الحمد لله، الحمد لله رب العالمين، والصلاه والسلام على رسوله المرسلين، وعلى اله واصحابه اجمعين، اما بعد، فقال الله تعالى في القران العظيم، والقران المجيد، اعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم
قال الله تعالى في القرآن الكريم: ((يا أيها الناس كُلوا مما في الأرض حلالاً طيبًا ولا تتَّبعوا خُطُوات الشيطان إنه لكم عدوٌ مبين)) سورة البقرة.
و قال النبي صلى الله عليه وسلم، وعن أبي سعيدٍ الخدري أن النبي صلى الله عليه وسلم قال:((التاجر الصدُوق الأمين مع النبيين والصديقين والشهداء)) رواه الترمذي
மனிதன் தனக்கு தேவையான ஒன்று பிறரிடம் இருக்கும் போது அதை அவனிடம் கேட்கிறான். பேரம் பேசுகிறான். அதற்கு ஈடாக தன்னிடம் உள்ளதை கொடுக்கிறான். இப்படி உருவானதுதான் வியாபாரம். ஆதிகாலத்தில் பண்ட மாற்றமாக அதாவது பொருளுக்கு பொருள் என்று இருந்துவந்த வியாபாரம் காலப்போக்கில் பணத்திற்கு பொருள் என்ற வியாபார முறைக்கு மாறிவிட்டன.
பணம் இருந்தால் போதும் எதையும் வாங்கலாம் என்ற அளவுக்கு பணம் வியாபாரத்தில் முக்கியத்துவம் பெற்று விட்டன. இதனால் வியாபார முறைகளும் மாறிவிட்டன. மாறிவிட்ட வியாபார முறைக்கு ஏற்ப மனிதனும் மாற்றிக்கொள்ள முயற்சிகிறான்.
"நபிமார்களின் வியாபாரம்"
ஒவ்வொரு நபியும் வாழ்வாதாரத்திற்காக ஏதாவது ஒரு வேலையை செய்தார்கள்.
நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் விவசாயம் செய்தார்கள்.
நபி இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் தையல் வேலை செய்தார்கள்.
நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் உருக்கு சட்டை செய்து விற்றார்கள்.
எல்லா நபிமார்களும் ஆடு மேய்த்தார்கள்.நம்முடைய நபியும் ஆடு மேய்த்துள்ளார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வியாபாரமும் செய்துள்ளார்கள். எனவே தான் வியாபாரம் செய்வது வாழ்வாதாரத்தை தேடுவதற்கு மிக சிறந்த வழி என்றார்கள்.
நுபுவ்வத் கிடைப்பதற்கு முன்பு அன்னை கதீஜா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் பொருட்களை வியாபாரம் செய்வதற்கு ஷாம் தேசம் சென்றார்கள். அதில் மிகப் பெரிய இலாபம் ஈட்டினார்கள்.
அதை போன்று அப்துல்லாஹ் இப்னு ஸாயிப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடன் வியாபாரத்தில் பார்ட்னர் ஷிப் ஆக இருந்தார்கள். இதை பற்றி அப்துல்லாஹ் இப்னு ஸாயிப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள், அறியாமை காலத்தில் முஹம்மது ஸல்லல்லாஹு அவர்களுடன் வியாபார பார்ட்னராக இருந்தேன். எப்பொழுது மதீனா தய்யிபாவிற்கு வந்தேனோ, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம், என்னை தெரியுமா? என்று கேட்டார்கள். நான் சொன்னேன் ஏன் தெரியாது?! "என்னுடைய பார்ட்னர்களில் மிக சிறந்த பார்ட்னராக இருந்தீர்கள். எந்த மோசடியும் செய்யாதவர், எந்த தர்க்கம் செய்யாதவர். (முஸ்னத் அஹ்மத்)
அதே போல் ஸஹாபாக்களும், இமாம்களும், பல இறைநேசர்களும் முத்தக்கீன்களாகவும் ,இஸ்லாமிய அழைப்பாளர்களாகவும் அதே சமயம் வியாபாரம் செய்யும் நேர்மையான வியாபாரிகளாகவும் இருந்தார்கள்.
"உழைத்து உண்பதே சிறந்த செயல்"
தன்னுடைய கையால் உழைத்து சாப்பிடும் உணவு மிகவும் சிறந்தது. நபி தாவுத் (அலை) தன்னுடைய கையால் உழைத்து சாப்பிடக்கூடியவர்களாக இருந்தார்கள் என்று நபியவர்கள் கூறினார்கள். (நூல் – புஹாரி)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள். “”பிறரிடம் யாசகம் கேட்பதை விட ஒருவர் தமது முதுகில் விறகுக் கட்டைகளைச் சுமந்து விற்கச் செல்வது சிறந்தது ஆகும். அவர் யாசிக்கும் போது யாரும் கொடுக்கவும் செய்ய லாம், மறுக்கவும் செய்யலாம்” நபிமொழி செய்தி யாளர்கள் : அபூஹுரைரா(ரழி) மற்றும் ஸுபைர் பின் அவ்வாம்(ரழி), ஆதாரம்: புகாரி, ஹதீஃத் எண் : 2075, 1472
நபிகள் நாயகம் அவர்களிடம் ஓர் இளைஞர் வந்து யாசகம் கேட்டார். அவனைப் பார்த்த நபியவர்கள் ‘உன்னுடைய வீட்டில் ஏதேனும் இருக்கிறதா?’ எனக் கேட்டார்கள். ‘ஒரே ஒரு போர்வைதான் உள்ளது’ என்று அந்த இளைஞர் கூறினார். அந்த போர்வையை கொண்டு வரச் செய்த நபியவர்கள், அந்த போர்வையை ஏலம் விட்டார்கள். அந்த பணத்தைக் கொண்டு கோடாரி ஒன்றை வாங்கி அந்த இளைஞரிடம் கொடுத்துவிட்டு ‘காட்டிற்கு சென்று விறகு வெட்டிப் பிழைத்துக்கொள். யாசகம் கேட்பதைவிட அதுதான் சிறந்தது’ என்று கூறி அந்த இளைஞரை அனுப்பி வைத்தார்கள்..
இப்படி உழைத்து ,வியாபாரம் செய்து தன் ரிஸ்க்கை தேடுவது, பிறர் உழைப்பில் சாப்பிடுவதை காட்டிலும், யாசகம் செய்து உண்பதை விடவும் சிறந்தது என்கிறது நம் மார்க்கம்.
குர்ஆனில் ஏறத்தாழ 32 இடங்களில் ஜகாத் கொடுப்பதற்கு கட்டளையிடப்பட்டுள்ளது அல்லது ஆர்வமூட்டபட்டுள்ளது.
அதை போன்று 16 இடங்களில் சதகா செய்ய ஆர்வமூட்டபட்டுள்ளது, சதகா செய்பவரை புகழப்பட்டுள்ளது.
ஆனால் இதற்கு மாற்றமாக குர்ஆனில் எந்த இடத்திலும் ஜகாத் வாங்க சொல்லியோ, சதகா வாங்க சொல்லியோ வரவில்லை.
மேலும் "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். மேலிருக்கும் (கொடுக்கும்) கை, கீழிருக்கும் (வாங்கும்) கையை விட சிறந்ததது."
இதிலிருந்து ஒரு மனிதன் வியாபாரத்தின் மூலமோ, அல்லது இஸ்லாம் ஆகுமாக்கிய ஏதாவது ஒரு வழியின் மூலமாகவோ பிறருக்கு கொடுக்கும் நிலைக்கு தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று குர்ஆன் இன்னும் ஹதீஸ் வழிகாட்டுகிறது.
வாழ்வாதாரத்தை தேடுவதற்கு ஆகுமாக்கப்பட்ட பல வழிகள் இருந்தாலும்,அவற்றில் அதிக பரக்கத் உடையது வியாபாரம் செய்வதாகும்.
எனவே தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் நேர்மையான முறையில் நடக்கும் வியாபாரத்தில் அல்லாஹ்வின் உதவி உள்ளது.
அந்த வியாபாரமும், அதை செய்யும் வியாபாரியும் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்க கூடாது என்று மார்க்கம் சில வழிமுறைகளை சொல்லி சொல்லிக்கொடுக்கிறது.
அதன் படி நமது வியாபாரத்ததை அமைத்து கொண்டால் இம்மையில் பரக்கத்தோடும், மறுமையில் நல்லோர்களுடன் இருக்கவும் நம் வியாபாரம் காரணமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
"வியாபாரத்தில் ஏமாற்றுபவர் நம்மை சார்ந்தவர் இல்லை"
إِسْمَاعِيلَ بْنِ جَعْفَرٍ، قَالَ ابْنُ أَيُّوبَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: أَخْبَرَنِي الْعَلَاءُ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى صُبْرَةِ طَعَامٍ فَأَدْخَلَ يَدَهُ فِيهَا، فَنَالَتْ أَصَابِعُهُ بَلَلًا فَقَالَ: «مَا هَذَا يَا صَاحِبَ الطَّعَامِ؟» قَالَ أَصَابَتْهُ السَّمَاءُ يَا رَسُولَ اللهِ، قَالَ: «أَفَلَا جَعَلْتَهُ فَوْقَ الطَّعَامِ كَيْ يَرَاهُ النَّاسُ، مَنْ غَشَّ فَلَيْسَ مِنِّي»
நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் (சந்தையில்) ஒரு உணவு குவியலை கடந்து சென்றார்கள். அதில் தன் கையை (உள்ளே) நுழைத்த பார்த்தபோது அது ஈரமாக இருந்தது. அந்த உணவு பொருள் உரிமையாளரிடம், “ இது என்ன என்று கேட்டார்கள்” அதற்கு அவர் “ இது மழையின் காரணமாக ஈரமாகிவிட்டது அல்லாஹ்வின் தூதரே என்று சொன்னார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள் “ இதை மக்கள் பார்க்கும்படி உணவிற்கு மேலே வைத்திருக்க கூதாதா? யார் நம்மை ஏமாற்றுகிறாரோ அவர் நம்மை சார்ந்தவர் இல்லை”
ஏமாற்றும் வியாபாரிக்கு மார்க்க அங்கீகாரம் ரத்து.
"அளவை,நிறுவைகளில் மோசடி செய்பவர் நல்ல வியாபாரி இல்லை"
وَيْلٌ لِلْمُطَفِّفِينَ (1) الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ (2) وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ (3)
1.(எடையிலும், அளவிலும்) குறைவு செய்கிறவர்களுக்குக் கேடு உண்டாவதாக!
2. அவர்கள் எத்தகையோரென்றால் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக வாங்குவார்கள்.
3.ஆனால் அவர்களுக்குத் தாங்கள் அளந்து கொடுத்தாலும் அல்லது அவர்களுக்கு நிறுத்துக் கொடுத்தாலும் குறைவு செய்(து நஷ்ட முண்டாக்கு)வார்கள்.
[ سورة المطففين]
(இந்த ஆயத் மதீனா வாசிகளின் சம்பந்தமாக இறங்கிய தாகும்) அன்றைய மதீனா வாசிகளின் பொதுவான நடைமுறையாகும் அதாவது வியாபாரிகள் மக்களிடமிருந்து ஏதேனும பொருட்களை வாங்கும் பொழுது சரியாக நிறுத்து (மோசடி செய்யும் விதமாக கூடுதலாக பெற்றுக் கொள்வார்கள்) வாங்குவார்கள். ஆனால் ஏதேனும் பொருட்களை மக்களிடம் (விற்பனை செய்யும்) கொடுக்கும் பொழுது நிலுவையில் குறை செய்வார்கள் (மோசடி செய்வார்கள்) எப்பொழுது அவர்களின் சம்பந்தமாக எச்சரிக்கை செய்யும் விதமாக ஆயத் இறங்கியதோ, அப்போதே அவர்கள் தங்களுடைய தீய பழக்கவழக்கங்களை மாற்றிக்கொண்டு நியாயமான முறையில் வியாபாரம் செய்யக் கூடியவர்களாக மாறினார்கள் .இன்று வரையிலும் மதீனாவில் கொடுக்கல்-வாங்கலில் சரியாகவும் நீதமாகவும் இருக்கிறார்கள்.
(گلدستہ تفاسیر : (٧/٥٦٥)
*நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “(அளவை, நிறுவை என) இரண்டு விஷயங்களில் பொறுப்பேற்றுள்ளீர்கள். இதில்தான் உங்களுக்கு முன் இருந்த சமுதாயத்தினர் அழிந்தனர்” என்று எச்சரித்தார்கள். (இப்னு அப்பாஸ் (ரலி) – திர்மிதீ).*
நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் சொன்ன அந்த அழிந்து போன சமுதாயத்தினர் யார் தெரியுமா? ஷுஐப் நபியின் சமுதாயத்தினர். மத்தியன்வாசிகள் அதாவது தோப்புகளில் வசித்தவர்கள் என்று அழைக்கப்படும் அந்த சமுதாயத்தினர். இந்த மத்தியன்வாசிகள் அளவையிலும் நிறுவையிலும் மோசடி செய்தனர்.
இம்மக்களைத் திருத்துவதற்காக அல்லாஹ் ஷுஐப் நபியை தன் தூதராக தேர்ந்தெடுத்து அச்சமுதாயத்திற்கு அனுப்பினான். ஷுஐப் நபி அல்லாஹ் காட்டித்தந்த ஏகத்துவக் கொள்கையை விளக்கி, அவர்கள் செய்துவரும் அளவை நிறுவை மோசடியை விட்டுவிடுமாறு எச்சரித்தார்கள். ஆனால் அம்மக்கள் அவரைப் பின்பற்றவில்லை. எனவே அல்லாஹ் அச்சமுதாயத்தை அழித்தான்.
ஷுஐப் நபி தன் சமுதாயத்தை எச்சரித்தைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில்
وَاِلٰى مَدْيَنَ اَخَاهُمْ شُعَيْبًا قَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ قَدْ جَآءَتْكُمْ بَيِّنَةٌ مِّنْ رَّبِّكُمْ فَاَوْفُوا الْكَيْلَ وَالْمِيْزَانَ وَلَا تَبْخَسُوا النَّاسَ اَشْيَآءَهُمْ وَلَا تُفْسِدُوْا فِى الْاَرْضِ بَعْدَ اِصْلَاحِهَا ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ
மத்யன் நகரவாசிகளிடம் அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக அனுப்பிவைத்தோம்) அவர் (தம் கூட்டத்தாரை நோக்கி,) “என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை; நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான (அத்தாட்சி) வந்துள்ளது; அளவை முழுமையாக அளந்து, எடையைச் சரியாக நிறுத்துக் கொடுங்கள். மனிதர்களுக்கு அவர்களுக்கு உரிய பொருட்களை (கொடுப்பதில்) குறைத்து விடாதீர்கள்; பூமியில் சீர் திருத்தம் ஏற்பட்ட பின்னர், அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையாக இருக்கும்” என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 7:85)
அளவையும், நிறுவையையும் நிறைவாக கொடுங்கள். மக்களுக்கு அவர்களின் பொருட்களை குறைத்துவிடாதீர்கள் என எச்சரித்தார். ஆனால் அம்மக்கள் அவருடைய பேச்சை கேட்கவில்லை.
அச்சமுதாயத்தில் அல்லாஹ்வை ஏற்கமறுத்தவர்கள் கூறினார்கள். ஷுஐபைப் பின்பற்றினால் நீங்கள் உங்கள் வியாபாரத்தில் நஷ்டமடைந்துவிடுவீர்கள். அவரைப் பின்பற்றாதீர்கள் என்று கூறினார்கள். அவர்கள் செய்துவந்த இந்த அளவை நிறுவை மோசடிக்காக அல்லாஹ் அவர்கள் மீது பூகம்பத்தை ஏற்படுத்தி அழித்துவிட்டான். அளவை நிறுவை மோசடி செய்யும் வியாபாரிகள் இந்த சமுதாயத்திற்கு ஏற்பட்ட நிலை தங்களுக்கு ஏற்பட்டால் என்னவாகும் என்பதை உணரவேண்டும்.
"பதுக்கி வைத்து பின் விலையேற்றி விற்பவர் முஸ்லிமான வியாபாரி கிடையாது"
عن معمر بن عبد الله- رضي الله عنه- عن رسول الله صلّى الله عليه وسلّم قال: «لا يحتكر إلّا خاطىء» مسلم
நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “பதுக்கல் செய்பவன் பாவியாவான்” இன்னொரு அறிவிப்பில் “பாவியைத் தவிர வெறெவனும் பதுக்கமாட்டான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
عن عمر- رضي الله عنه- قال
الجالب مرزوق، والمحتكر محروم،
உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “தேவையான பொருட்களைப் பதுக்கி வைக்காமல் அவற்றை கடைவீதிக்கு கொண்டு வருபவன் அல்லாஹ்வின் அருளுக்கு உரித்தானவன்! மேலும், அவனுக்கு அல்லாஹ் வாழ்வாதாரத்தையும் வழங்குவான். இன்னும், தேவையான பொருட்களைப் பதுக்கி வைப்பவன் அல்லாஹ்வின் சாபத்திற்குரியவனாவான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: மிஷ்காத் )
முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “தேவையான பொருட்களைப் பதுக்கி வைப்பவன் எவ்வளவு கெட்டவனாக இருக்கின்றான்! அல்லாஹ் பொருள்களின் விலையை மலிவாக்கி விட்டாலோ இவன் துக்கப்படுகின்றான். விலை ஏறிவிட்டாலோ ஆனந்தம் அடைகின்றான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: மிஷ்காத் )
"பஞ்சப் பட்டினியான நேரத்தில் தம் வியாபார பொருள் எதையும் பத்துக்காமல், அனைத்தயும் தர்மம் செய்த உத்தம வியாபாரி உஸ்மான் ரலி யல்லாஹு அன்ஹு"
"வியாபாரம் செய்பவர் மார்க்கரீதியாக வியாபார சட்டங்களை அறிந்திருப்பது அவசியம்"
ஹஜ்ரத் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு மனிதரை அழைத்து கடைவீதிக்கு போக சொன்னார்கள். மேலும் யாருக்கு கொடுக்கல், வாங்கல் உடைய சட்டம் தெரியாதோ அவரை கடைவீதியிலிருந்து வெளியாக்குங்கள் என்றார்கள்.
இன்னொரு அறிவிப்பில் ஹஜ்ரத் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கொடுக்கல், வாங்கல் உடைய சட்டம் தெரியாமல் வியாபாரம் செய்ய உட்கார்ந்திருப்பாரோ அவரை சாட்டையால் அடிப்பார்கள். மேலும் சொல்வார்கள் நம்முடைய கடைவீதிகளில் வட்டி எது என்று தெரியாதவரை உட்கார விடாதீர்கள்.
இமாம் மாலிக் (ரஹ்) அதிகாரிகளை அழைத்து வியாபாரிகள், இன்னும் கடைவீதிகளில் இருக்கக்கூடிய மக்களை இமாம் அவர்களுக்கு முன் கொண்டு வர சொல்வார்கள். இமாம் அவர்கள், அவர்களிடம் கேள்வி கேட்பார்கள். யாருக்கு கொடுக்கல், வாங்கல் உடைய சட்டம் தெரியாதோ இன்னும் ஹலால் இன்னும் ஹராமிற்கு மத்தியில் வித்தியாசம் தெரியாதோ அவரை கடைவீதிகளிலிருந்து வெளியாக்கிவிடுவார்கள். மேலும் அவரிடம் முதலில் கொடுக்கல், வாங்கல் பற்றி சட்டங்களை கற்றுக் கொள்ளுங்கள். பிறகு வியாபாரம் செய்வதற்கு உட்காருங்கள் என்பார்கள். ஏனென்றால் சட்டம் தெரியாமல் வியாபாரம் செய்தால் வட்டியை சாப்பிடுவீர்கள் என்றார்கள்.
நம் எந்த வியாபாரம் செய்கிறோமோ அது சம்பந்தமாக மார்க்கத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளளது என்பதை தெரிந்து வைப்பது கட்டாய கடமை. இல்லையென்றால் ஹராம் கலந்து விட்டால் நம்முடைய இபாதத்துகள், துஆக்கள் ஒப்புக் கொள்ளப்படாது...
"வியாபாரத்தை அதிகாலை ஆரம்பிப்பது"
ஹஜ்ரத் ஸஹ்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்படி துஆ செய்தார்கள்,
"اللهم بارك لأمتي في بكورها
"யா அல்லாஹ்! என்னுடைய உம்மத்திற்கு அதிகாலையில் (செய்யப்படும் வேலைகளில்) பரக்கத் செய்வாயாக.
மேலும் ஸஹ்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் படையை அனுப்புவதாக இருந்தால் அதிகாலை நேரத்தில் அனுப்புவார்கள்.
ஹஜ்ரத் ஸஹ்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் வியாபாரியாக இருந்தார்கள். மேலும் தன்னுடைய வேலையாட்களை வியாபாரத்திற்கு அனுப்பும் சமயம் அதிகாலையில் அனுப்புவார்கள். இதனால் அவருடைய செல்வம் அதிகரித்தது.
நாமும் நம்முடைய வியாபாரத்தை, கடைகளை சுப்ஹ் தொழுகைக்கு பின் ஆரம்பித்தால், திறந்தால் அதில் மிகப் பெரிய பரக்கத் ஏற்படும். நம்முடைய பகுதிகளில் நடைமுறை இல்லையென்றாலும் சுன்னத் என்ற எண்ணத்தில் செய்தால் நிச்சயம் அல்லாஹ் உதவி செய்வான்.
"நம் முன்னோர்கள் வியாபாரத்தில் ஹலால், ஹராமை பேணிய விதம்"
ஹப்ஸ் இப்னு கியாஸ் என்பவர் இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்களுடன் சேர்ந்து வியாபாரம் செய்து வந்தார். ஒரு தடவை இமாம் அவர்கள், ஹப்ஸ் இப்னு கியாஸிடம் வியாபார பொருட்களை கொடுத்து வியாபாரம் செய்வதற்கு வெளியே அனுப்பி வைத்தார். மேலும், இதையும் சொல்லி அனுப்பினார்கள். வாடிக்கையாளர் யாராவது இதை வாங்கினால் இதிலுள்ள குறையை அவரிடம் சொல்லவேண்டும்.
ஆனால், ஹப்ஸ் இப்னு கியாஸ் அதை விற்கும் சமயம் அதிலுள்ள குறையை வாங்குபவரிடம் சொல்ல மறந்து விட்டார். விற்ற பணத்தை கொண்டு வந்து இமாம் அவர்களிடம் கொடுக்கும் சமயம் இமாம் அவர்கள், வாங்கியவரிடம் அதிலிருந்த குறையை சொன்னீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு ஹப்ஸ் இப்னு கியாஸ் குறையை சொல்ல மறந்து விட்டேன் என்று தன் தவற்றை ஒத்துக் கொண்டார். உடனே , இமாம் அவர்கள் அதை வாங்கிய நபரையாவது ஞாபகம் இருக்கிறதா? என்று கேட்டார். அதற்கும் ஞாபகம் இல்லை என்று சொல்லி விட்டார்.
இமாம் அவர்கள் அந்த பொருளை விற்று கிடைத்த 30,000 தீனாரையும் சதகா செய்து விட்டார்கள்.
இமாம் அவர்கள் தன்னுடைய வியாபார கூட்டாளி தெரியாமல் செய்த தவறுக்காக, அந்த பொருளை விற்று வந்த மிகப் பெரிய தொகையை ஹராம் கலந்து விடுமோ என்ற ஒரே காரணத்திற்காக முழுவதையும் சதகா விட்டார்கள்.
ஆனால் நம்முடைய நிலை, வியாபாரம் செய்யும் சமயம் பொருளில் குறை இருந்தும், அதை தெரிந்திருந்தும் சொல்லி விற்கிறோமா?!.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
من باع عيبا لم يبينه لم يزل في مقت الله ولم تزل الملائكة تلعنه (رواه إبن ماجه)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் யார் குறையுள்ள பொருளை, (அதை வாங்குபவருக்கு அதிலுள்ள) குறையை சொல்லாமல் விற்றுவிடுவாரோ, அவரின் மீது அல்லாஹ்வின் கோபம் இருந்து கொண்டேயிருக்கும். மலக்குமார்கள் அவரை சபித்துக் கொண்டேயிருப்பார்கள்.
குறையை சொல்லாமல் விற்கும் வியாபாரம் அதன் மூலம் வரக்கூடிய பணம் ஹலாலா?அல்லது ஹராமா? என்பதை கவனிக்கிறோமா?
مظفر بن سهل قال: سمعت غيلان الخياط يقول: اشترى سري السقطي كرّ لوز بستين ديناراً وكتب في رونامجه ثلاثة دنانير ربحه، فصار اللوز بتسعين ديناراً، فأتاه الدلاّل فقال له: إنّ ذلك اللوز أريده، فقال: خذه، فقال: بكم؟ قال: بثلاثة وستين ديناراً، قال له الدلاّل: إنّ اللوز قد صار الكرّ بسبعين ديناراً، قال له السري: قد عقدت بيني وبين الله عقداً لا أحله لست أبيعه إلاّ بثلاث وستين ديناراً، قال له الدلاّل: وأنا قد عقدت بيني وبين الله عقداً لا أحله، أن لا أغشّ مسلماً، لست آخذ منك إلاّ بسبعين ديناراً، قال: فلا الدلاّل اشترى منه ولا سري باعه
ஸிர்ரீ ஸிக்தீ (ரஹ்) அவர்கள் மாபெரும் வணிகராகத் திகழ்ந்தார்கள். ஒரு சமயம் 60 தீனார் கொடுத்து ஒரு கூஜாவை விலைக்கு வாங்கி தங்களது கடையில் விற்பனைக்காக வைத்தார்கள். மேலும், ”அன்றைய நாட்குறிப்பில் 60 தீனாருக்கு விற்பனை செய்வதற்காக வாங்கிய கூஜாவிற்கு 10 தீனாருக்கு அரை தீனார் வீதம் மூன்று தீனார் லாபமாக வைத்து 63 தீனாருக்கு அதை விற்க வேண்டும்” என்று எழுதி வைத்தார்கள்.
கொஞ்ச நாட்கள் கழித்து கூஜாவின் விலை ஏறியது. இந்த நிலையில், ஒரு கிராமவாசி கடைக்கு பொருள் வாங்க வந்தார். வந்தவரை கூஜாவின் அழகு ஈர்த்தது. ஸிர்ரீ (ரஹ்) அவர்களிடம் தனக்கு அந்த கூஜா வேண்டும். எவ்வளவு விலை? என்று கேட்டார்.
ஸிர்ரீ (ரஹ்) அவர்கள், கிராமவாசியிடம் 63 தீனார் அதன் விலை, அதில் 3 தீனார் எனக்கான லாபம் என்றார்கள்.
அதற்கு அந்த கிராமவாசி சிரித்தவராக, பிழைக்கத் தெரியாதவராக இருக்கின்றீர்களே! இதன் விலை மற்ற கடைகளில் எவ்வளவு தெரியுமா? 90 தீனார்.
இருந்து விட்டு போகட்டும்! நான் வாங்கும் போது 60 தீனார் தான், எனக்கான லாபம் 3 தீனார் தான் நான் இதை வாங்கும் போதே இன்ன விலைக்குத் தான் விற்க வேண்டும் என தீர்மானித்து விட்டேன். மற்ற கடைகளின் விலை விபரமோ, விலையேற்றமோ எனக்கு அவசியமில்லை.
அதற்கு, அந்த கிராமவாசி வெளியில் 70 தீனாருக்கு விற்பனையாகும் ஒரு பொருளை 63 தீனாருக்கு வாங்குவதில் எனக்கு உடன்பாடில்லை. அதுவும் சக முஸ்லிம் ஒருவரிடம் இப்படி குறைந்த விலைக்கு வாங்குவதற்கு எனக்கு விருப்பமும் இல்லை. எனவே, 70 தீனாருக்கு தர முடியும் என்றால் அந்த கூஜாவை வாங்கிச் செல்கின்றேன் என்று உறுதியாகக் கூறினார்.
அதைக் கேட்ட ஸிர்ரீ (ரஹ்) அவர்கள் “63 தீனாரை விட கால் தீனார் கூட கூட்டி வாங்கமாட்டேன், வேண்டுமானால் 70 தீனார் கொடுத்து மற்ற கடைகளில் நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள்! என்றார்கள்.
அந்தக்கிராமவாசியும் இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. ஸிர்ரீ (ரஹ்) அவர்களும் விட்டுக் கொடுக்கவில்லை.
இறுதியில் கிராமவாசி வாங்கவும் இல்லை, ஸிர்ரீ (ரஹ்) அவர்கள் விற்கவும் இல்லை.
(நூல்: இஹ்யா உலூமுத்தீன், கிதாபுல் பைஉ )
இது போல ஏராளமான சமபவங்கள் நம் முன்னோர்களின் வாழ்க்கையில் குவிந்து கிடக்கின்றன..
நாம் உலகில் வியாபாரம் செய்யும் சாதாரணமான வியாபாரியாக கடந்து செல்லாமல் உண்மையான, நேர்மையான சுவனத்தை ஆவல் கொண்ட வியாபாரியாக இஸ்லாம் அங்கீகரித்த வியாபாரியாக வாழ வேண்டும்.
"தவறான வியாபாரங்களின் விளைவுகள்"
1, அருள்வளம் நீக்கப்படும்
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ ، حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ قَتَادَةَ ، عَنْ صَالِحٍ أَبِي الْخَلِيلِ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ الْحَارِثِ رَفَعَهُ إِلَى حَكِيمِ بْنِ حِزَامٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم
الْبَيِّعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا ، أَوْ قَالَ حَتَّى يَتَفَرَّقَا – فَإِنْ صَدَقَا وَبَيَّنَا بُورِكَ لَهُمَا فِي بَيْعِهِمَا وَإِنْ كَتَمَا وَكَذَبَا مُحِقَتْ بَرَكَةُ بَيْعِهِمَا
அருள்வளம் நீக்கப்படும்
விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும்வரை வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசிக் குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களுடைய வியாபாரத்தில் அருள்வளம் (பரக்கத்) அளிக்கப்படும்!
குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள அருள்வளம் நீக்கப்படும்!
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி (2079)
2, பிரார்த்தனைக்கு பதிலளிக்கப்படாமல் போகுதல்
இந்த சம்பாத்தியம் இறைவனின் கோபத்தை மற்றும் பெற்றுத்தராமல் நாம் செய்யும் பிரார்த்தனைகளையும் ஏற்றுக்கொள்வதில்லை.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “மக்களே! அல்லாஹ் தூயவன். தூய்மையான தையே அவன் ஏற்கின்றான்.
அல்லாஹ் தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளையிட்டவற்றையே இறைநம்பிக்கையாளர்களுக்கும் கட்டளையிட்டுள்ளான்” என்று கூறிவிட்டு(ப் பின்வரும் இரு வசனங்களை) ஓதிக்காட்டினார்கள்:
يٰۤـاَيُّهَا الرُّسُلُ كُلُوْا مِنَ الطَّيِّبٰتِ وَاعْمَلُوْا صَالِحًـا ؕ اِنِّىْ بِمَا تَعْمَلُوْنَ عَلِيْمٌ
தூதர்களே! தூய்மையான பொருள்களிலிருந்து உண்ணுங்கள். நற்செயலைச் செய்யுங்கள். திண்ணமாக நான், நீங்கள் செய்வதை நன்கு அறிபவன் ஆவேன்
(அல்குர்ஆன் 23:51)
يٰٓاَ يُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا کُلُوْا مِنْ طَيِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ وَاشْكُرُوْا لِلّٰهِ اِنْ کُنْتُمْ اِيَّاهُ تَعْبُدُوْنَ
“நம்பிக்கையாளர்களே! நாம் உங்க ளுக்கு வழங்கிய தூய்மையான பொருள்களிருந்து உண்ணுங்கள். நீங்கள் (உண்மையில்) அல்லாஹ்வைத்தான் வணங்குகிறீர்களென் றால், அவனுக்கு நன்றி பாராட்டுங்கள்.
(அல்குர்ஆன் 2:172).
2393 – وَحَدَّثَنِى أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ حَدَّثَنَا فُضَيْلُ بْنُ مَرْزُوقٍ حَدَّثَنِى عَدِىُّ بْنُ ثَابِتٍ عَنْ أَبِى حَازِمٍ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم
« أَيُّهَا النَّاسُ إِنَّ اللَّهَ طَيِّبٌ لاَ يَقْبَلُ إِلاَّ طَيِّبًا وَإِنَّ اللَّهَ أَمَرَ الْمُؤْمِنِينَ بِمَا أَمَرَ بِهِ الْمُرْسَلِينَ فَقَالَ ( يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا إِنِّى بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ) وَقَالَ (يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ) ». ثُمَّ ذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أَشْعَثَ أَغْبَرَ يَمُدُّ يَدَيْهِ إِلَى السَّمَاءِ يَا رَبِّ يَا رَبِّ وَمَطْعَمُهُ حَرَامٌ وَمَشْرَبُهُ حَرَامٌ وَمَلْبَسُهُ حَرَامٌ وَغُذِىَ بِالْحَرَامِ فَأَنَّى يُسْتَجَابُ لِذَلِكَ
பிறகு ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னார்கள். “அவர் தலைவிரி கோலத்துடனும் புழுதி படிந்த நிலையிலும் நீண்ட பயணம் மேற் கொள்கிறார். அவர் தம் கரங்களை வானை நோக்கி உயர்த்தி
“என் இறைவா, என் இறைவா’ என்று பிரார்த்திக்கிறார்.
ஆனால்,
அவர் உண்ணும் உணவு தடை செய்யப்பட்டதாக இருக்கிறது;
அவர் அருந்தும் பானம் தடை செய்யப்பட்டதாக இருக்கிறது.
அவர் அணியும் உடை தடை செய்யப்பட்டதாக இருக்கிறது.
தடை செய்யப்பட்ட உணவையே அவர் உட்கொண்டிருக்கிறார். இத்தகையவருக்கு எவ்வாறு (அவரது பிரார்த்தனை) ஏற்கப்படும்?
”என்று கூறி னார்கள்.
நூல்: முஸ்லிம் (1844)
3, இறைவனுடன் போர்
பொருளை விரைவில் ஈட்ட வேண்டும் என்பதற்காக ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சும் வட்டித் தொழிலைச் செய்பவர்கள் இறைவனிடம் போர் செய்யத் துணிந்தவர்களாக கணிக்கப்படுவார்கள்.
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَذَرُوْا مَا بَقِىَ مِنَ الرِّبٰٓوا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ
فَاِنْ لَّمْ تَفْعَلُوْا فَاْذَنُوْا بِحَرْبٍ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖۚ وَاِنْ تُبْتُمْ فَلَـكُمْ رُءُوْسُ اَمْوَالِكُمْۚ لَا تَظْلِمُوْنَ وَلَا تُظْلَمُوْنَ
நம்பிக்கை கொண்டோரே!
அல்லாஹ்வை அஞ்சுங்கள்!
நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்! அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகட னத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்!
நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது.
நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது.
(அல்குர்ஆன் 2 : 278, 279)
4, சாபத்திற்குரியோர்
அளவு நிறுவையில் குறைவு செய்வோருக்குக் கேடுதான்! அவர்கள் மக்களிடம் அளந்து வாங்கும்போது நிறைவாக வாங் கிக் கொள்கின்றனர். மக்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுத் தால் குறைத்து விடுகின்றனர். மகத்தான நாளில் அவர்கள் உயிர்ப்பிக்கப்பட உள்ளனர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? அந்நாளில் அகிலத்தின் இறைவன் முன்னால் மனிதர்கள் நிற்பார்கள்.
(அல்குர்ஆன்86 : 1- 6)
5, நரகம் பரிசாகும்
حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَعَلِىُّ بْنُ حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَاعِيلَ بْنِ جَعْفَرٍ – قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ – قَالَ أَخْبَرَنَا الْعَلاَءُ – وَهُوَ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ مَوْلَى الْحُرَقَةِ – عَنْ مَعْبَدِ بْنِ كَعْبٍ السَّلَمِىِّ عَنْ أَخِيهِ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ عَنْ أَبِى أُمَامَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ
« مَنِ اقْتَطَعَ حَقَّ امْرِئٍ مُسْلِمٍ بِيَمِينِهِ فَقَدْ أَوْجَبَ اللَّهُ لَهُ النَّارَ وَحَرَّمَ عَلَيْهِ الْجَنَّةَ ».
நபி ஸல் அவர்கள், “யார் தன்னுடைய சத்தியத்தின் மூல மாக ஒரு முஸ்லிமின் பொருளை அநியாயமாக எடுக்கிறாரோ அல்லாஹ் அவருக்கு சுவர்க்கத்தை ஹராமாக்கி நரகத்தில் நுழையச் செய்கிறான்” என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் (196)
"நபியவர்களின் சுபச்செய்தி"
நபி (ஸல்) அவர்கள் வியாபாரிகளைப் பற்றி கூறும் போது முழு உண்மையுடனும் நம்பிக்கையுடனும் வியாபாரம் செய்யும் விபாயாரி நபிமார்கள், உண்மையாளர்கள், சுஹதாக்களுடன் இருப்பார் என நவின்றார்கள். (நூல் – திர்மிதி)
மேலும் கூறினார்கள், அல்லாஹ்வைப் பயந்து பேணுதலைக்கடைபிடித்து நல்லது செய்து தன் வியாபாரத்தைக் கொடுக்கல் வாங்களில் மக்களுடன் நேர்மையாக வியாபாரம் செய்த வியாபாரிகளைத் தவிர மற்றைய வியாபாரிகள் கியாமத் நாளன்று பாவிகளாக எழுப்பப்படுவார்கள். (திர்மிதி)
நபியின் சுபச்செய்திக்கு உரித்தான வியாபாரிகளாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக..
ஆமீன்..