Thursday, 29 October 2020

30/10/2020 ஜூம்ஆ பயான் குறிப்பு தலைப்பு:- வாழ் நாள் முழுக்க மீலாதாக்குவோம்


السلام عليكم ورحمه الله وبركاته

الحمد لله رب العالمين الصلاه والسلام على رسول الله  المرسلين اما بعد

فقال الله تعالى في القران العظيم والقران المجيد

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

لَقَدْ كَانَ لَكُمْ فِىْ رَسُوْلِ اللّٰهِ اُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ يَرْجُوا اللّٰهَ وَالْيَوْمَ الْاٰخِرَ وَذَكَرَ اللّٰهَ كَثِيْرًا ‏

அல்லாஹ்வின் மீதும் ، இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து ، அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.

(அல்குர்ஆன்: 33:21)


أَنَسِ بْنِ مَالِكٍؓ قَالَ: قَالَ لِي رَسُولُ اللّٰهِؐ: يَا بُنَيَّ إِنْ قَدَرْتَ أَنْ تُصْبِحَ وَتُمْسِيَ لَيْسَ فِي قَلْبِكَ غِشٌّ لأَحَدٍ فَافْعَلْ، ثُمَّ قَالَ لِي: يَابُنَيَّ وَذلِكَ مِنْ سُنَّتِي 

وَمَنْ أَحْيَا سُنَّتِي فَقَدْ أَحَبَّنِي، وَمَنْ أَحَبَّنِي كَانَ مَعِي فِي الْجَنَّةِ.

“என்னருமை மகனே! நீர் காலையும், மாலையும் (எல்லா நேரங்களிலும்) உன் மனதில் பிறரைப் பற்றி எந்தக் குறையும் இல்லாத நிலையில் இருக்க முடிந்தால் அவசியமாக அவ்வாறே” இருந்து கொள்ளவும். எனது மகனே! இது எனது வழியைச் சேர்ந்தது,

எவர் எனது வழியை உயிர்ப்பித்தாரோ, அவர் என்னை நேசித்தார், எவர் என்னை நேசித்தாரோ அவர் சுவனத்தில் என்னுடன் இருப்பார்!’’

என்று தம்மிடம் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


கண்ணியமானவர்களே பாக்கியம் நிறைந்த ரபியுல் அவ்வல் மாதத்தில் நாமெல்லாம் இருக்கிறோம். பெருமானாரின் பரக்கத் இந்த மாதத்தில் மட்டும் சுருக்கிக் கொள்ளாமல், சஹாபாக்களை போல் வாழ்நாள் முழுக்க மீலாதாக்க வேண்டும். சஹாபாக்கள் நபியவர்களை உற்று நோக்கினார்கள்,  நபியவர்களின் சின்னச்சின்ன செயல்களையும் உன்னிப்பாக கவனித்தார்கள், இதனால் நபியை முழுமையாக பின்பற்றுவது சஹாபாக்களுக்கு மிகவும் லேசாக இருந்தது. எனவே முதலில் நபியின் ஒவ்வொரு சுன்னத்து களையும் படிக்க வேண்டும், அதன் ருசியை உணர வேண்டும், அதை நம் வாழ்க்கையில் கொண்டு வரவேண்டும்.

சிறிய விஷயமோ மிகப்பெரிய விஷயமோ நபி செய்தால் அதை செய்வார்கள்:-

عن عمر بن الخطاب رضي الله عنه أنه جاء إلي الحجر الاسود فقبله فقال ((إني اعلم حجر لا تجنب ولا تنفع ولولا أني رأيت النبي صلي الله عليه وسلم يقبلك ما قبلتك)) رواه البخاري 

ஹஜ்ரத் உமர் இப்னுல் கத்தாப் (ரழி) அவர்கள் ஹஜருல் அஸ்வத் கல்லின் அருகில் வந்தார்கள். அதை முத்தமிட்டார்கள். மேலும் சொன்னார்கள் ، நிச்சயமாக நான் அறிந்துள்ளேன். "நீ ஒரு கல். உன்னால் எந்த தீங்கும் இழைக்க முடியாது ، எந்த பிரயோஜனமும் கொடுக்கமுடியாது.நிச்சயமாக நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உன்னை முத்தமிடுவதாக பார்க்கவில்லையென்றால் ، உன்னை நான் முத்தமிட்டுருக்கமாட்டேன்".


நபி ஸலலல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் வேண்டாமென்ற விஷயம் தன் வாழ்வில் எவ்வளவு பெரிய பிரயோஜனம் தருவதாக இருந்தாலும் அதை விட நபியின் வார்த்தை தான் தன் வாழ்க்கை என எடுத்து கொண்டவர்கள் நபித்தோழர்கள்:-

وعن عبد الله بن عباس أن رسول الله صلى الله عليه وسلم رأى خاتما من ذهب في يد رجل فنزعه فطرحه فقال: «؟ يعمد أحدكم إلى جمرة من نار فيجعلها في يده» فَقِيلَ لِلرَّجُلِ بَعْدَمَا ذَهَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: خُذْ خَاتَمَكَ انْتَفِعْ بِهِ. قَالَ: لَا وَاللَّهِ لَا آخُذُهُ أَبَدًا وَقَدْ طَرَحَهُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. رَوَاهُ مُسلم

ஒருமுறை அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைச் சுற்றி அருமைத் தோழர்கள் அமர்ந்திருக்க தோழர் ஒருவரின் கைவிரலில் தங்கமோதிரம் மின்னக்கண்ட போது சட்டென நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கன்னங்கள் கோபத்தால் சிவக்கத் தொடங்கியது. அவரிடமிருந்த அந்த மோதிரத்தைக் கழட்டி، தூர வீசி எறிந்தார்கள்.பிறகு வினவினார்கள் உங்களில் எவரேனும் நரகத்தின் நெருப்புத்துண்டை அடைய விரும்புகிறாரா ...؟ என்று.

சற்று நேரத்தில் சபை கலைந்தது. அருகேயிருந்த இன்னொரு தோழர் நண்பரே! தூக்கி எறியப்பட்ட அந்த மோதிரத்தை (மோதிரமாகத் தானே அணியக் கூடாது ...؟)

வேறு பயன்பாடுக்காக பயன்படுத்திக் கொள்ளலாமே.! என்று சொன்னது தான் தாமதம், உடனே மோதிரக்காரர் சொன்னார்: அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கிறேன், அதை நான் என்றென்றைக்கும் எடுக்கவே மாட்டேன். அதுவும் அல்லாஹ்வின் தூதர் தூக்கி வீசியதற்குப்பிறகு அதை நான் எடுப்பேனா என்று பதிலளித்தார்கள்.

நூல்: முஸ்லிம்

 

நபியவர்களின் குணாதிசயங்களை தங்களுக்குள் ஆக்கிய ஹஜ்ரத் இப்னு உமர் ரலி யல்லாஹு அன்ஹு:-

ஒரு போதும் அவர் ஒப்பந்தங்களை மீறியதில்லை. வார்த்தைகளை மாற்றிப் பேசியதில்லை.

குழப்ப வாதிகளுக்கு உடன்பட்டதில்லை

அவரது இன்னொரு இயல்பு அவர் எவ்வளவு நல்லவர் என்ற பிரமிப்பை ஏற்படுத்துகிறது؟ உறங்கும் ஒருவரை அவர் எழுப்பியதில்லை.

அப்துல்லாஹ் ரலி கூறுகிறார் ،

لقد بايعت رسول الله صلى الله عليه وسلم

فما نكثت ولا بدّلت الى يومي هذا..وما بايعت صاحب فتنة..ولا أيقظت مؤمنا من مرقده

என்பத்து ஐந்து ஆண்டுகள் இந்த உலகில் வாழ்ந்த ஒருவர் நபியவர்களின் வழி முறைகளை கடைப்பித்த "பாலிஸி" எத்தகை சிறப்புமிக்கது என்பதை இன்றைய நவீன உலகு நினைவில் கொள்ள வேண்டும்.


எப்படிப்பட்ட நிலை வந்தாலும் யாருக்கு முன் நின்றாலும் நபியவர்களின் சொல்லுக்கும் செயலுக்குயும் மாறு செய்யாத உத்தமர்கள்:-

ஹுதைபிய்யா உடன் படிக்கையின்போது முஸ்லிம்களின் தூதுவராக ஹள்ரத் உஸ்மான் (ரலி) அவர்கள் மக்காவிற்கு சென்றார்கள். தங்களின் சிறிய தந்தையின் மகன் அபான் இப்னு சயீத் வீட்டில் தங்கினார்கள். காலையில் மக்காவின் தலைவர்களை சந்திக்க கிளம்பினார்கள். அந்நேரத்தில் ஹள்ரத் உஸ்மான் (ரலி) அவர்கள் கீழாடை இஸ்லாமிய போதனையின் படி கரண்டைக்கு மேல் இருந்தது. இதைக் கண்ட அபான் இப்னு சயீத் கூறினார். "உஸ்மான் அவர்களே! எந்த மனிதர் எவ்வளவு கீழ்நோக்கி (கரண்டை வரை) ஆடைகளை அணிவாரோ அந்தளவு அவர் உயர்ந்தவராக கருதப்படுகிறார் என்பது உங்களுக்கு தெரியும்! தாங்கள் மக்கா தலைவர்களிடம் பேச்சுவார்த்தைக்குச் செல்கிறீர்கள். இவ்வாறு ஆடையை அணிந்து சென்றால் அவர்கள் உங்களை கண்ணியமாக பார்க்கமாட்டார்கள். பேச்சு வார்த்தை முழுமை பெறாது என்று கூறியபோது உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள். ”முடியாது! நீர் கூறுவதை போன்று ஒருபோதும் என்னால் அணிய முடியாது. நான் அணிந்திருப்பதைப் போன்று தான் எனது தலைவர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அணிந்திருப்பார்கள் என்று கூறி மறுத்து விட்டார்கள்.

(நூல்: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபஹ்)


நாயகம் சொன்னதாக கேட்டதை தங்கள் வாழ்நாள் முழுதும் விடாது செய்த ஸாலிஹீன்கள்:-

لقد كان السلف الصالح شديدي الحرص على تتبع سنة رسولنا صلى الله عليه وسلم

قال عبد الرحمن بن مهدي: سمعت سفيان يقول: ما بلغني عن رسول الله -صلى الله عليه وسلم - حديث قط إلا عملت به ولو مرة.

- روى مسلم. قال: حدثني عنبسة بن أبي سفيان، قال: سمعت أم حبيبة تقول: سمعت رسول الله صلي الله عليه وسلم يقول: «من صلى اثنتي عشرة ركعة في يوم وليلة، بني له بهن بيت في الجنة». قَالَتْ أُمُّ حَبِيبَةَ: فَمَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ رَسُولِ اللّهِ.

وَقَالَ عَنْبَسَةُ: فَمَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ أُمِّ حَبِيبَةَ.

وَقَالَ عَمْرُو بْنُ أَوْسٍ: مَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ عَنْبَسَةَ.

وَقَالَ النُّعْمَانُ بْنُ سَالِمٍ: مَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ عَمْرِو بْنِ أَوْسٍ.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் ஒவ்வொரு நாளும் பன்னிரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுகின்றாரோ அதற்காக அவருக்குச் சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுகிறது.

இதை உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை.

அறிவிப்பாளர் அம்பசா பின் அபீசுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதை நான் உம்மு ஹபீபா (ரலி) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை.

அறிவிப்பாளர் அம்ர் பின் அவ்ஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அம்பசா (ரஹ்) அவர்களிடமிருந்து கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் விட்டதேயில்லை.

அறிவிப்பாளர் நுஅமான் பின் சாலிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அம்ர் பின் அவ்ஸ் (ரஹ்) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை.

நூல்: முஸ்லிம் ...


பெரியார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒவ்வொரு சுன்னத்தையும் பின்பற்றுவதற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தார்கள்:-

தேவ்பந்த் மதரஸாவினுடைய பாணி மௌலானா காஸிம் நானூதவி (ரஹ்) அவர்களை ஒரு முறை ஆங்கிலேயர் கைது செய்வதற்கு வந்தார்கள்.

மௌலானா அவர்கள் மூன்று நாட்கள் வரை யாருடைய கண்ணிலும் படாமல் ஒளிந்து கொண்டு பின்னர் வெளியே வந்தார்கள்.

ஒருவர் மௌலானாவிடம் சொன்னார்கள் ஹஜ்ரத் மூன்று நாட்களுக்கு பின் தாங்கள் வெளியே வந்துள்ளீர்கள். ஆனால் இப்பொழுதும் தங்களின் வாரண்ட் நிலுவையில் உள்ளது. எனவே ஆங்கிலேயர் தாங்களை கைது செய்து தூக்கிலிடுவார்கள்.

 உடனே மௌலானா அவர்கள் ஒரு ஆச்சரியமான விஷயத்தை சொன்னார்கள். என்னை கைது செய்து விடுவார்கள் என்ற பயத்தில் நான் மறைந்திருக்கவில்லை. எனக்கு உயிரை பற்றி எந்த கவலையும் கிடையாது. ஆங்கிலேயர் என்னை கைது செய்து தூக்கிலிட்டு விடுவார்களே என்ற கவலையும் கிடையாது.

 இனி, நான் ஒரு பொழுதும் ஒளிந்து கொள்ள மாட்டேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தவ்ர் குகையில் மூன்று நாட்கள் ஒளிந்திருக்கவில்லையென்றால், நானும் மூன்று நாட்கள் ஒளிந்திருக்கமாட்டேன்.

 நபியின் சுன்னத்தை பின்பற்றும் நோக்கத்திலேயே இப்படி செய்தேன் என்றார்கள்.


நபியின் மீது பிரியம்:-

ஒரு பெரியார், ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தர்பூசணி பழத்தை எந்த முறையில் சாப்பிட்டார்கள் என்ற ஹதீஸ் தெரியாததின் காரணமாக அவர் தன் வாழ்நாள் முழுவதும் தர்பூசணி பழம் சாப்பிடவில்லை.

எவ்வளவு பிரியம் இருந்திருந்தால் நபி சாப்பிட்ட முறை தெரியாததால் வாழ்நாள் முழுவதும் ஒரு பழத்தை சாப்பிடாமல் இருந்திருப்பார். .

நாம், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எத்தனையோ ஹதீஸ்களை தெரிந்து வைத்துள்ளோம்.

எத்தனை ஹதீஸ்களின் படி அமல் செய்கிறோம்.

இது தான் நபியின் மீது நாம் வைத்துள்ள பிரியத்தின் நிலை!

நபியுடைய வாழ்க்கையை பின்பற்றுவதில் பெருமக்களின் ஆவல்:-

ஹஜ்ரத் முஜத்தித் அல்ஃப தானீ (ரஹ்) அவர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒரு சுன்னத்தை பின்பற்றுவதற்கு மிகுந்த ஆசை இருந்தது. 

ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஜ்ரத் ஹூஸைன் (ரழி) அவர்களை சிறு பிராயத்தில் இருக்கும் சமயம் தூக்கி வைத்திருந்தார்கள். அப்பொழுது ஹஜ்ரத் ஹூஸைன் (ரழி) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது சிறுநீர் கழித்து விடுவார்கள். இதனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆடை ஈரமாகிவிடும்.

ஹஜ்ரத் அவர்களுக்கு இந்த சுன்னத்தை நிறைவேற்றுவதற்கு ஆவல் இருந்தது. ஆனால் அதை நிறைவேற்றுவதில் ஒரு சிக்கல் இருந்தது. ஹஜ்ரத் ஹூஸைன் (ரழி) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மகள் வழியில் பேரன் ஆவார். ஹஜ்ரத் அவர்களுக்கு மகள் வழியில் பேரன் இல்லை. எனவே இந்த சுன்னத்தை நிறைவேற்ற முடியவில்லையே என்ற ஆதங்கம் இருந்து கொண்டிருந்தது.

மேலும் சொன்னார்கள் நான் இறந்த பிறகு என் மகளுக்கு ஆண் குழந்தை பிறந்தால் அந்த குழந்தையை தூக்கி என் கப்ரின் மீது சிறுநீர் கழிக்க செய்யுங்கள் என்றார்கள்.

நபி ஸல்லலாஹூ அலைஹி வஸ்ஸலம் அவர்களின் வாழ்க்கையை பின்பற்றாததின் விளைவுகள்:-

இன்றிலிருந்து நூறாண்டுகளுக்கு முன் லார்ட் மெக்காலே என்பவன் சொன்னான். நான் இப்படிப்பட்ட கல்விமுறையை தயாரித்துள்ளேன். அதன் மூலம் ஒரு முஸ்லிமை யூதனாகவோ, கிறிஸ்தவனாகவோ மாற்ற முடியாது. எனினும் முஸ்லிம் முஸ்லிமாகவும் இருக்கமாட்டான்.

அதன் விளைவை நாம் கண்கூடாக காண்கிறோம். உலகம் முழுவதும் எங்கெல்லாம் முஸ்லிம்கள் இருக்கிறார்களோ, தனி நபரோ, அல்லது ஒரு ஜமாஅத்தோ, முஸ்லிம் அல்லாத நாடுகளில் வசிக்கக்கூடிய சிறுபான்மை முஸ்லிம்களோ, அல்லது முஸ்லிம் நாடுகளில் வசிக்கக்கூடிய பெரும்பான்மை முஸ்லிம்களோ, ஆக எல்லா முஸ்லிம்களும் தங்களை முஸ்லிம் என்று வாதிடுகிறார்கள். ஆனால் வெளித் தோற்றத்திலோ, அல்லது நடந்து கொள்ளும் முறையிலோ அவர்களுக்கும், இஸ்லாத்திற்கும் எந்த தொடர்பும் இல்லாததை போன்று காட்சியளிக்கிறார்கள்.

சுன்னத்தை, சுன்னத் என்ற காரணத்தினால் விட்டுவிடுகிறார்கள். எங்கு திரும்பினாலும் சுன்னத்தான விஷயங்கள் மிக சொற்பமாகவே மட்டுமே காணப்படுகின்றன..

விளைவு முஸ்லிம்கள் அதிகமாக இருந்தாலும் அடிக்கபடுகிறார்கள். அவர்கள் வசிக்கக்கூடிய பகுதிகள் அடித்து நொறுக்கப்படுகறது. முஸ்லிம்களின் இரத்த ஆறு ஓடுகிறது.

இன்னொரு புறம் ஆபாசமான, அசிங்கமான, ஒழுக்கக்கேடான விஷயங்கள் படுவேகமாக பரவி கொண்டிருக்கிறது. மேற்கத்திய கலாச்சாரம் நம்முடைய இரத்தங்களில் கலந்து கொண்டிருக்கிறது.

சர்வசாதாரணமாக அற்பமான விஷயங்களுக்கும் ஈமானை விட்டும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.

இதெல்லாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வழிமுறையை விட்டதின் விளைவாகும்.


அன்பான அல்லாஹ்வின் நல்லடியார்களே...

இன்று நம்முடைய வாழ்வியல் விஷயங்களில் எத்தனையோ செயல்பாடுகளை நமக்கு பிடித்த யார் யாரையோ முன்மாதிரியாக வைத்து வாழ்க்கை சக்கரத்தை நகர்த்துகிறோம்.

உதாரணமாக வியாபாரம் நான் அவரை போல் செய்தால் இந்த நிலமைக்கு ஆளாயிருப்பேன்..

அவர் பிள்ளையை போல நாம் வள்ர்க்க வேண்டும் ....

அவர் போல சமுதாயத்தில் இருக்க வேண்டும் ...

இப்படி ஏராளமான விஷயங்களில் முன்மாதிரியாகவும்,குணாதிசியங்களில் அவர் குணம் போல இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.

தவறில்லை ஆனால் ஒரு முஃமினான மனிதருக்கு முதல் முன்மாதிரி, முதல் ரோல் மாடல், முதல் வாழ்வியல் வழிகாட்டியாகவும், குணங்களிலும்,பண்பாடுகளிளும் உயிரிலும் மேலான கண்மணி நபிகள் நாயகம் சலல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களாகத்தான் இருக்க வேண்டும்.

அதுதான் ஈமானின் அடையாளம்.

ஸஹாபாக்களும்,சாலிஹான முன்னோர்களும் நபியின் தனி சிறப்பை தவிர மற்ற அனைத்து விஷயங்களிளும் தங்கள் வாழ்க்கையின் முதல் முன்மாதிரியாக அவர்களின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் உன்னிப்பாக உற்று நோக்கி அதை தங்கள் வாழ்க்கயில் கடைசி வரை செயல்படுத்தி நபியின் அன்புக்குரியவர்களாக ஆனதை வரலாற்றில் வாயிலாக நாம் பார்த்தோம்..

அதை நம்முடைய வாழ்க்கையிலும் கொண்டு வர வேண்டும்.

 நபியின் ஒவ்வொரு செயல்பாடுகளையும்,குணாதிசியங்களையும் நமக்குள் ஆக்கி கொண்டால் வாழ்நாள் முழுவதும் மீலாதே...!

நபியவர்களின் சுன்னத்துகளை உயிர்பிக்கும் நல்லடியார்களாக வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக..

ஆமீன்.

Thursday, 22 October 2020

23/10/2020 ஜூம்ஆ பயான் குறிப்புகள்:- நபியவர்கள் மீது சலவாத் சொல்வோம்


السلام عليكم ورحمه الله وبركاته
الحمد لله رب العالمين الصلاه والسلام على رسول الله المرسلين اما بعد
فقال الله تعالى في القران العظيم والقران المجيد
اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما (الاحزاب-56
)
நிச்சயமாக அல்லாஹ்வும், அவனுடைய மலக்குகளும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்கின்றார்கள். ஆகவே, நம்பிக்கையாளர்களே! நீங்களும் அவர்கள் மீது ஸலவாத்து சொல்லி ஸலாமும் கூறிக் கொண்டு கொண்டிருங்கள்.
அல் குர்ஆன் : (அல் அஹ்சாப் - 56)

நானிலம் சிறக்க வந்த மனிதருள
மாணிக்கம் முஹம்மதுர் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இப்பூவுலகில் அவதரித்த வசந்த காலத்தின் முதல் ஜும்ஆவில் வீற்றிருக்கும் நாம். யா உம்மதீ யா உம்மதீ என்று எந்நாளும் உருகி தன்னையே உம்மத்திறக்கு அற்பணித்த நம் நாயகத்திற்கு நாம் செய்யவேண்டிய கடமைகள் உள்ளதால் நாயகத்தை பின்பற்ற தகுந்த அழகிய முன்மாதிரி என்று உறுதிகொண்டு அதை உறுப்புகளால் உச்சி முதல் உள்ளங்கால் வரை வாழ்வின் அனைத்து நிலைகளையும் பின்பற்றி நாவால் எந்நேரமும் உயர்ந்த சலவாத் உறைத்து சலவாத்தின் மகிமைகளையும், உயர்வுகளையும் தெரிந்துகொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்.

ஒருமுறையாவது சலவாத் சொல்வது கடமை:-

இந்த சிறு வசனத்தின் கட்டளையின்படி
நம்பிக்கையாளர்கள் தம்முடைய வாழ்வில் ஒரு முறையாவது அண்ணல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீது ச ஸலவாத் ஓதுவது ஃபர்ளு - கட்டாயம் என அறிஞர்கள் கூறுகின்றனர்.
ஒரு கூட்டத்தில் அண்ணனல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பெயர் கூறப்படும்போதெல்லாம் ஸலவாத் ஓதுவது அவசியம் என இமாம் தஹாவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறியுள்ளார்கள்.
இது மிக்க மேலான முறையாக இருப்பினும்,
ஒரு கூட்டத்தில் இருக்கும்போது ஒருமுறையேனும் அண்ணல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயரை கூறுபவரும் அதை கேட்பவரும் ஸலவாத் கூறவேண்டும் என்பது இமாம்களின் யோகாபித்த முடிவாகும்.

ஸலவாத் சொல்வதின் சிறப்புகள்:-

قال أبو سليمان الداراني ـ رحمه الله ـ: من أراد أن يسأل الله حاجة, فليبدأ بالصلاة على النبي صلى الله عليه وسلم ثم يسأل حاجته ثم يختم بالصلاة على النبي صلى الله عليه وسلم فإن الله عز وجل يقبل الصلاتين وهو أكرم من أن يدع ما بينهما.

சுலைமானுத் தாரானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அறிவிக்கிறார்கள்.
யார் தன்னுடைய தேவையை அல்லாஹ்விடம் கேட்கவேண்டுமென நாடுகிறார்களோ, அவர்கள் நபியின் மீது ஸலவாத்து ஓதுவதைக் கொண்டு ஆரம்பிக்கட்டும். பிறகு தன்னுடைய தேவையை அல்லாஹ்விடத்திலே கேட்கட்டும்.
பிறகு நபியின் மீது ஸலவாத் ஓதிய நிலையில் தன்னுடைய துஆவை முடித்துக்கொள்ளட்டும். நிச்சயமாக அல்லாஹ்வாகிறவன் இரண்டு ஸலவாத்திற்கு மத்தியில் எதை கேட்டாரோ அதை அல்லாஹ் ஏற்றுக்கொள்வான்.

ورَوى سعيد بن المسيب عن عمر بن الخطاب رضي الله عنه أنه قال : الدعاء يحجب دون السماء حتى يصلي على النبي صلى الله عليه وسلم ، فإذا جاءت الصلاة على النبي صلى الله عليه وسلم رُفع الدعاء .

சயீத் இப்னு முஸைப் அவர்கள் உமர் இப்னு கத்தாப் (ரழி) அவர்களிடமிருந்துது அறிவிப்பதாக சொல்கிறார்கள்.
அல்லாஹ்விடம கேட்கப்படக்கூடிய துஆவாகிறது எந்த துஆவில் நபியவர்களின் மீது ஸலவாத் ஓதப்படுமோ அந்த துஆ விற்க்கும் வானத்திற்கும் இடையே எந்த விதமான திறையும் இருக்காது என்பதாக சொன்னார்கள்.

عن أبي هريرة قال: " قال رسول الله (صلى الله عليه وسلم): من صلى علي في كتاب لم تزل الملائكة تستغفر له ما دام اسمي في ذلك الكتاب
معجم الأوسط للطبراني - رقم الحديث : 1873

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
யார் ஒருவர் என் பெயரை ஒரு பேப்பரில் எழுதுகிறாரோ, ஓதுகிறாரோ அந்த பேப்பரில் என்னுடைய பெயர் இருக்கும் காலமெல்லாம் மலக்குமார்கள் அந்த நபருக்காக பாவ மன்னிப்பு தேடுகிறார்கள்.
(நூல் : தப்ரானி : 1873)

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَ ذَاتَ يَوْمٍ وَالْبُشْرَى فِي وَجْهِهِ فَقُلْنَا: إِنَّا لَنَرَى الْبُشْرَى فِي وَجْهِكَ؟ فَقَالَ: إِنَّهُ أَتَانِي الْمَلَكُ فَقَالَ يَا مُحَمَّدُ إِنَّ رَبَّكَ يَقُولُ أَمَا يُرْضِيكَ أَنَّهُ لا يُصَلِّي عَلَيْكَ أَحَدٌ إِلا صَلَّيْتُ عَلَيْهِ عَشْرًا ولا يُسَلِّمُ عَلَيْكَ أَحَدٌ إِلا سَلَّمْتُ عَلَيْهِ عَشْرًا
[النسائي عن عبد الله بن أبي طلحة عن أبيه]

அப்துல்லாஹ் இப்னு அபீ தல்ஹா அவர்கள் தன்னுடைய தந்தையின் வாயிலாக அறிவிக்கிறார்கள்.
ஒரு நாள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னுடைய முகத்தில் சந்தோஷம் தெரியும் அளவிற்கு வந்தார்கள். நாங்கள் எல்லாம் சந்தோசத்திற்கு காரணம் என்னவென்று கேட்டோம். நபி ஸல்ல்லாஹு அலைஹிஸ்ஸலம் அவர்கள் சொன்னார்கள், என்னிடத்தில் வரக்கூடிய மலைக்கு வந்தார். வந்து சொன்னார் யா முஹம்மத்! யார் உங்கள் மீது ஒரு முறை ஸலவாத் சொல்லுவார்களோ அவர்கள் மீது 10 தடவை ஸலவாத் சொல்லப்பட்டே தவிர இல்லை. அதேபோன்று யார் உங்கள் மீது ஒரு முறை ஸலாம் சொல்லுவார்களோ அவர்கள் மீது 10 தடவை ஸலாம் சொல்லப்பட்டே தவிர இல்லை என்ற ஒரு செய்தியை சொன்னார்கள் அது தான் எண்ணுடை சந்தோஷத்திற்கு காரணம் என்று பதிலளித்தார்கள்.

وعن محمد بن عبد الرحمن أن رسول الله صلى الله عليه وسلم قال : ما منكم من أحد يسلم علي إذا مت إلا جاءني سلامه مع جبريل يقول يا محمد هذا فلان بن فلان يقرأ عليك السلام فأقول وعليه السلام ورحمةالله وبركاته، وروي النساءي

முஹம்மத் இப்னு அப்துர்ரஹ்மான் அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி ஸல்லலாஹு அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் சொன்னார்கள்.
நான் மரணித்த பிறகும் என் மீது யாராவது சலாம் சொன்னால், அந்த சலாமை ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் என்னிடத்தில் வந்து, யா முஹம்மத் இன்னாருடைய மகன் இன்னார் தங்கள் மீது சலாம் சொல்லியிருக்கின்றார் என்று சொல்வார்கள்.
فاقول عليه السلام ورحمه الله وبركاته நானும் அவர்கள் மீது ஸலாம் சொல்கிறேன் என்ற செய்தியை அறிவிக்கிறார்கள்.
(நூல் : நஸஈ)

عبد الله قال : قال رسول الله صلى الله عليه وسلم : إن لله ملائكة سياحين في الأرض يبلغوني من أمتي السلام . قال القشيري والتسليم قولك : سلام عليك

அப்துல்லாஹ் அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி ஸல்லலாஹு அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் சொன்னார்கள். பூமியில் 
அல்லாஹ்விற்கு என்று சில மலக்குமார்கள் சுற்றிக்கொண்டு இருப்பார்கள், என்னுடைய உம்மத்தில் யாரெல்லாம் என் மீது ஸலாம் சொல்கிறார்களோ அதை என்னிடம் வந்து சேர்பார்கள் என்ற செய்தியை அறிவிக்கிறார்கள்.

ஹதீஸ் ஷரீபில் வருகிறது. நாவினால் ஒரு முறை ஸலவாத் கூறினால், அவரின் மீது பத்து ரஹ்மத்துகளை அல்லாஹ் பொழியச் செய்கிறான். பத்து நன்மைகள் அவரின் அமல்களின் பட்டோலைகளில் எழுதப்படுகிறது. பத்து பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
ஆனால் ஒரு மனிதன் "ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்" என்று எழுதினால், ஹதீஸில் வருகிறது அந்த எழுத்து அழியாமல் இருக்கும் வரை, அதன் மீது மலக்குகள் ஸலவாத்து சொல்லிக்கொண்டேயிருப்பார்கள்.
(معجم اوسط للطبراني)
இதன் காரணமாக "ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்" என்று எழுதினால் அதை படிப்பவருடைய நன்மையும் எழுதியவருக்கு கிடைக்கும்.
எனவே எழுதுபவர் வெறும் "ஸல்" என்று சுருக்கமாக எழுதுவது கஞ்சத்தனம் ஆகும். "ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்" என்று முழுமையாக எழுதி முழு நன்மையை அடைவோம்.

சலவாத் ஓதுவோம் நபியவர்களை தர்சிப்போம்:-

பெரியார்கள் ஸலவாத் ஓதுவதினால் உலகத்தில் கிடைக்கும் பிரயோஜனங்களில் ஒன்றாக சொல்கிறார்கள்,
"யார் ஒருவர் அதிகமாக ஸலவாத்து ஓதுவாரோ, அல்லாஹு தஆலா அவருக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தரிசிக்கக்கூடிய பாக்கியத்தை கொடுக்கிறான்.
அல்லாமா ஜலாலுத்தீன் சுயூத்தி (ரஹ்) மிகப்பெரும் அறிஞர்களில் ஒருவராக இருக்கிறார்.
அவர்கள் தீன் இன்னும் துன்யா சம்பந்தப்பட்ட எல்லா கலைகளிலும் கிதாப்கள் எழுதி இருக்கிறார்கள்.
தஃப்ஸீர், ஹதீஸ், ஃபிக்ஹ், இலக்கியம், இலக்கணம், கணக்கு போன்ற எல்லா கலைகளிலும் கிதாப்கள் எழுதி உள்ளார்கள்.
தஃப்ஸீர் உடைய கலையில் மட்டும் மூன்று கிதாப்களை எழுதி இருக்கிறார்கள். அவற்றில் (مجمع البحرين) மஜ்மவுல் பஹ்ரைன் என்ற தஃப்ஸீர் மட்டும் 80 பாகங்களை உள்ளடக்கியது.
இது மட்டுமல்லாமல் ( الدر المنثور) துர்ருல் மன்தூர், ( الجلالين) ஜலாலைன் போன்ற தஃப்ஸீர்களை எழுதியுள்ளார்கள்.
நாம் இமாம் எழுதிய அனைத்து கிதாப்களை படிக்கவேண்டும் என்றால் வாழ்நாள் போதுமா? என்று தெரியவில்லை. ஆனால் இமாமவர்கள் 40 வயதிற்குள் எழுதி முடித்து விட்டார்கள். பிறகு முழுமையாக இபாதத்திற்காக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்கள்.
இமாமை பற்றி கிதாப்களில் எழுதி இருக்கிறார்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை 35 முறை விழித்திருக்கும் நிலையில் தரிசித்தார்கள்.
ஒரு மனிதர் இதை பற்றி இமாம் அவர்களிடத்தில் கேட்டார், தங்களுக்கு விழிப்பு உடைய நிலையில் 35 முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தரிசிக்கக்கூடிய பாக்கியத்தை எந்த அமலின் காரணமாக அல்லாஹ் கொடுத்தான்?. இமாம் அவர்கள் கூறினார்கள், நான் அதற்காக பிரத்யேகமாக எந்த அமலையும் செய்யவில்லை. எனினும் அல்லாஹ் என் மீது செய்த மாபெரும் கிருபை என் வாழ்நாள் முழுவதும் நடக்கும் பொழுதும், உட்காரும் பொழுதும், எழுந்திருக்கும் பொழுதும், தூங்கும் பொழுதும், விழித்திருக்கும் பொழுதும் அதிகமாக ஸலவாத்துகளை ஓதுவேன். இதன் காரணமாக கூட இருக்கலாம் அல்லாஹ் எனக்கு இந்த பாக்கியத்தை கொடுத்திருக்கலாம்.

சிறுமியின் சலாவாத்தும் அதனால் ஏற்ப்பட்ட காராமத்தும்:-

இஸ்லாமிய பெரியார்களில் ஒருவரான செய்யதுனா இமாம் சுலைமானுல் ஜசூலி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) (இவர்கள் அந்த காலத்தில் வாழ்ந்த குத்பு மற்றும் இவர்கள் ஷாசுலி தரிக்காவை சேர்ந்தவர்கள்)


அவர்கள் ஒரு இடத்துக்கு சென்று கொண்டு இருந்தார்கள். அப்பொழுது தொழுகையின் நேரம் வந்து விட்டது. அப்பொழுது அவர்கள் வுழு செய்ய தண்ணீர் எங்காவது கிடைக்குமா? என்று சுற்றும் முற்றும் தேடி பார்த்தார்கள். தூரத்தில் ஒரு கிணறு தென்பட்டது. உடனே அக்கிணற்றின் பக்கத்தில் சென்று பார்த்த போது கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க வாளியோ, கயிறோ அங்கு இருக்கவில்ல. என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் திகைத்து நின்றார்கள்.


அப்போது அந்த வழியாக வந்த ஒரு சிறுமி "பெரியாரே! தாங்கள் யார்?" என்று கேட்டாள். அதற்கு இவர்கள் தன பெயரை கூறி வந்த விபரத்தையும் கூறினார்கள். அதுகேட்ட அந்த சிறுமி "இவ்வளவு பெரிய மகானாக நீங்கள் இருந்தும் உங்களுக்கு கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க வழித் தெரியவில்லையா?" என்று கேட்டு அந்த சிறுமி கிணற்றுக்குள் தன் எச்சிலை துப்பினாள். அவ்வளவுதான் உடனே அந்த கிணற்றில் இருந்து தண்ணீர் மள மள என்று பொங்கி வழிந்தது. உடனே இமாம் அவர்கள் சந்தோஷத்துடன் அதில் வுழு செய்து தொழுதும் முடித்தார்கள். பின்பு அந்த சிறுமியிடம் ஆச்சரியத்தோடு, "மகளே! உன்னால் எப்படி இவ்வளவு பெரிய கராமத்தை செய்ய முடிந்தது?" என்று கேட்டார்கள். அதற்கு அந்த சிறுமி, " நான் என் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அன்னவர்கள் மீது தினந்தோறும் இந்த ஸலவாத்தை ஓதி வருகிறேன். அந்த பரக்கத்தினால்தான் இந்த பாக்கியத்தை பெற்றுக்கொண்டேன்." என்று கூறினாள்.


அந்த நிமிடமே ஸலவாத்தின் மகத்துவத்தை பற்றி விளங்கிக்கொண்ட இமாம் ஜசூலி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் " தலாயிலுல் கைராத்" என்ற ஸலவாத்து கிதாபை எழுதினார்கள். இந்த கிதாபை எழுதியதன் காரணமாக அவர்களின் கப்ரிலிருந்து கஸ்தூரி மணம் வீசிக்கொண்டு இருப்பதாக ஷைக் சரூக் (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் கூறுகிறார்கள். இந்த ஸலவாத்து கிதாபை வழக்கமாக ஓதியவர்கள் சிறந்த அவ்லியாக்கள் ஆனார்கள்.


இப்படிபட்ட சிறப்பை பெற்ற இந்த கிதாபு உருவாக காரணமாய் இருந்த அந்த சங்கையான ஸலவாத் இதுதான் :


அல்லாஹும்ம ஸல்லி அலா செய்யதினா வமவ்லானா முஹம்மதின் வஅலா ஆலி செய்யதினா முஹம்மதின் ஸலாதன் தாஹிமதன் மக்பூலதன் துஅத்தி பிஹா அன்னஹுல் ஹக்குல் அலீம்.

சலவாத் சொல்லவில்லை என்றால் ஏற்படும் பாதிப்புகள்:-

அண்ணல் நபி ஸலலல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மிம்பரில் முதல் படியில் கால் வைத்து ஏறியவுடன் ஆமீன் எனக்கூறினார்கள். அடுத்து இரண்டாவது படியில் கால்வைத்து ஏறியவுடன் ஆமீன் எனக்கூறினார்கள். பின்னர் மூன்றாம் படியில் கால்வைத்து ஏறியவுடன் ஆமீன் எனக்கூறினார்கள். பிறகு தங்களின் நல்லுரையை முடித்துக்கொண்டு மிம்பரிலிருந்து கீழிறங்கினார்கள் அப்போது நாங்கள் யாரசூலல்லாஹ் இன்று நாங்கள் உங்களிடமிருந்து என்றும் செவியுறாததோர் விஷயத்தை செவியுற்றோம். என்றோம் அதற்கு அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸ்ஸலம் அவர்கள் நான் முதல் படி ஏறியபோது ஹழ்ரத் ஜிப்ரயீல் அலைஹி வஸ்ஸலம் என் முன்னே தோன்றி எவர் ரமழான் மாதத்தை அடைந்தும் தனது பாவங்களுக்கு அல்லாஹ்வின் மன்னிப்பை பெறவில்லையோ அவர்கள் நசமாகட்டும் என்றார்கள். அதற்கு நான் ஆமீன் கூறினேன். இரண்டாம் படியில் நான் ஏறியபோது தங்களின் பெயர் கூறப்பெற்று அதை செவியுற்றும் தங்களின் மீது சலவாத் கூறத மனிதன் நாசமாகட்டும் என்றார்கள். அதற்கு நான் ஆமீன் கூறினேன். நான் மூன்றாம் படியில் ஏறியபோது எவர் வயோதிகமுற்ற தனது பெற்றோர்களில் இருவரையும் அல்லது ஒருவரை பெற்றிந்தும் அவர்கள் அவனை சுணத்தில் நுழையவைக்கவில்லையோ அவன் நாசமாகட்டும் என்றார்கள் நான் ஆமீன் கூறினேன். என்று விபரம் கூறினார்கள். அறிவிப்பாளர் கஅஃப் இப்னு உஜ்ரா ரழி அவர்கள்.
நூல் : புகாரி

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டுமல்ல. அவர்கள் சம்பந்தப்பட்ட அனைத்தையும் அல்லாஹ் சிறப்பு படுத்திருக்கிறான். அவர்கள் மீது ஸலவாத் ஓதும் நாவுகளையும் சிறப்பு படுத்தத்தான்,  தானும், மலக்குகளும், நாயகத்தின் மீது சலவாத் செல்வதாகவும் நீங்களும் ஸலவாத் ஓதுங்கள் என்று கட்டளையிட்டுள்ளான் எனவே வாழ்வில் வசந்தம் வீச வசந்த காலத்தில் ஸலவாத் ஓத தொடங்குவோம்.! அண்ணலின் உயர்ந்த ஷபாஅத் பரிந்துரையை பெரும் பாக்கியத்தைப் பெறுவோம்.! உயர்வோம்.!! உன்னதம் அடைவோம்!!!

08/01/2021 ஜூம்ஆ குறிப்புகள்:- பேனுதலை கடைப்பிடிப்போம், பேரின்பத்தை பெற்றுக்கொள்வோம்

பேணுதலை கடைபிடிப்போம், பேரின்பத்தை பெற்றுகொள்வோம் أخرجه الترمذي (2442) ، وأحمد (1630) ، وابن حبان (722) عن الحسن بن علي رضي الله...