அர்ஷோடு இணைந்திருக்கும் சொந்தம்
وصلة الرحم في سنة النبي صلى الله عليه وسلم أمر واجب، وقاطعها آثم؛ فعن عائشة -رضي الله عنها- قالت: قال رسول الله صلى الله عليه وسلم: "الرحم معلقة بالعرش تقول: من وصلني وصله الله، ومن قطعني قطعه الله" _இரத்த உறவு (சொந்தம்)அர்ஷில் கொழுகப் பட்டுள்ளது. அது யார் என்னைச் சேர்ந்து நடக்கிறானோ அல்லாஹ் அவனைச் சேர்ந்து கொள்வான். யார் என்னைத் துண்டித்து நடக்கின்றானோ, அல்லாஹ் அவனைத் துண்டித்து விடுவான்” எனக் கூறும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்._ அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி) ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.
ரிஜ்க்கும்,ஆயுலும் அதிகரிக்க
وبيَّنن النبي صلى الله عليه وسلم أن صلة الرحم من أسباب طول العمر وزيادة الرزق، فقال: "من سرَّه أن يُبْسط له في رزقه، وأن يُنسأ له في أثره (يؤخر له في عمره) فليصل رحمه" _“யார் தனக்கு ரிஜ்கில் விஸ்தீரணத்தையும் நீண்ட ஆயுளையும் விரும்புகின்றாரோ அவர் அவர் இரத்த உறவைப் (சொந்த பந்துகளை) பேணிக்கொள்ளட்டும்._ அறிவிப்பவர் : அனஸ்(ரலி) ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.
அமல்கள் ஏற்றுக்கொள்ளப்பட
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ( إِنَّ أَعْمَالَ بَنِي آدَمَ تُعْرَضُ كُلَّ خَمِيسٍ لَيْلَةَ الْجُمُعَةِ فَلَا يُقْبَلُ عَمَلُ قَاطِعِ رَحِمٍ ) رواه أحمد في " مسنده " ( 16 / 191) ஆதமுடைய மக்களின் நல்லமல்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை வெள்ளி இரவில் எடுத்துக்காட்டப்படுகின்றன. இரத்த உறவைத் துண்டித்து வாழ்ந்தவரின் நல்லமல்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. (முஸ்னத் அஹ்மத் – 10272)
நபியவர்களின் பண்புகளில் சொந்தங்களை பேணுதல்
நபித்துவம் கொடுக்கப்படுவதற்கு முன்பு நபிகளாரின் குணங்களில் ஒன்று உறவுகளை அரவணைப்பது நபி (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வஹீ வந்தபோது பயந்தவர்களாக கதீஜா (ரலி) அவர்களிடம் வந்த போது ஆறுதல் வார்த்தையாக சொல்லும்போது கூறிய வார்த்தை ஞாபகம் கொள்ள வேண்டும். فَقَالَ زَمِّلُونِي زَمِّلُونِي فَزَمَّلُوهُ حَتَّى ذَهَبَ عَنْهُ الرَّوْعُ فَقَالَ لِخَدِيجَةَ وَأَخْبَرَهَا الْخَبَرَ لَقَدْ خَشِيتُ عَلَى نَفْسِي فَقَالَتْ خَدِيجَةُ كَلَّا وَاللَّهِ مَا يُخْزِيكَ اللَّهُ أَبَدًا إِنَّكَ لَتَصِلُ الرَّحِمَ وَتَحْمِلُ الْكَلَّ وَتَكْسِبُ الْمَعْدُومَ وَتَقْرِي الضَّيْفَ وَتُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقِّ (அச்சத்தால்) இதயம் படபடக்க அந்த வசனங்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியர்) கதீஜா பின்த் குவைலித் (ரலி) அவர்களிடம் வந்து எனக்குப் போர்த்திவிடுங்கள் எனக்குப் போர்த்திவிடுங்கள் என்றார்கள். அவ்வாறே அன்னை அவர்கள் நபி அவர்களுக்குப் போர்த்திட அச்சம் அவர்களைவிட்டு அகன்றது. பின்னர் கதீஜாவிடம் நடந்தவற்றை தெரிவித்துவிட்டு எனக்கேதும் நேர்ந்துவிடுமோ என நான் அஞ்சுகிறேன் என்று சொன்னார்கள். அதற்கு கதீஜா (ரலி) அவர்கள் அப்படியொன்றும் ஆகாது. அல்லாஹ்வின் மீதாணையாக உங்களை
அல்லாஹ் ஒருபோதும் இழிவுபடுத்தமாட்டான். (ஏனெனில்) தாங்கள் உறவுகளைச் சேர்ந்து வாழ்ந்துவருகிறீர்கள்
(சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கிறீர்கள்; வறியவர்களுக்காகப் பாடுபடுகிறீர்கள்;விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; சத்திய சோதனையில் ஆட்பட்டோருக்கு உதவி செய்கிறீர்கள் (அதனால் நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை)” என்று (ஆறுதல்) சொன்னார்கள் நூல் : புகாரீ இன்னொரு விஷயம் உறவினர்களை சேர்த்து வாழ்பவர்களை அல்லாஹ் கேவலப்படுத்த மாட்டான் என்பது இந்த சம்பவம் மூலம் உறுதியாகிறது..
இஸ்லாத்தின் ஆரம்ப நேரத்தில் மக்களுக்கு தீனை எத்தி வைக்கும்போது நபி அவர்களின் உபதேசங்களில்
நபி (ஸல்) அவர்கள் நபித்துவம் கொடுத்து அனுப்பப்பட்டதும் சொந்தபந்தங்களை அரவணைக்க வேண்டும், அவர்களோடு ஒட்டி உறவாட வேண்டும் என்பதைத்தான் மக்களுக்கு மத்தியில் பிரச்சாரம் செய்தார்கள் قَالَ مَاذَا يَأْمُرُكُمْ قُلْتُ يَقُولُ اعْبُدُوا اللَّهَ وَحْدَهُ ، وَلاَ تُشْرِكُوا بِهِ شَيْئًا وَاتْرُكُوا مَا يَقُولُ آبَاؤُكُمْ وَيَأْمُرُنَا بِالصَّلاَةِ وَالصِّدْقِ وَالْعَفَافِ وَالصِّلَةِ . அபீசீனியாவில் ஹிர்கல் மன்னர் தன்னுடைய நாட்டிற்கு வந்த முஸ்லிம்களிடம் நபிகளாரின் நபித்துவத்தைப் பற்றியும்,அவர்களின் பிரச்சாரத்தைப் பற்றியும் கேட்கும்போது, அவர் உங்களுக்கு என்ன செய்யும்படி கட்டளையிடுகிறார்? என்று கேட்டார். அதற்கு முஸ்லிம்கள் அல்லாஹ் ஒருவனையே வழிபடுங்கள். அவனுக்கு எதனையும் யாரையும் இணையாக்காதீர்கள். உங்கள் மூதாதையர் சொல்லிவருகின்ற (அறியாமைக்கால) கூற்றுகளையெல்லாம் விட்டுவிடுங்கள் என்று கூறுகின்றார். தொழுகையை நிறைவேற்றும்படியும்,ஸகாத் கொடுக்கும்படியும், உண்மை பேசும்படியும்,தன்மானத்துடன் வாழும் படியும்,
உறவுகளைப் பேணி வாழும் படியும்
எங்களுக்கு அவர் கட்டளையிடுகின்றார் என்று சொன்னேன் என அபு சுஃப்யான் அவர்கள் கூறினார்கள். நூல் : புகாரி.
நபி அவர்களை நாம் உறவு முறைகளில் எந்த ரோல்மாடலில் எடுத்து கொண்டாலும் அத்தனையிலும் அவர்களை அழகான வழிகாட்டியாகவே நாம் பெற்றுக்கொள்வோம்.
நபியவர்கள் ஒரு சம்மந்தியாக எப்படி நடந்து கொண்டார்கள்.
மருமகனார் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தாயார் பாத்திமா பிந்த் அஸத் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள்தான் நபியவர்களுக்கு சின்னம்மா முறையும் சம்மந்தி முறையும் கூட... நபியவர்களை அவர்களின் குடும்பத்தில் எல்லா உறவு முறையில் உள்ளவர்களும் நபியை தந்தையாக, கணவராக, மாமனாராக, பார்த்ததை விட அவர்களை நபியாக, ரஸூலாக பார்த்த தருணங்களே அதிகம். அப்படி இருந்தும் கூட நபியவர்கள் சொந்த பந்தங்களை பேணி பாதுகாத்த முறை அவர்கள் அனைத்திலும் ஓரு உன்னத முன்மாதிரி என்பதற்கு சான்று.. பாத்திமா பிந்த் அஸத் ரலியல்லாஹு அன்ஹா ஹிஜ்ரத்துக்கு முன்னர் இஸ்லாத்தை ஏற்று மதீனாவுக்கு ஹிஜ்ரத் பயணமும் மேற் கொண்டு அங்கேயே மரணமடைந்தார்கள். கஃபன் துணிக்கு நபியவர்கள் தமது முபாரக்கான சட்டையால் போர்த்தி நபி(ஸல்)அவர்கள் ஜன்னத்துல் பகீயில் நல்லடக்கம் செய்தார்கள். பெருமானார்(ஸல்) அவர்கள் கப்ரில் இறங்கி அடக்கம் செய்த ஐவரில் இவர்களும் ஒருவர். (ஆதாரம்: உஸ்துல் காபத்) இங்கே நமக்கு இது செய்தியாக இருக்கலாம். ஆனால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அலி (ரலி) அன்ஹு அவர்களின் மாமனாராக தன் சம்மந்திக்கு செய்ய வேண்டிய ஹக்கை செய்தார்கள். தன்னிடம் இருந்த முபாரக்கான ஆடையை கொடுத்து சம்மந்தியை கண்ணியபடுத்தினார்கள். எத்தனையோ ஸஹாபாக்கள் நபியின் துணி என் கஃபனாக இருக்க வேண்டுமே என்ற ஆவல் கொண்டார்கள்.. அவர்களுக்கு கிடைக்காத பாக்கியம் அலி (ரலி) அவர்களின் தாயார் பாத்திமா பிந்த் அஸத் ரலியல்லாஹு அன்ஹா அவர்ககுக்கு கிடைத்தது. நபியே தொழ வைத்து ,நபியே கப்ரில் இறங்கி தன் முபாரக்கான கரங்களால் நல்லடக்கம் செய்தார்கள். நபியவர்கள் தன் உரிமையை சம்மந்தியாக மிக சரியாக நிறைவேற்றினார்கள். *மிஸ்ர் நாட்டுடன் நபிக்கு இருந்த உறவு* இஸ்லாம் என்பது விசாலமான மார்க்கம் ஆகும். அதை போன்று உறவினர்களை அனுசரிப்பதில், அந்த உறவை பாதுகாப்பதில் விசாலமான இடத்தை இஸ்லாம் கொடுக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் வந்த உறவுகளை அல்ல, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட உறவுக்கும் முக்கியத்துவம் கொடுக்க சொல்கிறது. عن أبي ذر. قال: قال رسول الله صلى الله عليه وسلم “إنكم ستفتحون مصر. وهي أرض يسمى فيها القيراط. فإذا فتحتموها فأحسنوا إلى أهلها. فإن لهم ذمة ورحما” أو قال “ذمة وصهرا. فإذا رأيت رجلين يختصمان فيها في موضع لبنة، فاخرج منها” قال: فرأيت عبدالرحمن بن شرحبيل بن حسنة وأخاه ربيعة، يختصمان في موضع لبنة، فخرجت منها.(رواه مسلم ٢٥٤٣) அபூதர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், "நீங்கள் விரைவில் மிஸ்ர் தேசத்தை வெற்றிக் கொள்வீர்கள். அது கீராத் என்று சொல்லப்படக்கூடிய (வஸ்து உள்ள) பூமியாகும். அதை வெற்றிக் கொண்டால், அந்த மக்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக அவர்களுக்கு ஒப்பந்தம் இன்னும் உறவு இருக்கிறது". (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன வார்த்தை சொன்னார்கள் என்பதை அறிவிப்பாளர் மறந்து விட்டார்) அல்லது ஒப்பந்தம் இன்னும் பந்தம் இருக்கிறது என்றார்கள். மேலும் ஒரு செங்கல் அளவுள்ள இடத்திற்கு இரு மனிதர்கள் சண்டையிட்டுக் கொள்வதை நீ கண்டால், மிஸ்ர் நாட்டை விட்டும் வெளியேறி விடு என்றார்கள். (அறிவிப்பாளர்) சொல்கிறார்கள், நான் ஷுரஹ்பீல் இப்னு ஹஸனா இன்னும் அவருடைய சகோதரர் ரபீஆ இருவரும் ஒரு செங்கல் அளவுள்ள இடத்திற்கு சண்டையிட்டுக் கொண்டார்கள். எனவே அதில் (மிஸ்ரில்) இருந்து வெளியேறிவிட்டேன். (நூல்:முஸ்லிம் 2543) மிஸ்ர் நாட்டில் நபிக்கு என்ன உறவு இருந்ததென்றால், ஒன்று ஹாஜரா (அலை) அவர்களின் மூலமாக. அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்களின் பாட்டனார் இஸ்மாயீல் (அலை) அவர்களின் தாயார் ஆவார்கள். இன்னொன்று மாரியா கிப்தியா (ரழி) அவர்கள் மூலமாக. இவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்களின் மகன் இப்ராஹீம் அவர்களின் தாயார் ஆவார். இருவரும் மிஸ்ர் நாட்டை சார்ந்தவர்கள். இந்த உறவின் காரணமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிஸ்ர் நாட்டு மக்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள சொன்னார்கள். நாம் நம்முடைய உறவுகளிடம் எப்படி நடந்து கொள்கிறோம். கண்ணை விட்டும் தூரமான உறவுகளுடன் அல்ல, கண்ணுக்கு முன் உள்ள உறவினர்களுடன் எப்படி நடந்து கொள்கிறோம்.
பாவங்கள் மன்னிக்கப்படுவதர்க்கு சிறந்த வழி
أن رجلاً أتى النبي صلى الله عليه وآله وسلم فقال: "يا رسولَ اللَّهِ إنِّي أصَبتُ ذنبًا عظيمًا، فهل لي من توبة؟ فقال: «هل لك من أم؟» قال: لا، قال: «فهل لك من خالة؟»، قال: نعم، قال: «فبرها»" (صحيح الترمذي:1904). ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து , யாரசூலல்லாஹ் நான் பெரிய பாவம் செய்து விட்டேன் எனக்கு பாவமன்னிப்பு (தவ்பாவுக்கான வழிகள்) உண்டா என்று கேட்டார். அதற்கு நபி அவர்கள், உமக்கு தாயார் இருக்கிறாரா எனக்கேட்டார்கள். அதற்கு அம்மனிதர் இல்லை என்று சொல்ல, உன் தாயோடு பிறந்த தாயின் சகோதரிகள் யாரேணும் இருக்கிரார்களா என்று கேட்டாரகள். அதற்கு அம்மனிதர் ஆம் என கூறினார். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர்களோடு நல்ல முறையில் நடந்து கொள் என கூறி அனுப்பினார்கள். பெரிய எதிர்பார்ப்போடு நாம் செய்த பாவத்திற்கு ஏதேனும் பெரிய பரிகாரமான அமல் ஒன்றையோ, அல்லது வேறு ஏதேனும் காரியத்தையோ பெற்று நாம் பாவமன்னிப்பு தேடிக்கொள்ளலாம் என்று வந்தவருக்கு, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னது உறவுகளுக்கு நல்லது செய் நல்லவிதமாக அவர்களிடம் நடந்து கொள்வதே பாவத்திற்கு மன்னிப்பு என்று உணர்த்தி அனுப்பினார்கள்.
எப்படியாயினும் உறவுகள் பேணப்பட வேண்டும்.
சஹாபா பெருமக்கள் வாழ்விலிருந்து சில
அபூபக்ர் (ரலி) அவர்களின் உறவினரான மிஸ்தஹ் என்பவர் ஆயிஷா (ரலி) அவர்களின் மீது அவதூறு கூறிய போது அபூபக்ர் (ரலி) அவர்கள் கண்ணீர் வடித்து கடுமையான துன்பத்திற்கு ஆளானார்கள். உர்வா பின் ஸுபைர் (ரலி) அவர்கள் கூறுவதாவது (என் தந்தை) அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீதாணையாக ஆயிஷா குறித்து (அவதூறு) கூறிய பின்பு, ஒரு போதும் நான் மிஸ்தஹுக்காக எதையும் செலவிட மாட்டேன் என்று (சத்தியமிட்டுக்) கூறினார்கள். மிஸ்தஹ் தம் உறவினர் என்பதால் அவருக்காக அபூபக்ர் (ரலி) அவர்கள் செலவிட்டு வந்தார்கள். அப்போது அல்லாஹ் உங்களில் செல்வம் மட்டும் தயாள குணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கு (எதுவும்) கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம் எனும் (24 : 22 ஆவது) வசனத்தை அருளினான். அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆம் அல்லாஹ்வின் மீதாணையாக அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன் என்று கூறிவிட்டு மிஸ்தஹ் அவர்களுக்கு ஏற்கனவே தான் செலவிட்டு வந்ததைத் தொடரலானார்கள். மேலும் அல்லாஹ்வின் மீதாணையாக அவருக்கு(ச் செய்யும் இந்த உதவியை) ஒரு போதும் நான் நிறுத்த மாட்டேன் என்றும் கூறினார்கள். நூல் : புகாரி (6679) மனவலி, வருத்தம் சில கோபங்கள் இருந்த போதிலும் அல்லாஹ்வின் மன்னிப்பு கிடைக்கும் சொந்தங்களை அந்நேரத்திலும் அரவனைத்தே வாழ்ந்தார்கள் பெருமக்கள்.
இணைவைப்பாளராக இருந்தாலும் உறவைப் பேண ஆசை கொண்டவர்கள்
979 – وَقَالَ اللَّيْثُ : حَدَّثَنِي هِشَامٌ ، عَنْ عُرْوَةَ عَنْ أَسْمَاءَ قَالَتْ قَدِمَتْ أُمِّي وَهْيَ مُشْرِكَةٌ فِي عَهْدِ قُرَيْشٍ وَمُدَّتِهِمْ إِذْ عَاهَدُوا النَّبِيَّ صلى الله عليه وسلم مَعَ أَبِيهَا فَاسْتَفْتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقُلْتُ إِنَّ أُمِّي قَدِمَتْ وَهْيَ رَاغِبَةٌ { أَفَأَصِلُهَا } قَالَ نَعَمْ صِلِي أُمَّكِ அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுடன் குறைஷியர் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டிருந்த காலத்தில் இணைவைப்பவராக இருந்த என் தாயார் தம் தந்தையுடன் (என்னைப் பார்க்க) வந்தார். நான், “என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார்; நான் அவருடன் உறவு கொண்டாடலாமா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “ஆம். நீ உன் தாயின் உறவைப் பேணி நடந்துகொள்” என்று சொன்னார்கள். நூல் : புகாரீ 5979 *இரண்டு கூலிக்குரியவர்* 1466- حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ ، حَدَّثَنَا أَبِي ، حَدَّثَنَا الأَعْمَشُ ، قَالَ : حَدَّثَنِي شَقِيقٌ ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ عَنْ زَيْنَبَ امْرَأَةِ عَبْدِ اللهِ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، قَالَ : فَذَكَرْتُهُ لإِبْرَاهِيمَ فَحَدَّثَنِي إِبْرَاهِيمُ ، عَنْ أَبِي عُبَيْدَةَ ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ عَنْ زَيْنَبَ امْرَأَةِ عَبْدِ اللهِ بِمِثْلِهِ سَوَاءً قَالَتْ كُنْتُ فِي الْمَسْجِدِ فَرَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ تَصَدَّقْنَ وَلَوْ مِنْ حُلِيِّكُنَّ وَكَانَتْ زَيْنَبُ تُنْفِقُ عَلَى عَبْدِ اللهِ وَأَيْتَامٍ فِي حَجْرِهَا قَالَ فَقَالَتْ لِعَبْدِ اللهِ سَلْ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم أَيَجْزِي عَنِّي أَنْ أُنْفِقَ عَلَيْكَ ، وَعَلَى أَيْتَامِي فِي حَجْرِي مِنَ الصَّدَقَةِ فَقَالَ سَلِي أَنْتِ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم فَانْطَلَقْتُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَوَجَدْتُ امْرَأَةً مِنَ الأَنْصَارِ عَلَى الْبَابِ حَاجَتُهَا مِثْلُ حَاجَتِي فَمَرَّ عَلَيْنَا بِلاَلٌ فَقُلْنَا سَلِ النَّبِيَّ صلى الله عليه وسلم أَيَجْزِي عَنِّي أَنْ أُنْفِقَ عَلَى زَوْجِي وَأَيْتَامٍ لِي فِي حَجْرِي وَقُلْنَا لاَ تُخْبِرْ بِنَا فَدَخَلَ فَسَأَلَهُ فَقَالَ مَنْ هُمَا قَالَ زَيْنَبُ قَالَ أَيُّ الزَّيَانِبِ قَالَ امْرَأَةُ عَبْدِ اللهِ ، قَالَ : نَعَمْ لَهَا أَجْرَانِ أَجْرُ الْقَرَابَةِ وَأَجْرُ الصَّدَقَةِ அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் மனைவி ஸைனப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் பள்ளிவாசலில் இருந்தபோது நபி(ஸல்) அவாகள், “பெண்களே! உங்களின் ஆபரணங்களிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்” எனக் கூறினார்கள். நான் என் (கணவர்) அப்துல்லாஹ் (ரலி) அவர்களுக்கும் மற்றும் என் அரவணைப்பில் உள்ள அநாதைகளுக்கும் செலவழிப்பவளாக இருந்தேன். எனவே என் கணவரிடம், நான் உங்களுக்காகவும் எனது அரவணைப்பில் வளரும் அநாதைகளுக்காகவும் எனது பொருளைச் செலவழிப்பது ஸதகாவாகுமா என நபி(ஸல்) அவர்களிடம் கேட்டு வாருங்கள் எனக் கூறினேன். அப்துல்லாஹ் (ரலி-) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரிடம் நீயே கேள்’ எனக் கூறிவிட்டார். எனவே நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் வீட்டுவாயிலில் ஓர் அன்ஸாரிப் பெண் இருந்தார். அவரது நோக்கமும் எனது நோக்கமாகவே இருந்தது. அப்போது எங்களிடையே பிலால்(ரலி) வந்தார். அவரிடம் நான் எனது கணவருக்கும் எனது பராமரிப்பில் உள்ள அநாதைகளுக்கும் நான் செலவழிப்பது தர்மமாகுமா? என நபி(ஸல்) அவர்களிடம் கேளுங்கள்; நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டாம் எனக் கூறினோம். உடனே அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று கேட்டபோது நபி (ஸல்) அவர்கள், “அவ்விருவரும் யார்?எனக் கேட்டதற்கு அவர் “ஸைனப்’ எனக் கூறினார். நபி (ஸல்) அவர்கள் “எந்த ஸைனப்?” எனக் கேட்டதும் பிலால் (ரலி)அவர்கள் “அப்துல்லாஹ்வின் மனைவி’ எனக் கூறினார். உடனே நபி (ஸல்) “ஆம்! ஸைனபுக்கு இரு நன்மைகளுண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்ததற்குரியது; மற்றொன்று தர்மத்திற்குரியது” எனக் கூறினார்கள். நூல் : புகாரீ 1466 *உறவை முறித்து வாழ கூடாது.* உறவை முறித்து வாழ்பவனை அல்லாஹ்வும் முறித்தே வாழ்கிறான். الرَّحِمُ شِجْنَةٌ فَمَنْ وَصَلَهَا وَصَلْتُهُ ، وَمَنْ قَطَعَهَا قَطَعْتُهُ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உறவு (இறையருளின்) ஒரு கிளையாகும். ஆகவே, “அதனுடன் யார் ஒட்டி வாழ்கின்றாரோ அவருடன் நானும் உறவு பாராட்டுவேன். அதை யார் முறித்துக் கொள்கிறாரோ அவரை நானும் முறித்துக் கொள்வேன்” (என்று உறவைப் படைத்தபோது இறைவன் சொன்னான்). அறிவிப்பவர் :ஆயிஷா (ரலி) நூல் : புகாரீ 5989 *உறவை முறித்தால் சுவனம் நுழைய தடை* لاَ يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعٌ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான். அறிவிப்பவர் :ஜுபைர் பின் முத்இம் (ரலி) நூல் : புகாரீ ஆக முஃமினான நல்லடியர்களே நாம் இவுலகத்தில் அல்லாஹ்வின் அன்பை பெறவும், மறு உலகில் சுவனம் எனும் பெரும் பாக்கியத்தை பெறுவதற்கு மிக சுலபமான வழிகளில் ஒன்று நம் உறவுகளிடத்தில் நல்ல முறையில் நடந்து கொள்வதே. நபியவர்கள் சொன்னார்கள். يا أيُّها النَّاس، أفشُوا السَّلام، وأطعِموا الطَّعام، وصِلوا الأرحامَ، وصَلُّوا باللَّيل والنَّاسُ نيام، تدخلوا الجنَّةَ بسَلام. சாந்தியுடன் சுவனம் நுழைய சொந்தங்களோடு சேர்ந்து வாழ்வோமாக.. அல்லாஹ் நம் அனைவரையும் சொந்தங்கலோடு இணைந்து வாழ கிருபை செய்வானாக.. ஆமீன்..