الحمد لله، الحمد لله رب العالمين، والصلاه والسلام على رسوله المرسلين، وعلى اله واصحابه اجمعين، اما بعد، فقال الله تعالى في القران العظيم، والقران المجيد، اعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم
أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ
يَحْزَنُونَ () الَّذِينَ آَمَنُوا وَكَانُوا يَتَّقُونَ () لَهُمُ الْبُشْرَى فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآَخِرَةِ لَا تَبْدِيلَ لِكَلِمَاتِ اللَّهِ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ ()
روى أبو نُعيم في كتابه "حلية الأولياء" (7 /285) عن سفيان بن عيينة أنه قال:
"عند ذكر الصالحين تنزلُ الرحمة".
"நல்லோர்களை நினைவு கூறும் இடத்தில் அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்குகிறது"
வலிமார்கள் என்பவர்கள் அல்லாஹ்வாலக்கள் அல்லாஹ் அவர்களை குறித்து தன் திருமறையில் أولياء என்று கூறுகிறான்.
ஒவ்வொரு சாராருக்கும் வெவ்வேறு அந்தஸ்துகளும், தகுதிகளும் இருப்பதை அல்லாஹ் தன் திருமறையில் குறிப்பிட்டு காட்டுகிறான்.
நபிமார்கள், ஷுஹதாக்கள், முத்தகீன்கள், சித்தீக்கீன்கள்,சாலிஹீன்கள் என பட்டியல் நீளும்.
அந்த வரிசையில் இவர்களை أولياء என அல்லாஹ் கூறுகிறான்.
வலிமார்கள் என்பவர்கள் நம்மை போல் உள்ளத்தில் எல்லாவற்றையும் வைத்து அல்லாஹ்வை வைப்பவர்கள் அல்ல..
அல்லாஹ்வை மட்டும் உள்ளத்தில் நிரப்பி மற்ற வஸ்துக்களை உள்ளத்தில் இல்லாமலே ஆக்கி கொள்பவர்களே வலிமார்கள் என்ற இறைநேசர்கள்.
அல்லாஹ்வில் ஆரம்பித்து அல்லாஹ்விலே முடிப்பார்கள் தங்கள் வாழ்கையை.
தீனின் மிக முக்கியமான அம்சமான ஆன்மீகத்தின் அடிப்படையில் செய்லபடுபவர்களே வலிமார்கள்..
ஆம் தீனின் மூன்றாவது அம்சமே ஆன்மீகம்.
ஈமான், இஸ்லாம் என்று கற்றுக்கொடுத்த ஜிப்ரயீல் இஹ்ஸான் என்ற ஆன்மீக தன்மையை ஏன் சொல்லி கொடுக்க வேண்டும்..
அதுவும் தீனின் அடிப்படைகளில் ஒன்றுதான் என்பதை உணர்த்தி சென்றார்கள்..
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: என் தந்தை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்:
நாங்கள் ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அருகில் இருந்தபோது தூய வெண்ணிற ஆடை அணிந்த, அடர் கறுப்பு நிறத்தில் தலைமுடி உடைய ஒரு மனிதர் வந்தார்.
பயணத்தில் வந்த எந்த அடையாளமும் அவரிடம் காணப்படவில்லை;எங்களில் எவருக்கும் அவரை (யார் என)த் தெரிய வில்லை. அவர் நபி (ஸல்) அவர்களின் அருகில் (சென்று), தம் முழங்கால்களை நபியவர்களின் முழங்கால்களோடு இணைத்துக்கொண்டு (நெருக்கமாக) அமர்ந்தார்.
அவர் தம் கைகளைத் தம் தொடைகள்மீது வைத்(து பவ்வியமாக அமர்ந்)தார்.
பிறகு முஹம்மதே! இஸ்லாம் என்றால் என்னவென்று எனக்குத் தெரிவியுங்கள்" என்று கேட்டார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
இஸ்லாம் என்பது, அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் என்றும் நீங்கள் உறுதி கூறுவதாகும். மேலும்,தொழுகையைக் கடைப்பிடிப்பதும், ஸகாத்தை வழங்கிவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும், சென்றுவர இயன்றால் இறையில்லம் கஅபாவில் ஹஜ்" செய்வதும் ஆகும்" என்று பதிலளித்தார்கள். அதற்கு அந்த மனிதர் உண்மைதான்" என்றார்.
அவர் இவ்வாறு கூறியதைக் கேட்டு, அவரே கேள்வியும் கேட்டுவிட்டு அவரே நபி (ஸல்) அவர்கள் அளித்த பதிலை உறுதிப்படுத்தவும் செய்கிறாரே என்று நாங்கள் வியப்படைந்தோம்.
அடுத்து அவர், ஈமான் (இறைநம்பிக்கை) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்" என்று கூறினார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள்,அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் இறுதி நாளையும் நீங்கள் நம்புவதாகும்; நன்மை, தீமை அனைத்தும் விதியின்படியே நடக்கின்றன என்றும் நீங்கள் நம்புவதுமாகும்" என்று கூறினார்கள். அதற்கும் அம்மனிதர் உண்மைதான்" என்றார்.
அடுத்து அம்மனிதர்,இஹ்சான் (அழகிய முறையில் செயலாற்றல்) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்" என்றார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள்,
(இஹ்சான் என்பது,) அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வுடன் வழிபடுவதாகும். ஏனெனில், அவனை நீங்கள் பார்க்கவில்லை என்றாலும், அவன் உங்களைப் பார்க்கின்றான்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸின் கடைசியில் நபி அவர்கள் கூறிய வார்த்தை
"அவர்தாம் (வானவர்) ஜிப்ரீல். உங்களுக்கு உங்களது மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காக உங்களிடம் அவர் வந்தார்" என்று சொன்னார்கள்."
நன்றாக நாம் உணர வேண்டும்.
ஈமான் இஸ்லாம் மட்டும் அல்ல இஹ்ஸான் என்ற ஆன்மீகமும் தீன்தான் என்றாகள் நபி அவர்கள்.
ஈமான், இஸ்லாமோடு மனதை தூய்மை படுத்தி கொள்ளும் இந்த தஸவ்வுப் இஹ்ஸான் என்ற ஆன்மீக நிலையை தனக்குள் ஆக்கி கொண்டவர்களே வலிமார்கள்..
அதனால் அவர்கள் இந்த உலகில் அல்லாஹ்வின் உதவியால் எதையும் நிறைவேற்றும் ஆற்றல் பெற்றவர்களாக விளங்கினார்கள்...
லட்ச கணக்கில் மக்கள் இஸ்லாத்தை தழுவினார்கள்,
ஆயிரகணக்கில் தீயோர் நல்லோர்களானர்.
தீனை விட்டு விலகி உலக மாயையில் இருந்தோர் இவர்களின் பார்வையிலும், பேச்சிலும் நடைத்தையிலும் முழு தீன் தாரிகளானார்கள்..
ஆம் ,எப்படி தீய பார்வைக்கு மரணம் வரை தீங்கு இருக்குமோ நபியவர்கள் சொலிகாட்டினார்களே "கண் திருஷ்டி உங்களை மரணம் வரை கொண்டு சேர்க்கும்" என்பதாக ,
அதே போல் அல்லாஹ் அல்லாஹ் என்று தங்கள் வாழ்க்கை முழுதும் ஆக்கி கொண்டவர்களின் பார்வைக்கும் ,பேச்சிற்கும் தீனை உயிர்பிக்கும் ஆற்றலை அல்லாஹ் கொடுத்திருந்தான்..
"வலிமார்கள் யார்"
ஒரு முறை ஸஹாபாக்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே அவ்லியாக்கள் என்பவர்கள் யார்? என்று கேட்டார்கள் அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
"யாரை நீங்கள் பார்க்கும் போது இறைவனின் ஞாபகம் வருகின்றதோ அவர்கள் தான் அல்லாஹ்வின் இறைநேசர்கள் ஆவார்கள்" என பதிலளித்தார்கள்.
(நூல் பஜ்ஜார்)
"வாழ்க்கையே அற்புதமாக திகழ்ந்தவர்கள் வலிமார்கள்"
"வலிமார்களை அடித்தால் அல்லாஹ் அடிப்பான்"
மஹான் துன்னூனுல்
மிஸ்ரி-ரஹ் அவர்கள்
ஒரு ஊருக்குள்
செல்கிறார்கள்..
மழை பொழிந்து
ஆங்காங்கே
தண்ணீர் தேங்கி
கிடக்கிறது....
தெரியாமல்
பள்ளத்தில்
கால் வைக்க...
எதிரில் வந்த
புது மணப்பெண் மேல்
தண்ணீர் தெறிக்கிறது...
அவள் கணவன்
மஹானை
செருப்பால்
அடித்து விடுகிறான்...
பக்கத்து தெருவிற்கு
செல்கிறார்கள்
மக்கள்
மாலையோடு
வர வேற்கிறார்கள்..
யா அல்லாஹ்!
"அங்கே செருப்படி...
இங்கே
மலர் மாலை...
உன் திருவிளையாடல் புரியவில்லையே...!" என்கிறார்கள்
தூரத்தில்
மணப்பெண்
அழுதுக் கொண்டு
ஓடி வருகிறாள்...
"எஜமானே மன்னித்து விடுங்கள்....
என் கணவர்
இறந்து போய் விட்டார்!"
என்கிறாள்
மஹான் அமைதியாக
சொன்னார்கள்..
"உன் மீதுள்ள காதலினால்
உன் கணவன்
என்னை
அடித்தான்...."
"என் மீதுள்ள
காதலினால்
என் ரப்பு
அவனை
அடித்து விட்டான்...!"
என்றார்கள்.
أخرج الإمام البخاري في صحيحه:
((قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ اللَّهَ قَالَ مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ )
"தாயின் துஆவும் ,வலி ஆன மஹானும்"
அது ஒரு
இரவு நேரம்...
பிள்ளையை
பக்கத்தில்
அமர வைத்து...
ஒரு பெண்மணி
குர்ஆன் ஓதிக் கொண்டு இருக்கிறார்...!
"திடீரென அவருக்கு
விக்கல் வருகிறது...!"
"மகனே!
தண்ணீர் என்கிறார்...!"
"வீட்டில்
தண்ணீர் இல்லை...!"
"அக்கம் பக்கம்
எல்லோரும்
உறங்கிவிட்டனர்..!"
நீண்ட தூரம் சென்று
தண்ணீர் பிடித்து வந்து
பார்த்த போது...
அந்தத்தாய் தூங்கிவிட்டார்....!"
தஹஜ்ஜத் தொழ
எழுந்தபோது...
"கையில் தண்ணீரோடு
நிற்கும் மகனை
கண்ணீரோடு
பார்க்கிறார்..!"
உடனே
"யா அல்லாஹ்!
நான் நேசிப்பது போல்...
நீயும் என் மகனை நேசிப்பாயாக..!"
என துஆச் செய்கிறார்.
பின்னர்
இறைஞானக் கல்வி கற்க மகனை அனுப்பி வைக்கிறார்...!
பல நாடுகளில்
பல ஞானிகளிடம்
கல்வி கற்று...
"மாபெரும் மஹான் ஆகிவிட்டார்கள் ..!"
தன்னுடைய ஷைக்
ஜஃபர் சாதிக்-ரஹ்
அவர்களின் உத்தரவு படி...
முப்பது
வருஷத்துக்கு பிறகு...
ஊர் திரும்புகிறார்கள். ..
எல்லோரும்
உறங்கிவிட்ட
இரவுநேரம்...
வீட்டுக்கதவை
தட்டப்போகையில்...
வீட்டுக்குள் அழுகைக் குரல்...
"யா அல்லாஹ்!
என் மகனை
உன்னிடம் ஒப்படைத்து விட்டேன்...
நீதான்
பாதுகாப்பு...!"
என
இன்னும்
தன் தாய்
தனக்காக துஆ செய்வதைக் கேட்டு...
"ஹோ.. என
சப்தமிட்டு
அழுகிறார்கள்.!"
மகனின் குரல் கேட்டு..
தட்டுத் தடுமாறி
அந்தத் தாய்
கதவை திறந்ததும்....
"தாயின் காலைப் பிடித்து
கதறி அழுகிறார்கள்.!"
"உன் நினைவால்
அழுது.. அழுது
உன்னைப் பார்க்க கூட
எனக்கு பார்வை இல்லை மகனே..!"
என அந்தத்தாயும் அழுகிறார்.
தாயின் துஆவால்
மாபெரும் குத்பாக மாறிய
அவர்கள் தான்
அபாயஜீதுல் பிஸ்தாமி-ரஹ்
ஆவார்கள்.
"இறைநேச சூட்டில் குளிரான சுடுநீர்"
அவர் ஒரு மன்னர் தன் புற வாழ்வு இன்பத்தில் உள்ள போலித்தனத்தை உணர்ந்து தன் அக வாழ்வும் மறுமை வாழ்வும் சிறக்க தன் ஞான குருநாதரை தேடி பல ஊர்களுக்கு அலைந்தும் அவர்களுக்கான ஞான குரு நாதரை கண்டாரில்லை,
அப்பொழுது பிரபலமான இறைநேசப் பெருந்தகை ஒருவர் பை அத் தருவதாக கேள்விப்பட்டு அவர்களின் இல்லம் நோக்கி சென்றார்கள் அந்த நேசர் அங்கு சென்றால் மிகப்பெரிய கூட்டமாக பலர் வரிசையாக நின்றனர்
அவர்களுடன் அந்த நேசரும் நின்றார்கள் பை அத் பெற உள்ளே செல்பவர்கள் எல்லாம் தலை தெறிக்க வெளியே ஓடு வதுமாக இருந்தார்கள்.
இறுதியாக அந்த நேசரை அழைத்தார் அந்த பெருந்தகை அந்த நேசரைப்பார்து எதற்காக வந்தீர்கள் எனக் கேட்க உங்களிடம் ஆன்மீக சீடராக இணைய என அந்த நேசர் சொல்ல சரி நான் பை அத் தருகிறேன் அதற்கு ஒரு நிபந்தனை இதோ சூடாக்கி கொண்டு இருக்கும் இந்த கொதிக்கும் நீர் நிரைந்த இந்த தொட்டியில் மூழ்கி குளித்து பின் வந்தால் நான் உங்களுக்கு பை அத் தருகிறேன் என்று சொல்ல அப்போது தான் அங்கு அடுப்பு மூட்டி எரிந்தி கொண்டு இருக்க அதில் மிகப்பெரிய தொட்டியில் நீர் நிரப்பப்பட்டு அது கொதித்து கொண்டு இருந்தது அப்போது தான் அந்த நேசருக்கு நினைவு வந்தது பை அத் பெற சென்ற அனைவரும் தலை தெறிக்க ஏன் ஓடினார்கள் என்று.
என்றாலும் அந்த நேசர் ஓடவும் இல்லை தயங்கவும் இல்லை அந்தப் பெருந்தகை கூறியது தான் தாமதம் பாய்து குதித்தார்கள் அந்தக் கொதிக்கும் சுடு தண்ணீரில் பின் மூழ்கி குளித்து எழுந்து அந்தப் பெருந்தகையிடம் பை அத் பெற்றார்கள் .
சுடு தண்ணீரில் மூழ்கிய அந்த நேசர் கூறினார்கள் அது பார்பதற்கு தான் சுடு நீராக கொதித்தது நான் அதில் குதித்து மூழ்கிய போது இறைவன் அதை குளிர்ந்த நீராக்கி விட்டான் என்று !
இந்த சோதனை ஏன் அந்த பெருந்தகை இடம் கேட்ட போது உண்மையான இறைநேசத்தின் மேல் உள்ள உள்ளக் காதல் சூடானாது அந்த கொதி நீரின் சூட்டை அனைத்து விடும் என்று கூறினார்கள்
இந்தகைய பேரு பெற்ற அந்த நேசர் தான் திருச்சி மாவட்டத்தில் அடக்கமாகி உலக மெங்கும் ஆன்மீக அரசாட்சி நடத்தும் ஹழ்ரத் தாதா தப்லே ஆலம் நத்ஹர் வலி பாதுஷா ரஹ்மதுல்லாஹி அலைஹி அன்னவர்கள் ஆவார்கள்
கொதி நீரில் குளிக்க வைத்து சோதித்த அந்த பெருந்தகை ஹழ்ரத் சையத் ஷா சைகு ஜொலூஃகி பர்வாஸ் கலந்தர் ஹுசைனி சுஹ்ஹரவர்த்தி ரஹ்மதுல்லாஹி அலைஹி அன்னவர்கள்..
"எல்லாமே அல்லாஹ்தான்"
கௌதுல் ஆலம் முஹ்யிதீன் அப்துல் காதர் ஜீலானி ( ரஹ்) அவர்களிடம் ஒரு மனிதர் கேட்டார்..
நீங்கள் இந்த அளவு அந்தஸ்தை அடையவதர்கும், அல்லாஹ்வை நெருங்குவதற்கும் உங்கள் தொழுகையா, நோன்பா நீங்கள் செய்த அபரிவிதமான அமல்களா எந்த அமல் காரணமாக
இருந்தது என கேட்டார்.
அதற்கு கௌதுல் ஆலம் அவர்கள் சொன்ன வார்த்தை
என் தொழுகையோ நோன் போ நான் செய்த அபரிவிதமான அமல்கலோ எதுவாக இருப்பினும் முதலில் நான் இந்த நிலையை அடைய காரணம் بالكرم அல்லாஹ்வின் அருள் என சொன்னார்கள்..
அவன் என்னை நாடாவிடில் நான் இந்த நிலையை அடக்கிந்திருக்க முடியாது என்றார்கள்..
ஆம், உண்மை தான் நாம் ஒரு சுப்ஹானல்லாஹ் சொல்வேண்டுமாயின் அதற்க்கும் அல்லாஹ் நாடியிருக்கனுமே..!
வலிமார்களின் நிலை இதுதான் தான் எதுவும் செய்ய வில்லை, தன்னால் எதுவும் நிகழவில்லை எல்லாமே அல்லாஹ்தான் என்பார்கள்..
அவர்களே அல்லாஹ்வாலக்கள்..
இப்படி இறை நேசர்களின் வாழ்வில் அற்புதம் வாழ்க்கை முழுவதும் நிரம்பி வழிகிறது..
நாமும் அந்த இறை நேசர்களை நேசிக்கும் நேசர்களாக ஆக்கி அருள்புரிவானாக...
அவர்களின் பெயரில் நடக்கும் அனாச்சாரங்களை விட்டும் அல்லாஹ் நம் அனைவரையும் விலக்கி, இறைநேசர்களின் உண்மையான அந்தஸ்தையும், மகிமையையும் நம் நெஞ்சில் ஏந்தி வாழக்கூடிய நன்மக்களாக வல்ல இறைவன் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக..
ஆமீன்.
No comments:
Post a Comment