பொறுமை என்ற பொற்குணம்
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ
(அல்குர்ஆன் : 2:153)
أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ◆مَنْ يَصْبِرْ يُصَبِّرْهُ اللَّهُ، وَلَمْ يُعْطَوْا عَطَاءً خَيْرًا وَأَوْسَعَ مِنَ الصَّبْرِ◆
பொறுமை மனிதனின் பண்பு
உயர்ந்தோன் அல்லாஹ் தன்னை பொறுமையாளன் என்கிறான். பொறுமையாளர்களை நேசிப்பதாகவும் அவர்களுக்கு உதவுவதாகவும் கூறுகிறான்.
قال الله تعالي :يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ 2:153
திருக்குர்ஆனில் 70 க்கும் மேற்பட்ட இடங்களில் பொறுமையை பாராட்டி கூறுகிறான்.
பொறுமையைத் தவிர வேறெந்த பண்பையும் இவ்வளவு அதிகமாக பாராட்டியதாக நாம் காண முடியவில்லை.
இன்னும் விளக்கி கூறுவதென்றால், பொறுமை மனித இனத்துக்கே உரிய சிறப்புக் குணமாகும். மேன்மைமிக்க இக்குணத்தை விலங்குகளிடமோ அல்லது வானவர்களிடமோ எதர்பார்க்க இயலாது.
ஏனெனில், விலங்குகள் இச்சைகளின் அடிப்படையில் வாழக்கூடியவை. அவற்றின் அசைவையும், போராட்டத்தையும் இச்சைகளே தீர்மானிக்கின்றன. இச்சைகளை அடக்கும் ஆற்றலை அவற்றுக்கு அல்லாஹ் தரவில்லை.
வானவர்கள் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நெருக்கத்தில் வாழ்பவர்கள். ஆசைகள் அவர்களிடத்தில் இல்லாததால் அதை கட்டுப்படுத்துதல் என்ற பேச்சே அவர்களின் விஷயத்தில் வராது.
وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ وَاصْبِرُوا إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ(46)
ஒரு டாக்ட்ர் அல்லது ஒரு வக்கீல் அல்லது ஒரு அரசியல் வாதி நம்முடன் இருந்தால் அதன் நன்மை என்ன?
அல்லாஹ் நம்முடன் இருந்தால் ? அதன் நன்மை எவ்வளவு?
அல்லாஹ்வை உடன் வைத்துக் கொள்ளும் சக்தி பொறுமைக்கு இருக்கிறது.
பொறுமை மூன்று விசயங்களை கொண்ட்து.
صبر علي الطاعات
வணங்கி வழி பட ஒரு (செயல் படும்) பொறுமை தேவை
· صير عن المعاصي
பாவம் செய்யாமல் இருக்க ஒரு (உறுதியான) பொறுமை தேவை
· صبر علي المصائب
சேதனைகளை தாங்கிக்க் கொள்ள் (நிதானம் என்ற) பொறுமை தேவை
(صبر على الطاعة) வணக்க வழிபாடுகளில் பொறுமை
எல்லா வணக்கங்களிலும் பொறுமை இருக்க வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் பொறுமை இழந்து செய்யப்படும் அவசரமான அமல்கள் வீணானதாகும் என மார்க்கம் சொல்லுகிறது.
நபி (ஸல்) அவர்கள் பள்ளிக்கு வந்தார்கள். ஒரு மனிதர் பள்ளிக்கு வந்து தொழலானார். (தொழுது முடித்ததும்) நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். நபி (ஸல்) அவர்கள் பதில் ஸலாம் கூறினார்கள். பின்பு ‘திரும்பிச் சென்று நீர் தொழுவீராக! நீர் தொழவே இல்லை’ என்று கூறினார்கள். அந்த மனிதர் முன்பு தொழுதது போலேவே மீண்டும் தொழுது விட்டு வந்து நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். ‘திரும்பிச் சென்று தொழுவீராக நீர் தொழவே இல்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறு மூன்று தடவை நடந்தது. அதன் பிறகு அந்த மனிதர்’சத்திய மார்க்கத்துடன் உங்களை அனுப்பியுள்ள இறைவன் மீது ஆணையாக! இவ்வாறு தொழுவதைத் தவிர வேறு எதையும் நான் அறிந்திருக்கவில்லை; எனவே எனக்குக் கற்றுத் தாருங்கள்’ என்று கேட்டார்.
‘நீர் தொழுகைக்காக நின்றதும் தக்பீர் கூறுவீராக! பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை ஓதுவீராக! பின்னர் நிதானமாக ருகூவு செய்வீராக! பின்னர் ருகூவிலிருந்து எழுந்து நேராக நிலைக்கு வருவீராக! பின்னர் நிதானமாக ஸஜ்தாச் செய்வீராக! ஸஜ்தாவிலிருந்து எழுந்து நிதானமாக உட்கார்வீராக! இவ்வாறே தொழுகை முழுவதும் செய்வீராக!’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி). 📚 *நூல்கள்: புகாரீ 757, முஸ்லிம் 662
_நபியவர்களின் இரவு நேரத் தொழுகையை பற்றி அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் ஹஜ்ரத் அபு சலமா ரலி அவர்கள் வினவினார்கள்._
_அதற்கு பதிலளித்த அன்னை அவர்கள்._
_அதன் அழகையும், நீளத்தையும் நீ கேட்காதே.!_
என்று ஒரே வரியில் நபியின் தொழுகையின் வர்ணனையை முடித்து விட்டார்கள்.
அவ்வளவு பொறுமையான நிலையில் நபியின் தொழுகை அமைத்துள்ளது.
நோன்பிலும் பசித்திருந்து,தாகித்திருந்து, மனோ இச்சைகளை கட்டுபடுத்தி பாவத்தை விடுவதை கொண்டு *பொறுமையோடு* இருக்கும் நோன்பிற்க்கே அதிக கூலி.
இவ்வாறே நம் எல்லா வணக்க வழிபாடுகளும் பொறுமையோடு அமைந்தால் அதுவே அமலகளின் கபூலிய்யத்துக்கு காரணமாகிவிடுகிறது.
(صبر على المعاصي) பாவம் செய்யும் சந்தர்ப்ப சூழ்நிலை ஏற்ப்பட்டும் அதில் பொறுமையோடு செயல்பட்டு அந்த பாவத்தை விட்டு தூரச்செல்வது.*
ஒரு பாவத்தை செய்ய எல்லா சூல்நிலைகளும் கைகூடி வந்த பிறகு அந்த இடத்தில் அந்த பாவத்தின் தண்டனையை பற்றி சிந்தித்தவராக அல்லாஹ்வை பயந்து, இந்த பாவத்தை செய்தால் நமக்கு இந்த உலகிலும் மறு உலகிலும் என்ன கேவலம் கிடைக்கும் என்பதை உணர்ந்து *பொறுமையோடு* சிந்தனை செய்து விலகி கொள்வது முஃமினின் உயர்வான பண்பு.
அல்லாஹ்வின் அர்ஷின் நிழலில் இருக்கும் ஏழு நபர்களில் ஒருவர்,
நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறி(ஒதுங்கிக் கொண்டவர்).
காளி இயாள் (ரஹ்) அவர்கள், இந்த ஹதீதிற்கு விளக்கம் அளிக்கும் போது, எந்த ஒரு ஆணும் அழகுள்ள நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்புவார்கள், அது இயற்கையும் கூட, அப்படிப்பட்ட பெண்களை அடைவதற்கு பல சிரமங்களை மேற்கொள்ள வேண்டிவரும். ஆனால் எந்த ஒரு சிரமமுமின்றி அப்படிப்பட்ட பெண்ணே அழைக்கும் போது, அவளிடமிருந்து ஒதுங்கிக் கொள்பவரும் அந்த ஏழு கூட்டத்தில் அடங்குவார். இதை ஒரு முழுமையான முஃமினைத்தவிர வேறு யாரும் செய்யமுடியாது. முழுமையான முஃமின் அல்லாதவர் இதை அரிய சந்தர்ப்பமாக? கருதி பொறுமையிழந்து அந்த பெண்ணுடன் இன்பம் அனுபவித்து விடுவார்.
எந்த பாவமாக இருந்தாலும்,சிறியதோ பெரியதோ அதை செய்யாமலிருக்கிற வழிகளை ஆயிரம் தடவைகள் பொறுமையோடு சிந்தித்து விலகுவதே சிறந்தது.
முஃமினிடத்தில் இருக்க வேண்டிய மிக முக்கியமான பண்பு பொறுமை.
الصبر نصف الإيمان
என்றார்கள் அருமை நபி அவர்கள்.
(صبر على المصائب) சோதனைகள் ஏற்படும் நேரம் பொறுமையை கையாளல்
உண்மையில் ஒரு முஃமினின் வாழ்வு ஒரு சோதனைக் களமே! திருமறை நிழலில் அவனது வாழ்வில் இடறுகள் வரும் என அவன் எதிர்பார்த்திருந்தால் எந்தக் கஷ்டமும் அவனை எதுவும் செய்திடல் முடியாது.
ஆனால், அதிகமானவர்களின் பொறுமையற்ற பண்புதான் பல சந்தர்ப்பங்களில் அவர்களைப் படைத்துப் போஷிக்கும் இறைவனை மறக்கவும், மறுக்கவும் செய்துவிடுகிறது.
பொறுமைப் பண்பை சிலாகித்துக் கூறுகின்றான்.
وَالَّذِينَ صَبَرُوا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِمْ [الرعد : 22]
‘அவர்கள் தமது இறைவனின் திருப்தியை நாடி பொறுமையை மேற் கொள்வார்கள்.’ (அல்குர்ஆன் : 13:22)
பொறுமைப் பண்பு மனித வாழ்வின் தடுமாற்ற நிலையிலிருந்து விடுவித்து சீரிய, நோரிய வாழ்வின் பக்கம் இட்டுச் செல்கின்ற ஓர் உயர்ந்த சாதனமாக அமைந்து காணப்படுகிறது.
மக்காவில் கஃஃபாவிற்கு அருகே படுத்திருந்த பெருமானாரிடம் தோழர்கள் கேட்டார்கள்: எதுவரை பொறுமை?
பெருமானார் சொன்னார்கள் : அவசரப் படுகிறீர்கள் , நீங்கள் இரும்புச் சீப்பால் தலை வாரப்படுவீர். மண்ணுக்குள் புதைக்கப் பட்டு தலை இரு கூறாக்கப் படும். பின்னர் அமைதி வௌம் சன்ஆ விலிருந்து ஹழரமவ்த் வரை ஆபரணம் அணிந்த பெண் தனியாக நடந்து செல்வாள் தனது ஆடுகளுக்கு ஓநாயை தவிர வேறு எதையும் அவள் பயப்பட்த் தேவையிருக்காது.
அது போலவே இடையூறுகளும் துன்பங்களயிம் நேரில் அனுபவித்த சந்தர்ப் பத்திலும் நிதானம் இழக்காமல் பொறுமை காத்தார்கள்.
நபி அய்யூப் அலை அவர்களின் பொறுமையை பற்றி நமக்கு தெரியமே..
அவர்களுக்கு ஏற்பட்ட நோயின் சோதனையின் போது அவர்கள் மேற்கண்ட பொறுமை.!
_நபி இப்ராஹீம் (அலை), நபி_ _இஸ்மாயீல் (அலை_ ) _அவர்களின் பொறுமை:_
ஹஜ்ரத் இப்ராஹீம் (அலை) அல்லாஹு தஆலா பலவழிகளில் சோதித்தான். நபியவர்கள் எல்லா சோதனைகளிலும் வெற்றியடைந்தார்கள். அதில் ஒன்று தான் பல வருடங்கள் கழித்து பெற்ற பாசமிகு மகனை அறுப்பதாக கனவு காண்கிறார்கள். இதே கனவு திரும்ப, திரும்ப வருகிறது. எவ்வித பதற்றம், திடுக்கமில்லாமல், புலம்பாமல், அல்லாஹ்வின் கட்டளை என்றெண்ணி அறுப்பதற்கு தயாராகிறார்கள். இதை தன் அருமை புதல்வன் இஸ்மாயீல் (அலை) அவர்களிடம் சொல்லும் பொழுது பதற்றமடையாமல், நீங்கள் உங்களுக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றுங்கள் என்றார்கள்.
இதை பற்றி அல்லாஹு தஆலா குர்ஆனில் கூறுவான்.
فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَىٰ فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَىٰ ۚ قَالَ يَا أَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ ۖ سَتَجِدُنِي إِن شَاءَ اللَّهُ مِنَ الصَّابِرِينَ
". பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.”(37:102)
இப்ராஹீம் (அலை), இன்னும் இஸ்மாயீல் (அலை) அவர்கள் இந்த சோதனையில் பொறுமையாக இருந்ததால், அறுப்பதற்கு ஆட்டை அனுப்பி வைத்தான். அதை கியாமத் நாள் வரக்கூடிய மக்களுக்கு ஒரு வணக்கமாக ஆக்கினான்.
நமது நபி அவர்களின் வாழ்வில் ஏற்படாத சோதனாகளா....?
அனைத்திலும் பொறுமையை கையாண்டார்கள் பொறுமை நபி..
அதுபோலவே வாழ்வின் எல்லா நிலைகளிலும் பொறுமையை மேற்கொள்வது முஃமினின் உயர்ந்த குணம்.
பொறுமையின் பிரதி பலனாக சுவனம் வேண்டுமா ? கிடைக்கும்
الجنة لمن صبر على البلاء في الدنيا قال عطاء بن أبي رباح: قال لي ابن عباس: ألا أريك امرأة من أهل الجنة قلت: بلى. قال: (هذه المرأة السوداء أتت النبي صلى الله عليه وسلم فقالت: إني أصرع وإني أتكشف فادع الله لي قال إن شئت صبرت ولك الجنة وإن شئت دعوت الله أن يعافيك فقالت أصبر فقالت إني أتكشف فادع الله لي أن لا أتكشف فدعا لها). متفق عليه. وقال سفيان بن عيينة: (لم يعط العباد أفضل من الصبر به دخلوا الجنة)
அதா இப்னு அபீ ரபாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் என்னிடம், 'சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம்; (காட்டுங்கள்)' என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதாம் அவர்.
இவர் (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'நான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி ) உடல் திறந்து கொள்கிறது. எனவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்' என்று கூறினார்கள். இந்தப் பெண்மணி, 'நான் பொறுமையாகவே இருந்துவிடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி ) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார். அவ்வாறே நபி(ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.
நூல்; புஹாரி எண் 5652
அன்பானவர்களே! நமக்கு நோய் வருமென்றால், அதற்காக மருத்துவம் செய்வோம்; அதோடு அல்லாஹ்விடம் துஆ செய்வோம். அந்த நோய் சில நாட்களில் தீர்ந்துவிடும் என்றால் பிரச்சினையில்லை. ஆனால் நோய் தீர தாமதமாகும் நிலை ஏற்பட்டால், அல்லது நோய் தீராமலேயே போய்விட்டால் அங்கே அல்லாஹ்வின் நாட்டம் என பொறுமை கொள்வதை விடுத்து, அல்லாஹ்வின் அருள்மீது நம்பிக்கையிழந்து அல்லாஹ்வின் மீதே வெறுப்புறுவதை பார்க்கிறோம்.
தான் நோயால் வாடினாலும் பரவாயில்லை தனக்கு அல்லாஹ் தந்த நோயை பொருந்திக்கொண்டு, அழகிய பொறுமையை மேற்கொண்டு சுவனத்தை பெறவே விரும்புகிறேன் என்றார்களே! அதோடு, தனது நோயின் போது கூட, தான் அறியாத நிலையில் கூட தனது ஆடை விலகிவிடக் கூடாது என விரும்பி, அதற்காக மட்டும் துஆ செய்யுமாறு அப்பெண்மணிநபியவர்களிடம் வேண்டுகிறார்களே! அதுதான் சஹாபி பெண்மணிகளின் இறையச்சத்திற்கும், பொறுமைக்கும் அடையாளம்.
சுவனத்தில் கிடைக்கும் புகழ் மாளிகை
பைத்துல் ஹம்து என்றால் என்ன
தெரியுமா?
பைத்துல் ஹம்து உங்களுக்கு உண்டா???????
"ஒரு மனிதனுடைய குழந்தை இறந்துவிடும்
பொழுது அல்லாஹ் தனனுடைய
மலக்குமார்களிடம் " நீங்கள் என்னுடைய
அடியானுடைய குழந்தையின் உயிரை
எடுத்துவிட்டீர்களா? எனக் கேட்பான்.
அதற்கு அவர்கள். "ஆம் என கூறுவார்கள்.
அல்லாஹ். " நீங்கள் அவனுடைய
இதயக்கனியை எடுத்துவிட்டீர்களா?" எனக்
கேட்பான். அதற்கு அவர்கள் "ஆம்!" எனக்
கூறுவார்கள். அல்லாஹ் கேட்பான்:
அதற்கு என்னுடைய அடிமை என்ன
கூறினான்?" அவர்கள் கூறுவார்கள்:
"அவர் உன்னை புகழ்ந்தார்.
மேலும்,
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி
ராஜிஊன்." ( நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே
உரியவர்கள் அவனிடமே திரும்பக் கூடியவர்களாக
உள்ளோம்)"
அதற்கு
அல்லாஹ், "என்னுடைய அடியானுக்குச்
சுவர்க்கத்தில் ஒரு வீடு கட்டுங்கள். அந்த
வீட்டைப் "புகழுக்குரிய வீடு" என்று
அழையுங்கள்." எனக் கூறுவதாக நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 1021 )
நம் சிறு வயது குழந்தைகள் இறந்த பின் பொறுமை காப்பதும் மகத்தான கூலியை பெற்று தரும்.
கோபம் தலைக்கு ஏறும் செயல்களின் போது கூட நபி அவர்களின் அழகிய பொறுமை
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் கிராமத்தில் வாழ்ந்தவர்கள் நாகரீகம் என்றால் என்னவென்று அறியாதவர்கள். தர்மம் கேட்கும் போது கூடக் கடுமையாக நடந்து கொள்வார்கள். ஆனால் அவர்களின் இந்நிலைக் கண்டு நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சிரித்தார்களே தவிர கண்டிக்கவில்லை.அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தடித்த விளிம்புகளைக் கொண்ட நஜ்ரான் நாட்டு சால்வையொன்றை போர்த்தியிருக்க நான் அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன்.
அப்போது அவர்களை கிராமவாசியொருவர் கண்டு அவர்களுடைய சால்வையால் அவர்களைக் கடுமையாக இழுத்தார். எந்த அளவிற்கென்றால், அவர் கடுமையாக இழுத்த காரணத்தால் சால்வை விம்பின் அடையாளம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய தோன் ஒரு பக்கத்தில் பதிந்திருப்பதைக் கண்டேன். பிறகு அந்தக் கிராமவாசி, முஹம்மதே! உங்கடமிருக்கும் இறைவனின் செல்வத்திருந்து எனக்கும் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள் என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அவர் பக்கம் திரும்பிச் சிரித்தார்கள். அவருக்குக் கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள்.
அறிவிப்பவர்: ஹழ்ரத் அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்: புகாரி 5809
இப்படி வாழ்வின் எல்லா நிலைகளிலும் பொறுமை கொள்ளும் முஃமின் உயர்ந்த அந்தஸ்திற்கு உரித்தாகிறார்.
حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ الْأَزْدِيُّ وَشَيْبَانُ بْنُ فَرُّوخَ جَمِيعًا عَنْ سُلَيْمَانَ بْنِ الْمُغِيرَةِ وَاللَّفْظُ لِشَيْبَانَ حَدَّثَنَا سُلَيْمَانُ حَدَّثَنَا ثَابِتٌ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى عَنْ صُهَيْبٍ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَجَبًا لِأَمْرِ الْمُؤْمِنِ إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ وَلَيْسَ ذَاكَ لِأَحَدٍ إِلَّا لِلْمُؤْمِنِ إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ رواه مسلم
ஒரு இறை நம்பிக்கையாளன் மகிழ்ச்சி அடைந்தால் அவன் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறான். அது அவனுக்கு கூடுதல் நன்மையாகவும் ஆகிவிடுகிறது. ஒரு துன்பம் அவனை நெருங்கும்போது *பொறுமை* யைக் கையாள்கிறான். அதுவும் அவனுக்கு நன்மையாகவே மாறிவிடுகிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
ஆக வாழ்வில் எல்லா நிலைகளிலும் பொறுமையோடு செயல்ப்பட்டு, உயர்ந்த பொறுமைசாலிகளாக ஆகுவதற்கு வல்ல இறைவன் நமக்கு தவுஃபீக் செய்வானாக..
ஆமீன்...
الحمد لله على كل حال
ReplyDeleteجزاكم الله خيرا
ماشاء الله
ReplyDeleteமாஷா அழ்ழாஹ், உங்கள் சேவைகள் தொடரட்டும்
ReplyDeleteஇடை நிறுத்தாமல் தொடர எனது பிறாத்தனைகள்
ReplyDelete