்களில் கலந்து கொண்டிருக்கிறது.
சர்வசாதாரணமாக அற்பமான விஷயங்களுக்கும் ஈமானை விட்டும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.
இதெல்லாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வழிமுறையை விட்டதின் விளைவாகும்.
அன்பான அல்லாஹ்வின் நல்லடியார்களே...
இன்று நம்முடைய வாழ்வியல் விஷயங்களில் எத்தனையோ செயல்பாடுகளை நமக்கு பிடித்த யார் யாரையோ முன்மாதிரியாக வைத்து வாழ்க்கை சக்கரத்தை நகர்த்துகிறோம்.
உதாரணமாக வியாபாரம் நான் அவரை போல் செய்தால் இந்த நிலமைக்கு ஆளாயிருப்பேன்..
அவர் பிள்ளையை போல நாம் வள்ர்க்க வேண்டும் ....
அவர் போல சமுதாயத்தில் இருக்க வேண்டும் ...
இப்படி ஏராளமான விஷயங்களில் முன்மாதிரியாகவும்,குணாதிசியங்களில் அவர் குணம் போல இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.
தவறில்லை ஆனால் ஒரு முஃமினான மனிதருக்கு முதல் முன்மாதிரி, முதல் ரோல் மாடல், முதல் வாழ்வியல் வழிகாட்டியாகவும், குணங்களிலும்,பண்பாடுகளிளும் உயிரிலும் மேலான கண்மணி நபிகள் நாயகம் சலல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களாகத்தான் இருக்க வேண்டும்.
அதுதான் ஈமானின் அடையாளம்.
ஸஹாபாக்களும்,சாலிஹான முன்னோர்களும் நபியின் தனி சிறப்பை தவிர மற்ற அனைத்து விஷயங்களிளும் தங்கள் வாழ்க்கையின் முதல் முன்மாதிரியாக அவர்களின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் உன்னிப்பாக உற்று நோக்கி அதை தங்கள் வாழ்க்கயில் கடைசி வரை செயல்படுத்தி நபியின் அன்புக்குரியவர்களாக ஆனதை வரலாற்றில் வாயிலாக நாம் பார்த்தோம்..
அதை நம்முடைய வாழ்க்கையிலும் கொண்டு வர வேண்டும்.
நபியின் ஒவ்வொரு செயல்பாடுகளையும்,குணாதிசியங்களையும் நமக்குள் ஆக்கி கொண்டால் வாழ்நாள் முழுவதும் மீலாதே...!
நபியவர்களின் சுன்னத்துகளை உயிர்பிக்கும் நல்லடியார்களாக வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக..
ஆமீன்.