Thursday, 10 December 2020

11/12/2020 ஜூம்ஆ பயான் குறிப்புகள்:- வலிமையான ஈமானோடு


،الحمد لله الصلاه والسلام على رسول الله، اما بعد 

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِيْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ ثُمَّ لَمْ يَرْتَابُوْا وَجَاهَدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ‌  اُولٰٓٮِٕكَ هُمُ الصّٰدِقُوْنَ‏

நிச்சயமாக, (உண்மையான) முஃமின்கள் யார் என்றால், அவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், ஈமான் கொண்டு, பின்னர் (அது பற்றி அவர்கள் எத்தகைய) சந்தேகமும் கொள்ளாது, தம் செல்வங்களைக் கொண்டும், தம் உயிர்களைக் கொண்டும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்வார்கள் - இத்தகையவர்கள் தாம் உண்மையாளர்கள்.

(அல்குர்ஆன் : 49:15)

قَوْلُهُ ﷺ: يَخْرُجُ مِنَ النَّارِ مَنْ كَانَ فِي قَلْبِه

 مِثْقَالُ ذَرَّةٍ مِنْ إِيمَانٍ.

மறுமை நாளில் அல்லாஹ் கூறுவான்

யாருடைய உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கை (ஈமான்) உள்ளதோ அவரை (நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள்" என்று கூறுவான்.


"முதலில் நம்முடைய ஈமானின் நிலையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்"

தொழுகையிலும் சரி, அல்லாஹ்வின் திருமறையை ஓதுவதிலும் சரி, சஹாபாக்கள்  உணர்ந்த சுவையையும் லயிப்பையும் நாம் எப்போதாவது  உணர்ந்த்திருக்கின்றோமா? நம்மில் மிக குறைவானவர்கள் சில நேரத்தில்  உணர்ந்திருக்கலாம். ஆனால், காணாதவர்கள் தான் அதிகம்

 நாம் தொழுகின்றோம், நோன்பு நோற்கின்றோம், தானம் செய்கின்றோம், ஹஜ்  செல்கின்றோம் , சஹாபாக்கள் செய்த எல்லா இபாதத்களிலும் ஈடுபடுகின்றோம்.  ஆனால், அவர்களது இபாதத்துகளில் காணப்பட்ட ஈரத்தை, பசுமையை நாம்  காண்பதில்லை.

 நாம் குடும்ப வாழ்கை மேற்கொள்கிறோம். கொடுக்கல் வாங்கல்களில்  ஈடுபடுகின்றோம். சமூக உறவுகளில் ஈடுபடுகின்றோம். ஆனால், இவற்றை  செயல்படுத்துகின்ற போது சஹாபாக்களில் காணப்பட்ட ஈமானின் அழகையும் நேர்மையையும்  நம்மிடம் காண முடியவில்லை.

ஹழ்ரத் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் தனது மாணவர்களைப் பார்த்துள் கூறினார்கள்:  சஹாபாக்களை விடவும் நீங்கள் அதிகமாக தொழுகையில் ஈடுபடுகின்றீர்கள், நோன்பு  நோர்கின்றீர்கள், ஆனால் அவர்கள் உங்களை விட சிறந்து காணப்பட்டார்கள்.  காரணத்தை வினவியபோது, அவர்கள் உங்களை விடவும் உலகில் பற்றற்றவர்களாக  இருந்தார்கள். உங்களை விடவும் மறுமையில் ஆசை வைத்தவர்களாக, ஈமானில் உறுதியாக  இருந்தார்கள்  என்றார்கள்.

 செய்யிதுனா அபூபக்கர்(ரலி) அவர்களைப் பற்றி சில தாபியீன்கள் கூறுகின்றபொழுது, அபூ  பக்கர்(ரலி) அவர்கள் அதிகமாக தொழுகையாலும் நோன்பாலும் எங்களை  மிகைக்கவில்லை. மாறாக அவரது உள்ளத்தில் ஆழப் பதிந்த ஈமானால்தான் எங்களை  மிகைதிருந்தார்கள் என்றனர்.

எனவே புறச் செயல்களில் பெரிய வேறுபாடு காணப்படாவிட்டாலும் அகச் செயல்களில்  வேறுபாடு இருந்திருக்கிறது. அவர்கள் இபாதத்தையும் சரி குடும்ப வாழ்கையையும்  சரி சமூக வாழ்கையையும் வியாபாரத்திலும் சரி சுவைத்துச்  செய்துருக்கிரார்கள். அதில் ஈமானின் அழகும் நேர்மையும் பிரதிபலித்திருகிறது…

 அன்பானவர்களே இங்கே நம்முடைய நிலையை அலசி பார்க்க வேண்டும்…


"உறுதியான ஈமானால் பல நற்பேறுகள் பெற்ற ஒரே குடும்பம்"

இணை வைப்பாளர்களுக்கு இடையில் ஏகத்துவப் பிரச்சாரம் துவக்கப்படாத அந்நாளில் ஏகத்துவத்தின் மகிமையை உணர்ந்த யாஸிர்ரழியல்லாஹு அன்ஹு,சுமைய்யாரழியல்லாஹு அன்ஹா தம்பதியினர் இஸ்லாத்தில் இணைந்தனர். இஸ்லாத்தில் இணைந்தவர்களில் ஆறாவது நபர் சுமைய்யாரழியல்லாஹு அன்ஹா ஆவார்.

குரைஷிகள் இஸ்லாத்தில் இணைந்தோரை துன்புறுத்தினர் சித்தரவதையின் உச்ச கட்டமாக அம்மாரின் தாயார் சுமையாரழியல்லாஹு அன்ஹா அபூஜஹலால் மர்மஸ்தானத்தில் ஈட்டியால் குத்திக் கொல்லப்பட்டு இஸ்லாத்தில் முதல் ஷஹீதான பெண் என்ற பெருமையடைந்தார். அது போலவே யாஸிர்ரழியல்லாஹு அன்ஹு அவர்களும். இணைவைப்பாளர்களால் இரக்கமின்றி கொல்லப்பட்டு ஷஹீதானார்கள்.

வீரத்தாயின் மகனான பெற்றோரின் தியாக மரணத்திற்குப் பின் அம்மார் ரழியல்லாஹு அன்ஹு ஏகத்துவக் கொள்கையை இதயத்தில் ஏந்தியவராக இணைவைப்பாளர்களின் எதிர்ப்பை மனத்துணிவுடன் சந்திக்கிறார். சுடு மணலில் ஆடையின்றி கிடத்தப்பட்ட அம்மார்ரழியல்லாஹு அன்ஹு ஈமானிய உறுதியுடன் திகழ்வதைக் கண்டு திடுக்குற்ற அபூஜஹ்ல் சித்ரவதைகளை அதிகரித்து இணைவைக்கும்படி கூறுகிறான். மறுக்கிறார் அம்மார் ரழியல்லாஹு அன்ஹு.

தண்ணீரில் தலையை முக்கி மூர்ச்சையாக்கின்றனர் இணைவைப்பாளர்களால் உயிர் போகும் அந்நிலையில் அம்மார்ரழியல்லாஹு அன்ஹு அவர்களை நபிகளாரின் ஏகத்துவக் கொள்கையை இகழ்ந்துரைக்க ஏவுகின்றனர். அவ்வாறே செய்கின்றார் அம்மார் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள். விட்டு விடுகின்றனர்.

அழுதவாறு நபிகளாரிடம் வந்த அம்மார்ரழியல்லாஹு அன்ஹு நான் இணைவைப்பு வார்த்தைகளை கூறிவிட்டேன் எனக் கூற அப்போது எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது) – அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர – (எனவே அவர் மீது குற்றமில்லை) ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்) எவருடைய நெஞ்சம் கு.ப்ரைக்கொண்டு விரிவாகி இருக்கிறதோ – இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு. (16:106) என்ற வசனம் இறங்கியது.


"இப்ராஹிம் நபிக்கு கொடுத்த அதே சோபனம்"

அம்மார் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை ஈமானை ஏற்றத்தற்காக தீயிலிட்டு பொசுக்குவார்கள். அப்பொழுது நபி இப்ராஹிம்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு நெருப்பை குளிரச் செய்தது போல் இவருக்கும் குளிரச் செய் என நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்துஆ செய்தார்கள் என்று அம்ரு இப்னு மைமூன்ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள்.

அம்மார் (ரலி) அவர்களை பகைத்தவர் அல்லாஹவை பகைத்தவர்

அம்மாரின் ஈமானிய உறுதி இறைநம்பிக்கை அவரின் எலும்புகளுக்குள்ளும் ஊடுறுவியுள்ளது.

( قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : (مُلِئَ عَمَّارٌ إِيمَانًا إِلَى مُشَاشِهِ) .

وصححه الألباني في " صحيح ابن ماجة)

 யார் அம்மாருடன் பகை கொள்கிறாரோ அவர் அல்லாஹ்வுடன் பகை கொள்கிறார் என்ற நபி மொழியைச் செவியுற்ற காலித் பின் வலீத் ரழியல்லாஹு அன்ஹு அம்மார்ரழியல்லாஹு அன்ஹுஅவர்களுடன் இருந்த மனப் பிணக்கை நீக்கி சமாதானம் செய்து கொண்டார்கள்..


"சுவனத்தில் தங்கும் குடும்பம்"

) عَنْ جَابِرٍ: " أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِعَمَّارٍ وَأَهْلِهِ وَهُمْ يُعَذَّبُونَ ، فَقَالَ : ( أَبْشِرُوا آلَ عَمَّارٍ، وَآلَ يَاسِرٍ، فَإِنَّ مَوْعِدَكُمُ الْجَنَّةُ) 

நபியவர்கள்  ஒரு தடவை ஹழ்ரத் யாசிர் (ரலி) அவர்களின் குடும்பத்தாரை கடந்து செல்ல நேரிட்ட போது அவர்கள் குஃப்பர்களால் ஈமானுக்காக ஈமானை ஏற்றதர்க்காக வேதனை செய்யபடுவதை கண்ணுற்ற போது இவ்வாறு சொன்னார்கள்.

"யாசிரின் குடும்பத்தாரே, அம்மாரின் குடும்பத்தாரே நிச்சயமாக நீங்கள் சுவனத்தில் வசிப்பீர்கள் என்று சுபசோபனம்  சொன்னார்கள்."


"நபியின் நாவால் ஷைத்தானின் தீங்கை விட்டு பாதுகாப்பு பெற்றவர்"

وى البخاري (3287) عَنْ عَلْقَمَةَ ، قَالَ : " قَدِمْتُ الشَّأْمَ ، فَقُلْتُ: مَنْ هَا هُنَا ؟ ، قَالُوا أَبُو الدَّرْدَاءِ ، قَالَ : أَفِيكُمُ الَّذِي أَجَارَهُ اللَّهُ مِنَ الشَّيْطَانِ عَلَى لِسَانِ نَبِيِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ؟ - يَعْنِي عَمَّارًا " .

அல்கமா இப்னு கைஸ் அந் நகஈ(ரஹ்) அறிவித்தார்கள்;

நான் ஷாம் நாட்டிற்குச் சென்றேன். பள்ளிவாசலில் நுழைந்(து இரண்டு ரக்அத்கள் தொழு)ததும் ‘இறைவா! எனக்கு ஒரு நல்ல நண்பரை ஏற்படுத்துவாயாக” என்று பிராத்தித்தேன். பிறகு அபுதர்தா(ரலி) அவர்களிடம் (சென்று) அமர்ந்தேன். அபுத்தர்தா(ரலி) ‘நீங்கள் எந்த ஊர்க்காரர் ?’ என்று கேட்டார்கள். அதற்கு நான் ‘கூஃபா வாசி’ என்றேன். அபுத்தர்தா(ரலி) ‘(நபி – ஸல் – அவர்கள் அறிவித்த) வேறெவருக்கும் தெரியாத (நயவஞ்சகர்கள் தொடர்பான) இரகசியங்களை அறிந்தவர் உங்களிடையே இல்லையா?’ என்று ஹுதைஃபா(ரலி) அவர்களைத் கருத்தில் கொண்டு கேட்டார்கள். நான், ‘ஆம் (இருக்கிறார்)” என்று பதிலளித்தேன். அவர்கள், ‘தன் நபியின் வாயால் எவரை ஷைத்தானிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றினானோ அவர் உங்களிடையே இல்லையா?’ என்று கேட்டார்… அம்மார்(ரலி) அவர்களைக் கருத்தில் கொண்டே இப்படிக் கூறினார்கள். நான் ‘ஆம் (இருக்கிறார்)” என்று பதிலளித்தேன். அவர்கள், ‘நபி(ஸல்) அவர்களின் (பல்துலக்கும்) மிஸ்வாக் குச்சியையும், தலையணையையும் சுமந்து சென்றவர்… அல்லது அவர்களின் அந்தரங்க உதவியாளர்.. (இப்னு மஸ்வூத்) உங்களிடம் இல்லையா?’ என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘ஆம் (இருக்கிறார்)” என்று பதிலளித்தேன்.

[ஹதீஸ் சுருக்கம் புஹாரி எண் 3743 ]

இத்தகைய சிறப்பு வாய்ந்த அம்மார்[ரலி] அவர்கள், இஸ்லாத்திற்காக முதன்முதலாக உயிர்த்தியாகம் செய்த சுமைய்யா[ரலி], யாசிர்[ரலி] ஆகியோரின் அருமை மகன் என்பது நாமறிந்த செய்திதான்.

புனிதமிக்க மஸ்ஜிதுன் நபவியின் கட்டுமனான பணியில் அதிகம் உடலுழைப்பு செய்த அந்த வேளையில் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் கூறினார்கள்.

فروى البخاري (2812) عن أبي سعيد قال : " كُنَّا نَنْقُلُ لَبِنَ المَسْجِدِ لَبِنَةً لَبِنَةً ، وَكَانَ عَمَّارٌ يَنْقُلُ لَبِنَتَيْنِ لَبِنَتَيْنِ ، فَمَرَّ بِهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، وَمَسَحَ عَنْ رَأْسِهِ الغُبَارَ ، وَقَالَ : ( وَيْحَ عَمَّارٍ تَقْتُلُهُ الفِئَةُ البَاغِيَةُ ، عَمَّارٌ يَدْعُوهُمْ إِلَى اللَّهِ، وَيَدْعُونَهُ إِلَى النَّارِ) .

 அபூ ஸயீத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

 ‘நாங்கள் ஒவ்வொரு செங்கல்லாகச் சுமப்பவர்களாக இருந்தோம். (ஆனால்) அம்மார்(ரலி) இரண்டிரண்டு செங்கற்களாகச் சுமக்கலானார். அதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அவரின் மேனியில் படிந்த மண்ணைத் தட்டிவிட்டு ‘பாவம் அம்மார்! இவரை அக்கிரமக்காரக் கூட்டம் கொலை செய்யும்! இவர் அவர்களைச் சுவர்க்கத்திற்கு அழைப்பார். அவர்களோ இவரை நரகத்திற்கு அழைப்பார்கள்.” என்று கூறினார்கள். அதற்கு அம்மார்(ரலி) ‘அந்தக் குழப்பங்களைவிட்டும் அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்’ என்று கூறினார்கள்

ஆதாரம்;புஹாரி எண் 447

தான் கொல்லப்படுவோம் என்பதை இறைத்தூதர்[ஸல்] அவர்களின் வாயால் செவிமடுத்த அம்மார்[ரலி] அவர்கள், நம்மை போன்ற பலவீனமானமானவராக இருந்தால், உயிர்மீது ஆசையுடையவராக இருந்தால் அவர் இஸ்லாத்தை விட்டே விரண்டோடியிருப்பார். அம்மார்[ரலி] அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. தான் கொல்லப்படப்போகும் நாளை எண்ணி கண்ணீர் விட்டு கொண்டிருக்கவில்லை. மாறாக, அத்தகைய குழப்பத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன் என்று கூறுகிறார்கள் என்றால், அவர்கள் உள்ளத்தில் எந்த அளவு ஈமானின் வலிமை நிரம்பியுள்ளது என்பதை விளங்கிக்கொள்ளலாம். அந்த உறுதியான ஈமான் அவர்களுக்கு ஷஹீத் எனும் அந்தஸ்த்தையும், சுவனத்தில் உயர்ந்த படித்தரத்தையும் பெற்றுத்தந்துள்ளது.

ஈமானுக்காக இவர்களின் குடும்பம் செய்த தியாகம் இஸ்லாமிய வரலாற்றில் முதல் மைல் கல் என்று சொன்னால் மிகையாகாது.

ஈமானிய பலஹீனம்,ஈமானிய சோர்வு, எதுவுமே இல்லாமல் ஈமானுக்காக எந்த அளவிற்கும் வேதனையை சகித்துக்கொண்டு, ஈமானின் ருசியை அடைந்த உத்தமர்கள்.

நம் ஈமானின் நிலை இன்று துன்யாவின் அற்ப சுகத்திற்காக முழுமையாக அடகு வைக்க பட்டு ஷைதானின் கோர பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருக்கிறது.


"ஈமானுக்காக இவ்வுலக சுகம் அனைத்தையும் இழந்த மிக பெரிய பணக்காரர்"

مصعب بن عمير ممن اشترى الآخرة بالدنيا، وترك النعيم الذي كان يتمتع به في الدنيا ليحظى بنعيم الآخرة. فقد كان أحسن شباب مكة لباساً وأطيبهم رائحة وأنعمهم جسماً

புத்தம் புது ஆடைகள், வனப்பான வாழ்வு, எழில் மிகு கேசம், அடுத்த தெரு வரை நீளும் அத்தர் வாசம் என கொகுசு வாழ்க்கையின் கொழுந்தாக விளங்கியவர்கள் முஸ்அப் இப்னு உமைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.

மக்காவில் மிக அழகிய இளைஞர்களில் ஒருவர் அவர். நல்ல வசீகரத் தோற்றம். செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்த கொழுந்து. வறுமையென்றால், "கிலோ என்ன விலை?” என்ற அளவிற்கு சொகுசும் ஆடம்பரமும் வசதியுமாய் அமைந்த வாழ்க்கை. குணாஸ் பின்த் மாலிக் என்பவர் அவரின் தாயார். கரடுமுரடான சுபாவம்; மக்களைப் பயமுறுத்தும் அளவிற்கு 'அகன்ற வாய்'. ஆனால் மகன் மீது அளவற்ற பாசம். "அனுபவிடா மகனே! என் செல்லம்!” என்று தங்குதடையில்லாமல் சுகபோகத்தில் மகனைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். விலையுயர்ந்த ஆடைகள், சிறந்த கால்நடைகள், வேளா வேளைக்கு அருமையான உணவு, மிகச் சிறந்த நறுமணப் பொருட்கள் என்று எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி செல்வ சுகத்தில் திளைத்துக் கொண்டிருந்தார் மகன். முஸ்அப் கடந்து சென்ற தெருவில் நுழைபவர், "ஹும்! முஸ்அப் இப்னு உமைர் இந்தத் தெருவில் உலாத்திவிட்டுப் போயிருக்கிறார் போலிருக்கிறதே” என்று எளிதாய் மோப்பமிட்டுச் சொல்லிவிடுமளவிற்கு அவர் பூசிக்கொள்ளும் நறுமணம் மிதந்து கொண்டிருக்கும்.

சுருக்கமாய் இக்கால உவமை சொல்வதென்றால், பணக்கார வீட்டின் உல்லாசப் பிள்ளைகள் என்று நெற்றியில் எழுதி ஒட்டிக்கொள்ளாத குறையாய் 'லேட்டஸ்ட் ஸ்டைலின்' அத்தனை அம்சங்களையும் சுமந்து கொண்டு மக்காவில் வலம் வந்து கொண்டிருந்தார் முஸ்அப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.

ஆனால் இஸ்லாத்தை ஏற்ற பின்னர் அவர்கள் ஈமானுக்காக சகித்த கொடுமைகள், விட்டுக்கொடுத்த உலக செல்வங்கள் ,உதரிதள்ளிய உலக வாழ்க்கை.

உலக வாழ்க்கையே கதி என கிடக்கும் நமது ஈமானுக்கு ஒரு மிகப்பெரிய பாடம்.


"முஸஅப் ரலி அவர்களின் ஈமானின் அடையாளத்தை கண்டு நபியவர்கள் சிந்திய  கண்ணீர்"

عن علي بن أبي طالب رضي الله عنه قال "إنا لجلوس مع رسول الله صلى الله عليه وسلم في المسجد، إذ طلع علينا مصعب بن عمير وما عليه إلا بردة مرقومة بفرو، فلما رآه رسول الله صلى الله عليه وسلم بكى للذي كان فيه من النعمة والذي هو فيه اليوم

ஒருநாள் தோழர்கள் சூழ அமர்ந்திருந்தார்கள் நபியவர்கள். அங்கு வந்தார்கள் முஸ்அப் (ரலி) அவரைக் கண்டதுமே தோழர்களின் தலை கவிழ்ந்தது.

பலர் கண்களில் கண்ணீர் வேறொன்றுமிலலை, கோலம்! முஸ்அபின் அலங்கோலம்!

நவநாகரீக ஆடைகள் பூண்டு, திரியும் தெருவெல்லாம் நறுமணம் பரப்பிச் சென்ற முஸ்அப், வறுமையின் இலக்கணமாய்க் கிழிந்து தொங்கிய மோசமான ஆடையுடன் நின்றிருந்தார். அவரை அன்புடன் ஆதுரவாய் நோக்கிய நபியவர்களின் கண்களிலும் கண்ணீர், "மக்காவில் முஸ்அபைப் போன்று பெற்றோரால் சீராட்டி வளர்க்கப்பெற்ற இளைஞனை யாரும் கண்டிருக்க மாட்டார்கள். இப்பொழுது அவர் அனைத்தையும் அல்லாஹ்விற்காகவும் அவனது நபிக்காகவும் உதறித்தள்ளி விட்டு நிற்கிறார்" என்று சொன்னார்கள்.

மக்காவின் செல்வந்தருக்கு கப்ரில் கஃபன் துணி போதவில்லை

مصعب بن عمير قتل يوم أحد فلم نجد شيئاً نكفنه فيه إلا نمرة، كنا إذا غطينا بها رأسه خرجت رجلاه، فإذا غطينا رجليه خرج رأسه، فأمرنا رسول الله - صلى الله عليه وسلم - أن نعطي رأسه بها، ونجعل على رجليه إذخرا، ومنا من أينعت له ثمرته فهو يهذبها- يجنيها- انتهى.

உஹது போர் முடிந்து, அனைத்துக் களேபரங்களும் முடிந்தபின் வீழ்ந்து கிடந்த தம் தோழர்களின் உடல்களை பார்வையிட்டுக் கொண்டே வந்தார்கள் நபியவர்கள். அக்களத்தில் குரைஷிப் பெண்கள் நிகழ்த்திய கோரத் தாண்டவமும் நாம் ஏற்கெனவே படித்ததுதான். தாங்கவியலாத சோகக் காட்சி அது. இறந்த தோழர்களைக் கண்டு முஹம்மது நபி பகர்ந்தார்கள், "மறுமையில் நீங்களெல்லாம் வீரத் தியாகிகள் என்பதற்கு அல்லாஹ்வின் தூதர் சாட்சி பகர்கிறார்"

இறந்தவர்களை அக்களத்திலேயே நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றன. முஸ்அபின் உடலை முழுவதுமாய்ப் போர்த்தக் கூடிய அளவிற்குக்கூட அவரது உடலில் துணி இல்லை. அதுவும் கிழிந்துபோன கம்பளித் துணி. தலையை மூடினால் கால் மூடவில்லை. காலை மூடினால் தலை மூடவில்லை.

செல்வச் செழிப்பிலும் சுக போகத்திலும் மிதந்து கொண்டிருந்த ஓர் இளைஞர், தாய், தகப்பன், சொத்து, சுகம் என அனைத்தையும் உதறி எறிந்துவிட்டு ஏக இறைவனைத் துதித்து வாழப் புகலிடம் ஒன்று கிடைத்தால் போதும் என்று கடல் கடந்து ஓடிய முஹாஜிர், யத்ரிப் மணலில் இஸ்லாமிய விதையைத் தூவி வீடுதோறும் இஸ்லாமிய விருட்சம் வளர்ந்தோங்க வைத்து மதீனத்து வரலாற்றிற்கு வித்திட்டவர், இறைவனும் அவனது தூதரும் மட்டுமே போதுமென்று நெய்யுண்டு, பட்டுடுத்தி, ஜவ்வாது பூசித் திளைத்த அங்கங்களையெல்லாம் துண்டு துண்டாய் இழந்து விட்டு, துண்டு துணியுடன் மடிந்து கிடந்தார் முஸ்அப் இப்னு உமைர் - ரலியல்லாஹு அன்ஹு.

இறுதியில் நபியவர்கள் கூறினார்கள், "அவரது தலையைத் துணியால் மூடிவிட்டு கால்களை இலைகள் கொண்டு மூடிவிடுங்கள்"

முஸ்அப் இப்னு உமைரின் வீர மரணத்தை நினைத்து மறுமையில் தமக்கு எந்தப் பங்கும் கிடைக்காமல் போய்விடுமோ என்று பயத்தில் நடுங்கி அழுவார் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி). ஒருமுறை அவர் நோன்பு திறக்க அவருடைய பணியாள் உணவு எடுத்து வந்தார். அதைக் கண்டு திடீரென்று பொங்கி அழுதார் இப்னு அவ்ஃப். "முஸ்அப் இப்னு உமைர் இஸ்லாத்தை ஏற்றபின் இவ்வுலகில் எவ்வித சொகுசையோ, நல்ல உணவையோ சுவைக்காமல் அனைத்தையும் மறுமைக்கு சேமித்து எடுத்துச் சென்றுவிட்டார். நமக்கு எல்லாம் இவ்வுலகிலேயே கிடைக்கிறதே மறுமையில் நம் பங்கு கிடைக்காமற் போய்விடுமோ" என்ற அச்சத்தில் விளைந்த அழுகை அது. கிளர்ந்தெழுந்த துக்கத்தில் அன்று அவர் அந்த உணவைக்கூட உண்ணவில்லை.

இப்படி பயந்து அழுதது யார்? சொர்க்கவாசி என்று திருநபி (ஸல்) அவர்களால் நன்மாராயம் வழங்கப்பெற்ற பத்துபேருள் ஒருவர். நம் கண்களெல்லாம் எந்த நம்பி்க்கையில் ஈரம் உலர்ந்து கிடக்கின்றன?

ஈமானின் சுவையை ருசித்த அவர்களுக்கு மறு உலக ருசியை அல்லாஹ் உலகத்திலே சுவைக்க செய்துவிட்டான்.


_ஈமானால் என்ன சாதிக்க இயலும்_

"மரண நேரத்தில் அல்லாஹ் கொடுத்த உணவு"

والله ما رأيت أسيرا قط خيرا من خبيب والله لقد وجدته يوما يأكل من قطف عنب في يده وإنه لموثق في الحديد وما بمكة من ثمر وكانت تقول إنه لرزق من الله رزقه خبيبا

(البخاري: 3045)

 குபைப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை கொன்று விடவேண்டுமென முடிவெடுத்து நேரமது. திராட்சை கொத்திலிருந்து குபைப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பழங்களை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்நாளில் மக்காவில் எந்தப் பழமுமில்லை. ஆகவே, அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய உணவு தான் அது. நேரில் பார்த்த ஹாரிஃதாவின் மகள் இதைக் கூறினார்கள்.


"கடும் இருட்டில் ஈமானால் ஏற்பட்ட ஒளி"

عن أنس بن مالك أن رجلين من أصحاب النبي صلى الله عليه وسلم خرجا من عند النبي صلى الله عليه وسلم في ليلة مظلمة ومعهما مثل المصباحين يضيئان بين أيديهما فلما افترقا صار مع كل واحد منهما واحد حتى أتى أهله

இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடமிருந்து உசைது இப்னு ஹுழைர், மற்றவரின் பெயர் அப்பாது இப்னு பிஷ்ர் (ரலியல்லாஹு அன்ஹு  இரு தோழர்களும் விடைபெற்று சென்றனர். அப்போது கும்மிருட்டுள்ள இரவு நேரமாகயிருந்தது. அவர்கள் செல்லும்போது அவர்களுக்கு முன்பாக இரு விளக்குகள் போல ஒளி கொடுத்துக் கொண்டிருந்தது. அவ்விருவரும் தத்தமது

வீட்டிற்கு செல்வதற்காக பிரிந்து நேரத்தில் ஆளுக்கொரு விளக்கு அவர்கள் வீடு செல்கின்றவரை

வெளிச்சம் கொடுத்தது.

 அறிவிப்பாளர்: அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

நூல்: புகாரீ ஹதீஸ் எண் 3639


"பல மைலுக்கு அப்பால் ஒலித்த ஈமானின் குரல்"

🌹 எல்லைதாண்டிய பார்வை🌹

 عن ابن عمر أن عمر بعث جيشا وأمر عليهم رجلا يدعى سارية فبينما عمر رضي الله عنه يخطب يصيح ياساري الجبل فقدم رسول من الجيش فقال يا أمير المؤمنين لقينا عدونا فهزمونا فإذا صائح يصيح ياساري الجبل فاسندنا ظهورنا إلى الجبل فهزمهم الله

 திண்ணமாக உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஒரு படையை அனுப்பி வைத்தார்கள். சாரியா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை அப்படைக்கு தளபதியாக நியமித்தார்கள். (மதீனாவில்) சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் யா சாரியா அல் ஜபல் (சாரியாவே! மலையை கவனித்து சண்டையிடுங்கள்!) என சப்தமிட்டார்கள்.

பிறகு படையிலிருந்து ஒரு தூதர் வந்து சொன்னார். அமீருல் முஃமினீன் அவர்களே! எங்கள் எதிரிகளோடு நாங்கள் போர் புரிந்தபோது அவர்கள் எங்களை விரட்டியடித்தார்கள். அப்போது *யா சாரியா அல்ஜபல்* என்று ஒரு சத்தம் கேட்டது. பின்னர் மலையை எங்களுக்கு பின்புறமாக ஆக்கிக் கொண்டு போர் செய்தோம். அல்லாஹ் அவர்களை விரட்டி விட்டான்.

மதீனாவின் மிம்பரில் கொடுத்த குரல் ,பாரசீக மண்ணில் கர்ஜித்தது என்றால் ஈமானின் வலிமை அவ்வாறு.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்

நூல் : பைஹகீ (தலாயிலுந் நுபுவ்வா) ஹதீஸ் எண் 2655.

யுத்தம் நடைபெற்ற இடம் பாரசீகம். உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் சொற்பொழிவு ஆற்றியது மதீனா மாநகரம்.

நாம் இன்று உலக ருசியில் மூழ்கி கிடப்பதினால் ஈமானின் சுவை தெரியாமல் இருக்கிறது.

ஸஹாபாக்களை போல நாம் ஈமானுக்காக நம் குடும்பம், பொருளாதாரம், சமூகம் என அத்தனையும் இழந்து ஈமானை காக்க வேண்டும் என்ற சூழல் இப்போது இல்லை.

நாம் நம் ஈமானை உறுதியான ஈமானாக,ஆக்குவதற்கு அல்லாஹ்வின் கடமைகளையும்,நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையையும் நம்மில் படி,படியாக கொண்டு வந்து அதை நம் கப்ர் வரை எடுத்து சென்றாலே நம் ஈமான் பலமிக்க ஈமான் ..

அல்லாஹ் நம் அனைவரையும் பலமிக்க ஈமான்தாரிகளாக வாழசெய்வானாக..

நம் கடைசி பேச்சும்,மூச்சும் ஈமானோடு பிரிவதற்கு அல்லாஹ் தவ்பீக் செய்வானாக.


ஆமீன்..

No comments:

Post a Comment

08/01/2021 ஜூம்ஆ குறிப்புகள்:- பேனுதலை கடைப்பிடிப்போம், பேரின்பத்தை பெற்றுக்கொள்வோம்

பேணுதலை கடைபிடிப்போம், பேரின்பத்தை பெற்றுகொள்வோம் أخرجه الترمذي (2442) ، وأحمد (1630) ، وابن حبان (722) عن الحسن بن علي رضي الله...