Thursday, 26 November 2020

27/11/2020 ஜூம்ஆ பயான் குறிப்புகள்:- வலிமார்கள் வாழ்வெங்கும் அற்புதமே


الحمد لله، الحمد لله رب العالمين، والصلاه والسلام على رسوله المرسلين، وعلى اله واصحابه اجمعين، اما بعد، فقال الله تعالى في القران العظيم، والقران المجيد، اعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم

أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ

 يَحْزَنُونَ () الَّذِينَ آَمَنُوا وَكَانُوا يَتَّقُونَ () لَهُمُ الْبُشْرَى فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآَخِرَةِ لَا تَبْدِيلَ لِكَلِمَاتِ اللَّهِ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ ()

روى أبو نُعيم في كتابه "حلية الأولياء" (7 /285) عن سفيان بن عيينة أنه قال:

"عند ذكر الصالحين تنزلُ الرحمة".


"நல்லோர்களை நினைவு கூறும் இடத்தில் அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்குகிறது"

வலிமார்கள் என்பவர்கள் அல்லாஹ்வாலக்கள் அல்லாஹ் அவர்களை குறித்து தன் திருமறையில் أولياء என்று கூறுகிறான்.

ஒவ்வொரு சாராருக்கும் வெவ்வேறு அந்தஸ்துகளும், தகுதிகளும் இருப்பதை அல்லாஹ் தன் திருமறையில் குறிப்பிட்டு காட்டுகிறான்.

நபிமார்கள், ஷுஹதாக்கள், முத்தகீன்கள், சித்தீக்கீன்கள்,சாலிஹீன்கள் என பட்டியல் நீளும்.

அந்த வரிசையில் இவர்களை أولياء என அல்லாஹ் கூறுகிறான்.

வலிமார்கள் என்பவர்கள் நம்மை போல் உள்ளத்தில் எல்லாவற்றையும் வைத்து அல்லாஹ்வை வைப்பவர்கள் அல்ல..

அல்லாஹ்வை மட்டும் உள்ளத்தில் நிரப்பி மற்ற வஸ்துக்களை உள்ளத்தில் இல்லாமலே ஆக்கி கொள்பவர்களே வலிமார்கள் என்ற இறைநேசர்கள்.

அல்லாஹ்வில் ஆரம்பித்து அல்லாஹ்விலே முடிப்பார்கள் தங்கள் வாழ்கையை.

தீனின் மிக முக்கியமான அம்சமான ஆன்மீகத்தின் அடிப்படையில் செய்லபடுபவர்களே வலிமார்கள்..

ஆம் தீனின் மூன்றாவது அம்சமே ஆன்மீகம்.

ஈமான், இஸ்லாம் என்று கற்றுக்கொடுத்த ஜிப்ரயீல் இஹ்ஸான் என்ற ஆன்மீக தன்மையை ஏன் சொல்லி கொடுக்க வேண்டும்..

அதுவும் தீனின் அடிப்படைகளில் ஒன்றுதான் என்பதை உணர்த்தி சென்றார்கள்..

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: என் தந்தை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்:

நாங்கள் ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அருகில் இருந்தபோது தூய வெண்ணிற ஆடை அணிந்த, அடர் கறுப்பு நிறத்தில் தலைமுடி உடைய ஒரு மனிதர் வந்தார். 

பயணத்தில் வந்த எந்த அடையாளமும் அவரிடம் காணப்படவில்லை;எங்களில் எவருக்கும் அவரை (யார் என)த் தெரிய வில்லை. அவர் நபி (ஸல்) அவர்களின் அருகில் (சென்று), தம் முழங்கால்களை நபியவர்களின் முழங்கால்களோடு இணைத்துக்கொண்டு (நெருக்கமாக) அமர்ந்தார்.

 அவர் தம் கைகளைத் தம் தொடைகள்மீது வைத்(து பவ்வியமாக அமர்ந்)தார்.

 பிறகு முஹம்மதே! இஸ்லாம் என்றால் என்னவென்று எனக்குத் தெரிவியுங்கள்" என்று கேட்டார். 

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 

இஸ்லாம் என்பது, அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் என்றும் நீங்கள் உறுதி கூறுவதாகும். மேலும்,தொழுகையைக் கடைப்பிடிப்பதும், ஸகாத்தை வழங்கிவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும், சென்றுவர இயன்றால் இறையில்லம் கஅபாவில் ஹஜ்" செய்வதும் ஆகும்" என்று பதிலளித்தார்கள். அதற்கு அந்த மனிதர் உண்மைதான்" என்றார்.

அவர் இவ்வாறு கூறியதைக் கேட்டு, அவரே கேள்வியும் கேட்டுவிட்டு அவரே நபி (ஸல்) அவர்கள் அளித்த பதிலை உறுதிப்படுத்தவும் செய்கிறாரே என்று நாங்கள் வியப்படைந்தோம்.

அடுத்து அவர், ஈமான் (இறைநம்பிக்கை) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்" என்று கூறினார். 

அதற்கு நபி (ஸல்) அவர்கள்,அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் இறுதி நாளையும் நீங்கள் நம்புவதாகும்; நன்மை, தீமை அனைத்தும் விதியின்படியே நடக்கின்றன என்றும் நீங்கள் நம்புவதுமாகும்" என்று கூறினார்கள். அதற்கும் அம்மனிதர் உண்மைதான்" என்றார்.

அடுத்து அம்மனிதர்,இஹ்சான் (அழகிய முறையில் செயலாற்றல்) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்" என்றார். 

அதற்கு நபி (ஸல்) அவர்கள்,

(இஹ்சான் என்பது,) அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வுடன் வழிபடுவதாகும். ஏனெனில், அவனை நீங்கள் பார்க்கவில்லை என்றாலும், அவன் உங்களைப் பார்க்கின்றான்" என்று பதிலளித்தார்கள்.

இந்த ஹதீஸின் கடைசியில் நபி அவர்கள் கூறிய வார்த்தை 

"அவர்தாம் (வானவர்) ஜிப்ரீல். உங்களுக்கு உங்களது மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காக உங்களிடம் அவர் வந்தார்" என்று சொன்னார்கள்."

நன்றாக நாம் உணர வேண்டும்.

ஈமான் இஸ்லாம் மட்டும் அல்ல இஹ்ஸான் என்ற ஆன்மீகமும் தீன்தான் என்றாகள் நபி அவர்கள்.

ஈமான், இஸ்லாமோடு மனதை தூய்மை படுத்தி கொள்ளும் இந்த தஸவ்வுப் இஹ்ஸான் என்ற ஆன்மீக நிலையை தனக்குள் ஆக்கி கொண்டவர்களே வலிமார்கள்..

அதனால் அவர்கள் இந்த உலகில் அல்லாஹ்வின் உதவியால் எதையும் நிறைவேற்றும் ஆற்றல் பெற்றவர்களாக விளங்கினார்கள்...  

லட்ச கணக்கில் மக்கள் இஸ்லாத்தை தழுவினார்கள்,

ஆயிரகணக்கில் தீயோர் நல்லோர்களானர்.

தீனை விட்டு விலகி உலக மாயையில் இருந்தோர் இவர்களின் பார்வையிலும், பேச்சிலும் நடைத்தையிலும் முழு தீன் தாரிகளானார்கள்..

ஆம் ,எப்படி தீய பார்வைக்கு மரணம் வரை தீங்கு இருக்குமோ நபியவர்கள் சொலிகாட்டினார்களே "கண் திருஷ்டி உங்களை மரணம் வரை கொண்டு சேர்க்கும்" என்பதாக ,

அதே போல் அல்லாஹ் அல்லாஹ் என்று தங்கள் வாழ்க்கை முழுதும் ஆக்கி கொண்டவர்களின் பார்வைக்கும் ,பேச்சிற்கும் தீனை உயிர்பிக்கும் ஆற்றலை அல்லாஹ் கொடுத்திருந்தான்..


"வலிமார்கள் யார்"

ஒரு முறை ஸஹாபாக்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே அவ்லியாக்கள் என்பவர்கள் யார்? என்று கேட்டார்கள் அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 

"யாரை நீங்கள் பார்க்கும் போது இறைவனின் ஞாபகம் வருகின்றதோ அவர்கள் தான் அல்லாஹ்வின் இறைநேசர்கள் ஆவார்கள்" என பதிலளித்தார்கள். 

(நூல் பஜ்ஜார்)

"வாழ்க்கையே அற்புதமாக திகழ்ந்தவர்கள் வலிமார்கள்"


"வலிமார்களை அடித்தால் அல்லாஹ் அடிப்பான்"

மஹான் துன்னூனுல்

மிஸ்ரி-ரஹ் அவர்கள்

ஒரு ஊருக்குள்

செல்கிறார்கள்..

மழை பொழிந்து

ஆங்காங்கே

தண்ணீர் தேங்கி

கிடக்கிறது....

தெரியாமல்

பள்ளத்தில்

கால் வைக்க...

எதிரில் வந்த

புது மணப்பெண் மேல்

தண்ணீர் தெறிக்கிறது...

அவள் கணவன்

மஹானை

செருப்பால்

அடித்து விடுகிறான்...

பக்கத்து தெருவிற்கு

செல்கிறார்கள்

மக்கள்

மாலையோடு

வர வேற்கிறார்கள்..

யா அல்லாஹ்!

"அங்கே செருப்படி...

இங்கே

மலர் மாலை...

உன் திருவிளையாடல் புரியவில்லையே...!" என்கிறார்கள்

தூரத்தில்

மணப்பெண்

அழுதுக் கொண்டு

ஓடி வருகிறாள்...

"எஜமானே மன்னித்து விடுங்கள்....

என் கணவர்

இறந்து போய் விட்டார்!"

என்கிறாள்

மஹான் அமைதியாக

சொன்னார்கள்..

"உன் மீதுள்ள காதலினால்

உன் கணவன்

என்னை

அடித்தான்...."

"என் மீதுள்ள

காதலினால்

என் ரப்பு

அவனை

அடித்து விட்டான்...!"

என்றார்கள்.

أخرج الإمام البخاري في صحيحه:

((قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ اللَّهَ قَالَ مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ )


"தாயின் துஆவும் ,வலி ஆன மஹானும்"

அது ஒரு

இரவு நேரம்...

பிள்ளையை

பக்கத்தில்

அமர வைத்து...

ஒரு பெண்மணி

குர்ஆன் ஓதிக் கொண்டு இருக்கிறார்...!

"திடீரென அவருக்கு

விக்கல் வருகிறது...!"

"மகனே!

தண்ணீர் என்கிறார்...!"

"வீட்டில்

தண்ணீர் இல்லை...!"

"அக்கம் பக்கம்

எல்லோரும்

உறங்கிவிட்டனர்..!"

நீண்ட தூரம் சென்று

தண்ணீர் பிடித்து வந்து

பார்த்த போது...

அந்தத்தாய் தூங்கிவிட்டார்....!"

தஹஜ்ஜத் தொழ

எழுந்தபோது...

"கையில் தண்ணீரோடு

நிற்கும் மகனை

கண்ணீரோடு

பார்க்கிறார்..!"

உடனே

"யா அல்லாஹ்!

நான் நேசிப்பது போல்...

நீயும் என் மகனை நேசிப்பாயாக..!"

என துஆச் செய்கிறார்.

பின்னர்

இறைஞானக் கல்வி கற்க மகனை அனுப்பி வைக்கிறார்...!

பல நாடுகளில்

பல ஞானிகளிடம்

கல்வி கற்று...

"மாபெரும் மஹான் ஆகிவிட்டார்கள் ..!"

தன்னுடைய ஷைக்

ஜஃபர் சாதிக்-ரஹ்

அவர்களின் உத்தரவு படி...

முப்பது

வருஷத்துக்கு பிறகு...

ஊர் திரும்புகிறார்கள். ..

எல்லோரும்

உறங்கிவிட்ட

இரவுநேரம்...

வீட்டுக்கதவை

தட்டப்போகையில்...

வீட்டுக்குள் அழுகைக் குரல்...

"யா அல்லாஹ்!

என் மகனை

உன்னிடம் ஒப்படைத்து விட்டேன்...

நீதான்

பாதுகாப்பு...!"

என

இன்னும்

தன் தாய்

தனக்காக துஆ செய்வதைக் கேட்டு...

"ஹோ.. என

சப்தமிட்டு

அழுகிறார்கள்.!"

மகனின் குரல் கேட்டு..

தட்டுத் தடுமாறி

அந்தத் தாய்

கதவை திறந்ததும்....

"தாயின் காலைப் பிடித்து

கதறி அழுகிறார்கள்.!"

"உன் நினைவால்

அழுது.. அழுது

உன்னைப் பார்க்க கூட

எனக்கு பார்வை இல்லை மகனே..!"

என அந்தத்தாயும் அழுகிறார்.

தாயின் துஆவால்

மாபெரும் குத்பாக மாறிய

அவர்கள் தான்

அபாயஜீதுல் பிஸ்தாமி-ரஹ்

ஆவார்கள்.


"இறைநேச சூட்டில் குளிரான சுடுநீர்"

அவர் ஒரு மன்னர் தன் புற வாழ்வு இன்பத்தில் உள்ள போலித்தனத்தை உணர்ந்து தன் அக வாழ்வும் மறுமை வாழ்வும் சிறக்க தன் ஞான குருநாதரை தேடி பல ஊர்களுக்கு அலைந்தும் அவர்களுக்கான ஞான குரு நாதரை கண்டாரில்லை,

அப்பொழுது பிரபலமான இறைநேசப் பெருந்தகை ஒருவர் பை அத் தருவதாக கேள்விப்பட்டு அவர்களின் இல்லம் நோக்கி சென்றார்கள் அந்த நேசர் அங்கு சென்றால் மிகப்பெரிய கூட்டமாக பலர் வரிசையாக நின்றனர்

அவர்களுடன் அந்த நேசரும் நின்றார்கள் பை அத் பெற உள்ளே செல்பவர்கள் எல்லாம் தலை தெறிக்க வெளியே ஓடு வதுமாக இருந்தார்கள்.

இறுதியாக அந்த நேசரை அழைத்தார் அந்த பெருந்தகை அந்த நேசரைப்பார்து எதற்காக வந்தீர்கள் எனக் கேட்க உங்களிடம் ஆன்மீக சீடராக இணைய என அந்த நேசர் சொல்ல சரி நான் பை அத் தருகிறேன் அதற்கு ஒரு நிபந்தனை இதோ சூடாக்கி கொண்டு இருக்கும் இந்த கொதிக்கும் நீர் நிரைந்த இந்த தொட்டியில் மூழ்கி குளித்து பின் வந்தால் நான் உங்களுக்கு பை அத் தருகிறேன் என்று சொல்ல அப்போது தான் அங்கு அடுப்பு மூட்டி எரிந்தி கொண்டு இருக்க அதில் மிகப்பெரிய தொட்டியில் நீர் நிரப்பப்பட்டு அது கொதித்து கொண்டு இருந்தது அப்போது தான் அந்த நேசருக்கு நினைவு வந்தது பை அத் பெற சென்ற அனைவரும் தலை தெறிக்க ஏன் ஓடினார்கள் என்று.

என்றாலும் அந்த நேசர் ஓடவும் இல்லை தயங்கவும் இல்லை அந்தப் பெருந்தகை கூறியது தான் தாமதம் பாய்து குதித்தார்கள் அந்தக் கொதிக்கும் சுடு தண்ணீரில் பின் மூழ்கி குளித்து எழுந்து அந்தப் பெருந்தகையிடம் பை அத் பெற்றார்கள் .

சுடு தண்ணீரில் மூழ்கிய அந்த நேசர் கூறினார்கள் அது பார்பதற்கு தான் சுடு நீராக கொதித்தது நான் அதில் குதித்து மூழ்கிய போது இறைவன் அதை குளிர்ந்த நீராக்கி விட்டான் என்று !

இந்த சோதனை ஏன் அந்த பெருந்தகை இடம் கேட்ட போது உண்மையான இறைநேசத்தின் மேல் உள்ள உள்ளக் காதல் சூடானாது அந்த கொதி நீரின் சூட்டை அனைத்து விடும் என்று கூறினார்கள்

இந்தகைய பேரு பெற்ற அந்த நேசர் தான் திருச்சி மாவட்டத்தில் அடக்கமாகி உலக மெங்கும் ஆன்மீக அரசாட்சி நடத்தும் ஹழ்ரத் தாதா தப்லே ஆலம் நத்ஹர் வலி பாதுஷா ரஹ்மதுல்லாஹி அலைஹி அன்னவர்கள் ஆவார்கள்

கொதி நீரில் குளிக்க வைத்து சோதித்த அந்த பெருந்தகை ஹழ்ரத் சையத் ஷா சைகு ஜொலூஃகி பர்வாஸ் கலந்தர் ஹுசைனி சுஹ்ஹரவர்த்தி ரஹ்மதுல்லாஹி அலைஹி அன்னவர்கள்..


"எல்லாமே அல்லாஹ்தான்"

கௌதுல் ஆலம் முஹ்யிதீன் அப்துல் காதர் ஜீலானி ( ரஹ்) அவர்களிடம் ஒரு மனிதர் கேட்டார்..

நீங்கள் இந்த அளவு அந்தஸ்தை அடையவதர்கும், அல்லாஹ்வை நெருங்குவதற்கும் உங்கள் தொழுகையா, நோன்பா நீங்கள் செய்த அபரிவிதமான அமல்களா எந்த அமல் காரணமாக 

இருந்தது என கேட்டார்.

அதற்கு கௌதுல் ஆலம் அவர்கள் சொன்ன வார்த்தை

என் தொழுகையோ நோன் போ நான் செய்த அபரிவிதமான அமல்கலோ எதுவாக இருப்பினும் முதலில் நான் இந்த நிலையை அடைய காரணம் بالكرم அல்லாஹ்வின் அருள் என சொன்னார்கள்..

அவன் என்னை நாடாவிடில் நான் இந்த நிலையை அடக்கிந்திருக்க முடியாது என்றார்கள்..

ஆம், உண்மை தான் நாம் ஒரு சுப்ஹானல்லாஹ் சொல்வேண்டுமாயின் அதற்க்கும் அல்லாஹ் நாடியிருக்கனுமே..!

வலிமார்களின் நிலை இதுதான் தான் எதுவும் செய்ய வில்லை, தன்னால் எதுவும் நிகழவில்லை எல்லாமே அல்லாஹ்தான் என்பார்கள்..

அவர்களே அல்லாஹ்வாலக்கள்..

இப்படி இறை நேசர்களின் வாழ்வில் அற்புதம் வாழ்க்கை முழுவதும் நிரம்பி வழிகிறது..

நாமும் அந்த இறை நேசர்களை நேசிக்கும் நேசர்களாக ஆக்கி அருள்புரிவானாக...

அவர்களின் பெயரில் நடக்கும் அனாச்சாரங்களை விட்டும் அல்லாஹ் நம் அனைவரையும் விலக்கி, இறைநேசர்களின் உண்மையான அந்தஸ்தையும், மகிமையையும் நம் நெஞ்சில் ஏந்தி வாழக்கூடிய நன்மக்களாக வல்ல இறைவன் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக..

ஆமீன்.

Thursday, 19 November 2020

20/11/2020 ஜூம்ஆ பயான் குறிப்புகள்:- இஸ்லாத்தின் அங்கீகாரம் பெற்ற வியாபாரிகளாவோம்

الحمد لله، الحمد لله رب العالمين، والصلاه والسلام على رسوله المرسلين، وعلى اله واصحابه اجمعين، اما بعد، فقال الله تعالى في القران العظيم، والقران المجيد، اعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم

قال الله تعالى في القرآن الكريم: ((يا أيها الناس كُلوا مما في الأرض حلالاً طيبًا ولا تتَّبعوا خُطُوات الشيطان إنه لكم عدوٌ مبين)) سورة البقرة. 

 و قال النبي صلى الله عليه وسلم، وعن أبي سعيدٍ الخدري أن النبي صلى الله عليه وسلم قال:((التاجر الصدُوق الأمين مع النبيين والصديقين والشهداء)) رواه الترمذي


மனிதன் தனக்கு தேவையான ஒன்று பிறரிடம் இருக்கும் போது அதை அவனிடம் கேட்கிறான். பேரம் பேசுகிறான். அதற்கு ஈடாக தன்னிடம் உள்ளதை கொடுக்கிறான். இப்படி உருவானதுதான் வியாபாரம். ஆதிகாலத்தில் பண்ட மாற்றமாக அதாவது பொருளுக்கு பொருள் என்று இருந்துவந்த வியாபாரம் காலப்போக்கில் பணத்திற்கு பொருள் என்ற வியாபார முறைக்கு மாறிவிட்டன.
பணம் இருந்தால் போதும் எதையும் வாங்கலாம் என்ற அளவுக்கு பணம் வியாபாரத்தில் முக்கியத்துவம் பெற்று விட்டன. இதனால் வியாபார முறைகளும் மாறிவிட்டன. மாறிவிட்ட வியாபார முறைக்கு ஏற்ப மனிதனும் மாற்றிக்கொள்ள முயற்சிகிறான்.

"நபிமார்களின் வியாபாரம்"

ஒவ்வொரு நபியும் வாழ்வாதாரத்திற்காக ஏதாவது ஒரு வேலையை செய்தார்கள்.
 
நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் விவசாயம் செய்தார்கள்.
 
நபி இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் தையல் வேலை செய்தார்கள்.
 
நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் உருக்கு சட்டை செய்து விற்றார்கள்.
 
எல்லா நபிமார்களும் ஆடு மேய்த்தார்கள்.நம்முடைய நபியும் ஆடு மேய்த்துள்ளார்கள். 
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வியாபாரமும் செய்துள்ளார்கள். எனவே தான் வியாபாரம் செய்வது வாழ்வாதாரத்தை தேடுவதற்கு மிக சிறந்த வழி என்றார்கள். 
 
நுபுவ்வத் கிடைப்பதற்கு முன்பு அன்னை கதீஜா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் பொருட்களை வியாபாரம் செய்வதற்கு ஷாம் தேசம் சென்றார்கள். அதில் மிகப் பெரிய இலாபம் ஈட்டினார்கள். 

 அதை போன்று அப்துல்லாஹ் இப்னு ஸாயிப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடன் வியாபாரத்தில் பார்ட்னர் ஷிப் ஆக இருந்தார்கள். இதை பற்றி அப்துல்லாஹ் இப்னு ஸாயிப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள், அறியாமை காலத்தில் முஹம்மது ஸல்லல்லாஹு அவர்களுடன் வியாபார பார்ட்னராக இருந்தேன். எப்பொழுது மதீனா தய்யிபாவிற்கு வந்தேனோ, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம், என்னை தெரியுமா? என்று கேட்டார்கள். நான் சொன்னேன் ஏன் தெரியாது?!  "என்னுடைய பார்ட்னர்களில் மிக சிறந்த பார்ட்னராக இருந்தீர்கள். எந்த மோசடியும் செய்யாதவர், எந்த தர்க்கம் செய்யாதவர். (முஸ்னத் அஹ்மத்)

அதே போல் ஸஹாபாக்களும், இமாம்களும், பல இறைநேசர்களும் முத்தக்கீன்களாகவும் ,இஸ்லாமிய அழைப்பாளர்களாகவும் அதே சமயம் வியாபாரம் செய்யும் நேர்மையான வியாபாரிகளாகவும் இருந்தார்கள்.

"உழைத்து உண்பதே சிறந்த செயல்"

தன்னுடைய கையால் உழைத்து சாப்பிடும் உணவு மிகவும் சிறந்தது. நபி தாவுத் (அலை) தன்னுடைய கையால் உழைத்து சாப்பிடக்கூடியவர்களாக இருந்தார்கள் என்று நபியவர்கள் கூறினார்கள். (நூல் – புஹாரி)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள். “”பிறரிடம் யாசகம் கேட்பதை விட ஒருவர் தமது முதுகில் விறகுக் கட்டைகளைச் சுமந்து விற்கச் செல்வது சிறந்தது ஆகும். அவர் யாசிக்கும் போது யாரும் கொடுக்கவும் செய்ய லாம், மறுக்கவும் செய்யலாம்” நபிமொழி செய்தி யாளர்கள் : அபூஹுரைரா(ரழி) மற்றும் ஸுபைர் பின் அவ்வாம்(ரழி), ஆதாரம்: புகாரி, ஹதீஃத் எண் : 2075, 1472

நபிகள் நாயகம் அவர்களிடம் ஓர் இளைஞர் வந்து யாசகம் கேட்டார். அவனைப் பார்த்த நபியவர்கள் ‘உன்னுடைய வீட்டில் ஏதேனும் இருக்கிறதா?’ எனக் கேட்டார்கள். ‘ஒரே ஒரு போர்வைதான் உள்ளது’ என்று அந்த இளைஞர் கூறினார். அந்த போர்வையை கொண்டு வரச் செய்த நபியவர்கள், அந்த போர்வையை ஏலம் விட்டார்கள். அந்த பணத்தைக் கொண்டு கோடாரி ஒன்றை வாங்கி அந்த இளைஞரிடம் கொடுத்துவிட்டு ‘காட்டிற்கு சென்று விறகு வெட்டிப் பிழைத்துக்கொள். யாசகம் கேட்பதைவிட அதுதான் சிறந்தது’ என்று கூறி அந்த இளைஞரை அனுப்பி வைத்தார்கள்..

இப்படி உழைத்து ,வியாபாரம் செய்து தன் ரிஸ்க்கை தேடுவது, பிறர் உழைப்பில் சாப்பிடுவதை காட்டிலும், யாசகம் செய்து உண்பதை விடவும் சிறந்தது என்கிறது நம் மார்க்கம்.


குர்ஆனில் ஏறத்தாழ 32 இடங்களில் ஜகாத் கொடுப்பதற்கு கட்டளையிடப்பட்டுள்ளது அல்லது ஆர்வமூட்டபட்டுள்ளது.

அதை போன்று 16 இடங்களில் சதகா செய்ய ஆர்வமூட்டபட்டுள்ளது, சதகா செய்பவரை புகழப்பட்டுள்ளது.

ஆனால் இதற்கு மாற்றமாக குர்ஆனில் எந்த இடத்திலும் ஜகாத் வாங்க சொல்லியோ, சதகா வாங்க சொல்லியோ வரவில்லை. 

மேலும் "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். மேலிருக்கும் (கொடுக்கும்) கை, கீழிருக்கும் (வாங்கும்) கையை விட சிறந்ததது."

இதிலிருந்து ஒரு மனிதன் வியாபாரத்தின் மூலமோ, அல்லது இஸ்லாம் ஆகுமாக்கிய ஏதாவது ஒரு வழியின் மூலமாகவோ பிறருக்கு கொடுக்கும் நிலைக்கு தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று குர்ஆன் இன்னும் ஹதீஸ் வழிகாட்டுகிறது.

வாழ்வாதாரத்தை தேடுவதற்கு ஆகுமாக்கப்பட்ட பல வழிகள் இருந்தாலும்,அவற்றில் அதிக பரக்கத் உடையது வியாபாரம் செய்வதாகும். 

எனவே தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் நேர்மையான முறையில் நடக்கும் வியாபாரத்தில் அல்லாஹ்வின் உதவி உள்ளது.

அந்த வியாபாரமும், அதை செய்யும் வியாபாரியும் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்க கூடாது என்று மார்க்கம் சில வழிமுறைகளை சொல்லி சொல்லிக்கொடுக்கிறது.

அதன் படி நமது வியாபாரத்ததை அமைத்து கொண்டால் இம்மையில் பரக்கத்தோடும், மறுமையில் நல்லோர்களுடன் இருக்கவும்   நம் வியாபாரம் காரணமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

"வியாபாரத்தில் ஏமாற்றுபவர் நம்மை சார்ந்தவர் இல்லை"

إِسْمَاعِيلَ بْنِ جَعْفَرٍ، قَالَ ابْنُ أَيُّوبَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: أَخْبَرَنِي الْعَلَاءُ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى صُبْرَةِ طَعَامٍ فَأَدْخَلَ يَدَهُ فِيهَا، فَنَالَتْ أَصَابِعُهُ بَلَلًا فَقَالَ: «مَا هَذَا يَا صَاحِبَ الطَّعَامِ؟» قَالَ أَصَابَتْهُ السَّمَاءُ يَا رَسُولَ اللهِ، قَالَ: «أَفَلَا جَعَلْتَهُ فَوْقَ الطَّعَامِ كَيْ يَرَاهُ النَّاسُ، مَنْ غَشَّ فَلَيْسَ مِنِّي»

நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் (சந்தையில்) ஒரு உணவு குவியலை கடந்து சென்றார்கள். அதில் தன் கையை (உள்ளே) நுழைத்த பார்த்தபோது அது ஈரமாக இருந்தது. அந்த உணவு பொருள் உரிமையாளரிடம், “ இது என்ன என்று கேட்டார்கள்”   அதற்கு அவர் “ இது மழையின் காரணமாக ஈரமாகிவிட்டது அல்லாஹ்வின் தூதரே என்று சொன்னார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள்  “ இதை மக்கள் பார்க்கும்படி உணவிற்கு மேலே வைத்திருக்க கூதாதா? யார் நம்மை ஏமாற்றுகிறாரோ அவர் நம்மை சார்ந்தவர் இல்லை”

ஏமாற்றும் வியாபாரிக்கு மார்க்க அங்கீகாரம் ரத்து.

"அளவை,நிறுவைகளில் மோசடி செய்பவர் நல்ல வியாபாரி இல்லை"

وَيْلٌ لِلْمُطَفِّفِينَ (1) الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ (2) وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ (3)
1.(எடையிலும், அளவிலும்) குறைவு செய்கிறவர்களுக்குக் கேடு உண்டாவதாக!
2. அவர்கள் எத்தகையோரென்றால் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக வாங்குவார்கள்.
3.ஆனால் அவர்களுக்குத் தாங்கள் அளந்து கொடுத்தாலும்  அல்லது அவர்களுக்கு நிறுத்துக் கொடுத்தாலும் குறைவு செய்(து நஷ்ட முண்டாக்கு)வார்கள்.
[ سورة المطففين]

(இந்த ஆயத் மதீனா வாசிகளின் சம்பந்தமாக இறங்கிய தாகும்) அன்றைய மதீனா வாசிகளின் பொதுவான நடைமுறையாகும் அதாவது வியாபாரிகள்  மக்களிடமிருந்து ஏதேனும பொருட்களை வாங்கும் பொழுது சரியாக நிறுத்து (மோசடி செய்யும் விதமாக கூடுதலாக பெற்றுக் கொள்வார்கள்) வாங்குவார்கள். ஆனால் ஏதேனும் பொருட்களை மக்களிடம் (விற்பனை செய்யும்) கொடுக்கும் பொழுது நிலுவையில் குறை செய்வார்கள் (மோசடி செய்வார்கள்) எப்பொழுது அவர்களின் சம்பந்தமாக எச்சரிக்கை செய்யும் விதமாக ஆயத் இறங்கியதோ, அப்போதே அவர்கள் தங்களுடைய தீய பழக்கவழக்கங்களை மாற்றிக்கொண்டு நியாயமான முறையில் வியாபாரம் செய்யக் கூடியவர்களாக மாறினார்கள் .இன்று வரையிலும் மதீனாவில் கொடுக்கல்-வாங்கலில் சரியாகவும் நீதமாகவும் இருக்கிறார்கள்.
(گلدستہ تفاسیر :  (٧/٥٦٥)

*நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “(அளவை, நிறுவை என) இரண்டு விஷயங்களில் பொறுப்பேற்றுள்ளீர்கள். இதில்தான் உங்களுக்கு முன் இருந்த சமுதாயத்தினர் அழிந்தனர்” என்று எச்சரித்தார்கள். (இப்னு அப்பாஸ் (ரலி) – திர்மிதீ).*

நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் சொன்ன அந்த அழிந்து போன சமுதாயத்தினர் யார் தெரியுமா? ஷுஐப் நபியின் சமுதாயத்தினர். மத்தியன்வாசிகள் அதாவது தோப்புகளில் வசித்தவர்கள் என்று அழைக்கப்படும் அந்த சமுதாயத்தினர். இந்த மத்தியன்வாசிகள் அளவையிலும் நிறுவையிலும் மோசடி செய்தனர்.
இம்மக்களைத் திருத்துவதற்காக அல்லாஹ் ஷுஐப் நபியை தன் தூதராக தேர்ந்தெடுத்து அச்சமுதாயத்திற்கு அனுப்பினான். ஷுஐப் நபி அல்லாஹ் காட்டித்தந்த ஏகத்துவக் கொள்கையை விளக்கி, அவர்கள் செய்துவரும் அளவை நிறுவை மோசடியை விட்டுவிடுமாறு எச்சரித்தார்கள். ஆனால் அம்மக்கள் அவரைப் பின்பற்றவில்லை. எனவே அல்லாஹ் அச்சமுதாயத்தை அழித்தான்.

ஷுஐப் நபி தன் சமுதாயத்தை எச்சரித்தைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில்

وَاِلٰى مَدْيَنَ اَخَاهُمْ شُعَيْبًا‌  قَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ‌  قَدْ جَآءَتْكُمْ بَيِّنَةٌ مِّنْ رَّبِّكُمْ‌ فَاَوْفُوا الْكَيْلَ وَالْمِيْزَانَ وَلَا تَبْخَسُوا النَّاسَ اَشْيَآءَهُمْ وَلَا تُفْسِدُوْا فِى الْاَرْضِ بَعْدَ اِصْلَاحِهَا‌  ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‌ ‏
மத்யன் நகரவாசிகளிடம் அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக அனுப்பிவைத்தோம்) அவர் (தம் கூட்டத்தாரை நோக்கி,) “என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை; நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான (அத்தாட்சி) வந்துள்ளது; அளவை முழுமையாக அளந்து, எடையைச் சரியாக நிறுத்துக் கொடுங்கள். மனிதர்களுக்கு அவர்களுக்கு உரிய பொருட்களை (கொடுப்பதில்) குறைத்து விடாதீர்கள்; பூமியில் சீர் திருத்தம் ஏற்பட்ட பின்னர், அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையாக இருக்கும்” என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 7:85)

 அளவையும், நிறுவையையும் நிறைவாக கொடுங்கள். மக்களுக்கு அவர்களின் பொருட்களை குறைத்துவிடாதீர்கள் என எச்சரித்தார். ஆனால் அம்மக்கள் அவருடைய பேச்சை கேட்கவில்லை.
அச்சமுதாயத்தில் அல்லாஹ்வை ஏற்கமறுத்தவர்கள் கூறினார்கள். ஷுஐபைப் பின்பற்றினால் நீங்கள் உங்கள் வியாபாரத்தில் நஷ்டமடைந்துவிடுவீர்கள். அவரைப் பின்பற்றாதீர்கள் என்று கூறினார்கள். அவர்கள் செய்துவந்த இந்த அளவை நிறுவை மோசடிக்காக அல்லாஹ் அவர்கள் மீது பூகம்பத்தை ஏற்படுத்தி அழித்துவிட்டான். அளவை நிறுவை மோசடி செய்யும் வியாபாரிகள் இந்த சமுதாயத்திற்கு ஏற்பட்ட நிலை தங்களுக்கு ஏற்பட்டால் என்னவாகும் என்பதை உணரவேண்டும்.

"பதுக்கி வைத்து பின் விலையேற்றி விற்பவர் முஸ்லிமான வியாபாரி கிடையாது"

عن معمر بن عبد الله- رضي الله عنه- عن رسول الله صلّى الله عليه وسلّم قال: «لا يحتكر إلّا خاطىء»  مسلم

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “பதுக்கல் செய்பவன் பாவியாவான்” இன்னொரு அறிவிப்பில் “பாவியைத் தவிர வெறெவனும் பதுக்கமாட்டான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

عن عمر- رضي الله عنه- قال
الجالب مرزوق، والمحتكر محروم،

உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “தேவையான பொருட்களைப் பதுக்கி வைக்காமல் அவற்றை கடைவீதிக்கு கொண்டு வருபவன் அல்லாஹ்வின் அருளுக்கு உரித்தானவன்! மேலும், அவனுக்கு அல்லாஹ் வாழ்வாதாரத்தையும் வழங்குவான். இன்னும், தேவையான பொருட்களைப் பதுக்கி வைப்பவன் அல்லாஹ்வின் சாபத்திற்குரியவனாவான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: மிஷ்காத் )

முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “தேவையான பொருட்களைப் பதுக்கி வைப்பவன் எவ்வளவு கெட்டவனாக இருக்கின்றான்! அல்லாஹ் பொருள்களின் விலையை மலிவாக்கி விட்டாலோ இவன் துக்கப்படுகின்றான். விலை ஏறிவிட்டாலோ ஆனந்தம் அடைகின்றான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: மிஷ்காத் )

"பஞ்சப் பட்டினியான நேரத்தில் தம் வியாபார பொருள் எதையும் பத்துக்காமல், அனைத்தயும் தர்மம் செய்த உத்தம வியாபாரி உஸ்மான் ரலி யல்லாஹு அன்ஹு"


"வியாபாரம் செய்பவர் மார்க்கரீதியாக வியாபார சட்டங்களை அறிந்திருப்பது அவசியம்"

ஹஜ்ரத் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு மனிதரை அழைத்து கடைவீதிக்கு போக சொன்னார்கள். மேலும் யாருக்கு கொடுக்கல், வாங்கல் உடைய சட்டம் தெரியாதோ அவரை கடைவீதியிலிருந்து வெளியாக்குங்கள் என்றார்கள்.

இன்னொரு அறிவிப்பில் ஹஜ்ரத் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கொடுக்கல், வாங்கல் உடைய சட்டம் தெரியாமல் வியாபாரம் செய்ய உட்கார்ந்திருப்பாரோ அவரை சாட்டையால் அடிப்பார்கள். மேலும் சொல்வார்கள் நம்முடைய கடைவீதிகளில் வட்டி எது என்று தெரியாதவரை உட்கார விடாதீர்கள்.

இமாம் மாலிக் (ரஹ்) அதிகாரிகளை அழைத்து வியாபாரிகள், இன்னும் கடைவீதிகளில் இருக்கக்கூடிய மக்களை இமாம் அவர்களுக்கு முன் கொண்டு வர சொல்வார்கள். இமாம் அவர்கள், அவர்களிடம் கேள்வி கேட்பார்கள். யாருக்கு கொடுக்கல், வாங்கல் உடைய சட்டம் தெரியாதோ இன்னும்  ஹலால் இன்னும்  ஹராமிற்கு  மத்தியில் வித்தியாசம் தெரியாதோ அவரை கடைவீதிகளிலிருந்து வெளியாக்கிவிடுவார்கள். மேலும் அவரிடம் முதலில் கொடுக்கல், வாங்கல் பற்றி சட்டங்களை கற்றுக் கொள்ளுங்கள். பிறகு வியாபாரம் செய்வதற்கு உட்காருங்கள் என்பார்கள். ஏனென்றால் சட்டம் தெரியாமல் வியாபாரம் செய்தால் வட்டியை சாப்பிடுவீர்கள் என்றார்கள்.

நம் எந்த வியாபாரம் செய்கிறோமோ அது சம்பந்தமாக மார்க்கத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளளது என்பதை தெரிந்து வைப்பது கட்டாய கடமை. இல்லையென்றால் ஹராம் கலந்து விட்டால் நம்முடைய இபாதத்துகள், துஆக்கள் ஒப்புக் கொள்ளப்படாது...

"வியாபாரத்தை அதிகாலை ஆரம்பிப்பது"

 ஹஜ்ரத் ஸஹ்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்படி துஆ செய்தார்கள்,
 "اللهم بارك لأمتي في بكورها
 "யா அல்லாஹ்! என்னுடைய உம்மத்திற்கு அதிகாலையில் (செய்யப்படும் வேலைகளில்) பரக்கத் செய்வாயாக.

மேலும் ஸஹ்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் படையை அனுப்புவதாக இருந்தால் அதிகாலை நேரத்தில் அனுப்புவார்கள்.

ஹஜ்ரத் ஸஹ்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் வியாபாரியாக இருந்தார்கள். மேலும் தன்னுடைய வேலையாட்களை வியாபாரத்திற்கு அனுப்பும் சமயம் அதிகாலையில் அனுப்புவார்கள். இதனால் அவருடைய செல்வம் அதிகரித்தது.

நாமும் நம்முடைய வியாபாரத்தை, கடைகளை சுப்ஹ் தொழுகைக்கு பின் ஆரம்பித்தால், திறந்தால் அதில் மிகப் பெரிய பரக்கத் ஏற்படும். நம்முடைய பகுதிகளில் நடைமுறை இல்லையென்றாலும் சுன்னத் என்ற எண்ணத்தில் செய்தால் நிச்சயம் அல்லாஹ் உதவி செய்வான்.

"நம் முன்னோர்கள் வியாபாரத்தில் ஹலால், ஹராமை பேணிய விதம்"

ஹப்ஸ் இப்னு கியாஸ் என்பவர் இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்களுடன் சேர்ந்து வியாபாரம் செய்து வந்தார். ஒரு தடவை இமாம் அவர்கள், ஹப்ஸ் இப்னு கியாஸிடம் வியாபார பொருட்களை கொடுத்து வியாபாரம் செய்வதற்கு வெளியே அனுப்பி வைத்தார். மேலும், இதையும் சொல்லி அனுப்பினார்கள். வாடிக்கையாளர் யாராவது இதை வாங்கினால் இதிலுள்ள குறையை அவரிடம் சொல்லவேண்டும்.
 
ஆனால், ஹப்ஸ் இப்னு கியாஸ் அதை விற்கும் சமயம் அதிலுள்ள குறையை  வாங்குபவரிடம் சொல்ல மறந்து விட்டார். விற்ற பணத்தை கொண்டு வந்து இமாம் அவர்களிடம் கொடுக்கும் சமயம் இமாம் அவர்கள், வாங்கியவரிடம் அதிலிருந்த குறையை சொன்னீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு ஹப்ஸ் இப்னு கியாஸ் குறையை சொல்ல மறந்து விட்டேன் என்று தன் தவற்றை ஒத்துக் கொண்டார். உடனே , இமாம் அவர்கள் அதை வாங்கிய நபரையாவது ஞாபகம் இருக்கிறதா? என்று கேட்டார். அதற்கும் ஞாபகம் இல்லை என்று சொல்லி விட்டார்.

 இமாம் அவர்கள் அந்த பொருளை விற்று கிடைத்த 30,000 தீனாரையும் சதகா செய்து விட்டார்கள்.

இமாம் அவர்கள் தன்னுடைய வியாபார கூட்டாளி தெரியாமல் செய்த தவறுக்காக, அந்த பொருளை விற்று வந்த மிகப் பெரிய தொகையை ஹராம் கலந்து விடுமோ என்ற ஒரே காரணத்திற்காக முழுவதையும் சதகா விட்டார்கள்.

ஆனால் நம்முடைய நிலை, வியாபாரம் செய்யும் சமயம் பொருளில் குறை இருந்தும், அதை தெரிந்திருந்தும் சொல்லி விற்கிறோமா?!.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

من باع عيبا لم يبينه لم يزل في مقت الله ولم تزل الملائكة تلعنه (رواه إبن ماجه)
             நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் யார் குறையுள்ள பொருளை, (அதை வாங்குபவருக்கு அதிலுள்ள) குறையை சொல்லாமல் விற்றுவிடுவாரோ, அவரின் மீது அல்லாஹ்வின் கோபம் இருந்து கொண்டேயிருக்கும். மலக்குமார்கள் அவரை சபித்துக் கொண்டேயிருப்பார்கள்.

குறையை சொல்லாமல் விற்கும் வியாபாரம் அதன் மூலம் வரக்கூடிய பணம் ஹலாலா?அல்லது ஹராமா? என்பதை கவனிக்கிறோமா?

مظفر بن سهل قال: سمعت غيلان الخياط يقول: اشترى سري السقطي كرّ لوز بستين ديناراً وكتب في رونامجه ثلاثة دنانير ربحه، فصار اللوز بتسعين ديناراً، فأتاه الدلاّل فقال له: إنّ ذلك اللوز أريده، فقال: خذه، فقال: بكم؟ قال: بثلاثة وستين ديناراً، قال له الدلاّل: إنّ اللوز قد صار الكرّ بسبعين ديناراً، قال له السري: قد عقدت بيني وبين الله عقداً لا أحله لست أبيعه إلاّ بثلاث وستين ديناراً، قال له الدلاّل: وأنا قد عقدت بيني وبين الله عقداً لا أحله، أن لا أغشّ مسلماً، لست آخذ منك إلاّ بسبعين ديناراً، قال: فلا الدلاّل اشترى منه ولا سري باعه

ஸிர்ரீ ஸிக்தீ (ரஹ்) அவர்கள் மாபெரும் வணிகராகத் திகழ்ந்தார்கள். ஒரு சமயம் 60 தீனார் கொடுத்து ஒரு கூஜாவை விலைக்கு வாங்கி தங்களது கடையில் விற்பனைக்காக வைத்தார்கள். மேலும், ”அன்றைய நாட்குறிப்பில் 60 தீனாருக்கு விற்பனை செய்வதற்காக வாங்கிய கூஜாவிற்கு 10 தீனாருக்கு அரை தீனார் வீதம் மூன்று தீனார் லாபமாக வைத்து 63 தீனாருக்கு அதை விற்க வேண்டும்” என்று எழுதி வைத்தார்கள்.

கொஞ்ச நாட்கள் கழித்து கூஜாவின் விலை ஏறியது. இந்த நிலையில், ஒரு கிராமவாசி கடைக்கு பொருள் வாங்க வந்தார். வந்தவரை கூஜாவின் அழகு ஈர்த்தது. ஸிர்ரீ (ரஹ்) அவர்களிடம் தனக்கு அந்த கூஜா வேண்டும். எவ்வளவு விலை? என்று கேட்டார்.
ஸிர்ரீ (ரஹ்) அவர்கள், கிராமவாசியிடம் 63 தீனார் அதன் விலை, அதில் 3 தீனார் எனக்கான லாபம் என்றார்கள்.

அதற்கு அந்த கிராமவாசி சிரித்தவராக, பிழைக்கத் தெரியாதவராக இருக்கின்றீர்களே! இதன் விலை மற்ற கடைகளில் எவ்வளவு தெரியுமா? 90 தீனார்.

இருந்து விட்டு போகட்டும்! நான் வாங்கும் போது 60 தீனார் தான், எனக்கான லாபம் 3 தீனார் தான் நான் இதை வாங்கும் போதே இன்ன விலைக்குத் தான் விற்க வேண்டும் என தீர்மானித்து விட்டேன். மற்ற கடைகளின் விலை விபரமோ, விலையேற்றமோ எனக்கு அவசியமில்லை.

அதற்கு, அந்த கிராமவாசி வெளியில் 70 தீனாருக்கு விற்பனையாகும் ஒரு பொருளை 63 தீனாருக்கு வாங்குவதில் எனக்கு உடன்பாடில்லை. அதுவும் சக முஸ்லிம் ஒருவரிடம் இப்படி குறைந்த விலைக்கு வாங்குவதற்கு எனக்கு விருப்பமும் இல்லை. எனவே, 70 தீனாருக்கு தர முடியும் என்றால் அந்த கூஜாவை வாங்கிச் செல்கின்றேன் என்று உறுதியாகக் கூறினார்.

அதைக் கேட்ட ஸிர்ரீ (ரஹ்) அவர்கள் “63 தீனாரை விட கால் தீனார் கூட கூட்டி வாங்கமாட்டேன், வேண்டுமானால் 70 தீனார் கொடுத்து மற்ற கடைகளில் நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள்! என்றார்கள்.

அந்தக்கிராமவாசியும் இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. ஸிர்ரீ (ரஹ்) அவர்களும் விட்டுக் கொடுக்கவில்லை.

இறுதியில் கிராமவாசி வாங்கவும் இல்லை, ஸிர்ரீ (ரஹ்) அவர்கள் விற்கவும் இல்லை.
(நூல்: இஹ்யா உலூமுத்தீன், கிதாபுல் பைஉ )

இது போல ஏராளமான சமபவங்கள் நம் முன்னோர்களின் வாழ்க்கையில் குவிந்து கிடக்கின்றன..

நாம் உலகில் வியாபாரம் செய்யும் சாதாரணமான வியாபாரியாக கடந்து செல்லாமல் உண்மையான, நேர்மையான சுவனத்தை ஆவல் கொண்ட வியாபாரியாக இஸ்லாம் அங்கீகரித்த வியாபாரியாக வாழ வேண்டும்.

"தவறான வியாபாரங்களின் விளைவுகள்"

1, அருள்வளம் நீக்கப்படும்

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ ، حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ قَتَادَةَ ، عَنْ صَالِحٍ أَبِي الْخَلِيلِ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ الْحَارِثِ رَفَعَهُ إِلَى حَكِيمِ بْنِ حِزَامٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم

الْبَيِّعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا ، أَوْ قَالَ حَتَّى يَتَفَرَّقَا – فَإِنْ صَدَقَا وَبَيَّنَا بُورِكَ لَهُمَا فِي بَيْعِهِمَا وَإِنْ كَتَمَا وَكَذَبَا مُحِقَتْ بَرَكَةُ بَيْعِهِمَا

அருள்வளம் நீக்கப்படும்
விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும்வரை வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசிக் குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களுடைய வியாபாரத்தில் அருள்வளம் (பரக்கத்) அளிக்கப்படும்!
குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள அருள்வளம் நீக்கப்படும்!
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி (2079)

2, பிரார்த்தனைக்கு பதிலளிக்கப்படாமல் போகுதல்
இந்த சம்பாத்தியம் இறைவனின் கோபத்தை மற்றும் பெற்றுத்தராமல் நாம் செய்யும் பிரார்த்தனைகளையும் ஏற்றுக்கொள்வதில்லை.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “மக்களே! அல்லாஹ் தூயவன். தூய்மையான தையே அவன் ஏற்கின்றான்.
அல்லாஹ் தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளையிட்டவற்றையே இறைநம்பிக்கையாளர்களுக்கும் கட்டளையிட்டுள்ளான்” என்று கூறிவிட்டு(ப் பின்வரும் இரு வசனங்களை) ஓதிக்காட்டினார்கள்:

يٰۤـاَيُّهَا الرُّسُلُ كُلُوْا مِنَ الطَّيِّبٰتِ وَاعْمَلُوْا صَالِحًـا‌ ؕ اِنِّىْ بِمَا تَعْمَلُوْنَ عَلِيْمٌ

தூதர்களே! தூய்மையான பொருள்களிலிருந்து உண்ணுங்கள். நற்செயலைச் செய்யுங்கள். திண்ணமாக நான், நீங்கள் செய்வதை நன்கு அறிபவன் ஆவேன்
(அல்குர்ஆன் 23:51)

يٰٓاَ يُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا کُلُوْا مِنْ طَيِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ وَاشْكُرُوْا لِلّٰهِ اِنْ کُنْتُمْ اِيَّاهُ تَعْبُدُوْنَ‏

“நம்பிக்கையாளர்களே! நாம் உங்க ளுக்கு வழங்கிய தூய்மையான பொருள்களிருந்து உண்ணுங்கள். நீங்கள் (உண்மையில்) அல்லாஹ்வைத்தான் வணங்குகிறீர்களென் றால், அவனுக்கு நன்றி பாராட்டுங்கள்.
(அல்குர்ஆன் 2:172).

2393 – وَحَدَّثَنِى أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ حَدَّثَنَا فُضَيْلُ بْنُ مَرْزُوقٍ حَدَّثَنِى عَدِىُّ بْنُ ثَابِتٍ عَنْ أَبِى حَازِمٍ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم

« أَيُّهَا النَّاسُ إِنَّ اللَّهَ طَيِّبٌ لاَ يَقْبَلُ إِلاَّ طَيِّبًا وَإِنَّ اللَّهَ أَمَرَ الْمُؤْمِنِينَ بِمَا أَمَرَ بِهِ الْمُرْسَلِينَ فَقَالَ ( يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا إِنِّى بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ) وَقَالَ (يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ) ». ثُمَّ ذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أَشْعَثَ أَغْبَرَ يَمُدُّ يَدَيْهِ إِلَى السَّمَاءِ يَا رَبِّ يَا رَبِّ وَمَطْعَمُهُ حَرَامٌ وَمَشْرَبُهُ حَرَامٌ وَمَلْبَسُهُ حَرَامٌ وَغُذِىَ بِالْحَرَامِ فَأَنَّى يُسْتَجَابُ لِذَلِكَ

பிறகு ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னார்கள். “அவர் தலைவிரி கோலத்துடனும் புழுதி படிந்த நிலையிலும் நீண்ட பயணம் மேற் கொள்கிறார். அவர் தம் கரங்களை வானை நோக்கி உயர்த்தி
“என் இறைவா, என் இறைவா’ என்று பிரார்த்திக்கிறார்.
ஆனால்,
அவர் உண்ணும் உணவு தடை செய்யப்பட்டதாக இருக்கிறது;
அவர் அருந்தும் பானம் தடை செய்யப்பட்டதாக இருக்கிறது.
அவர் அணியும் உடை தடை செய்யப்பட்டதாக இருக்கிறது.
தடை செய்யப்பட்ட உணவையே அவர் உட்கொண்டிருக்கிறார். இத்தகையவருக்கு எவ்வாறு (அவரது பிரார்த்தனை) ஏற்கப்படும்?
”என்று கூறி னார்கள்.
நூல்: முஸ்லிம் (1844)

3, இறைவனுடன் போர்
பொருளை விரைவில் ஈட்ட வேண்டும் என்பதற்காக ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சும் வட்டித் தொழிலைச் செய்பவர்கள் இறைவனிடம் போர் செய்யத் துணிந்தவர்களாக கணிக்கப்படுவார்கள்.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَذَرُوْا مَا بَقِىَ مِنَ الرِّبٰٓوا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ
فَاِنْ لَّمْ تَفْعَلُوْا فَاْذَنُوْا بِحَرْبٍ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ‌ۚ وَاِنْ تُبْتُمْ فَلَـكُمْ رُءُوْسُ اَمْوَالِكُمْ‌ۚ لَا تَظْلِمُوْنَ وَلَا تُظْلَمُوْنَ‏

நம்பிக்கை கொண்டோரே!
அல்லாஹ்வை அஞ்சுங்கள்!
நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்! அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகட னத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்!
நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது.
நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது.
 (அல்குர்ஆன் 2 : 278, 279)

4, சாபத்திற்குரியோர்

அளவு நிறுவையில் குறைவு செய்வோருக்குக் கேடுதான்! அவர்கள் மக்களிடம் அளந்து வாங்கும்போது நிறைவாக வாங் கிக் கொள்கின்றனர். மக்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுத் தால் குறைத்து விடுகின்றனர். மகத்தான நாளில் அவர்கள் உயிர்ப்பிக்கப்பட உள்ளனர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? அந்நாளில் அகிலத்தின் இறைவன் முன்னால் மனிதர்கள் நிற்பார்கள்.
 (அல்குர்ஆன்86 : 1- 6)

5, நரகம் பரிசாகும்

حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَعَلِىُّ بْنُ حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَاعِيلَ بْنِ جَعْفَرٍ – قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ – قَالَ أَخْبَرَنَا الْعَلاَءُ – وَهُوَ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ مَوْلَى الْحُرَقَةِ – عَنْ مَعْبَدِ بْنِ كَعْبٍ السَّلَمِىِّ عَنْ أَخِيهِ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ عَنْ أَبِى أُمَامَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ

« مَنِ اقْتَطَعَ حَقَّ امْرِئٍ مُسْلِمٍ بِيَمِينِهِ فَقَدْ أَوْجَبَ اللَّهُ لَهُ النَّارَ وَحَرَّمَ عَلَيْهِ الْجَنَّةَ ».

நபி ஸல் அவர்கள், “யார் தன்னுடைய சத்தியத்தின் மூல மாக ஒரு முஸ்லிமின் பொருளை அநியாயமாக எடுக்கிறாரோ அல்லாஹ் அவருக்கு சுவர்க்கத்தை ஹராமாக்கி நரகத்தில் நுழையச் செய்கிறான்” என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் (196)

"நபியவர்களின் சுபச்செய்தி"

நபி (ஸல்) அவர்கள் வியாபாரிகளைப் பற்றி கூறும் போது முழு உண்மையுடனும் நம்பிக்கையுடனும் வியாபாரம் செய்யும் விபாயாரி நபிமார்கள், உண்மையாளர்கள், சுஹதாக்களுடன் இருப்பார் என நவின்றார்கள். (நூல் – திர்மிதி)

மேலும் கூறினார்கள், அல்லாஹ்வைப் பயந்து பேணுதலைக்கடைபிடித்து நல்லது செய்து தன் வியாபாரத்தைக் கொடுக்கல் வாங்களில் மக்களுடன் நேர்மையாக வியாபாரம் செய்த வியாபாரிகளைத் தவிர மற்றைய வியாபாரிகள் கியாமத் நாளன்று பாவிகளாக எழுப்பப்படுவார்கள். (திர்மிதி)

நபியின் சுபச்செய்திக்கு உரித்தான வியாபாரிகளாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக..


ஆமீன்..

Thursday, 12 November 2020

13/11/2020 ஜூம்ஆ பயான் குறிப்புகள்:- உலக மக்களுக்கான நபியின் இறுதி பேருரை

الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على رسول الله المرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد فقال الله تعالى في القران العظيم والقران المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

لَقَدْ كَانَ لَكُمْ فِىْ رَسُوْلِ اللّٰهِ اُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ يَرْجُوا اللّٰهَ وَالْيَوْمَ الْاٰخِرَ وَذَكَرَ اللّٰهَ كَثِيْرًا ‏
அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.
(அல்குர்ஆன் : 33:21)

عن عبدالله بن عمرو بن العاص رضي الله عنهما: أن النبي صلى الله عليه وسلم قال: ((بلِّغوا عني ولو آية، وحدِّثوا عن بني إسرائيل ولا حرَج، ومَن كذب عليَّ متعمِّدًا فليتبوَّأْ مقعدَه من النار))؛ رواه البخاري.

நபி தன் கடைசி ஹஜ்ஜின் பொழுது மக்கா அருகில் உள்ள அரபா குன்றின் மீது நின்றவராய் அங்கு குழுமியிருந்த ஒரு இலட்சம் சஹாபாக்களைப் பார்த்து நிகழ்த்திய உரை சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 


பேச்சின் இறுதியில் மக்களை நோக்கி இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கு இந்த வழிகாட்டல்களை எடுத்துச் சொல்லட்டும்; விஷயம் சென்று சேருபவர்களில் சிலர், நேரடியாக கேட்பவரைவிட நன்கு ஆராயும் தன்மை உடையவராக இருக்கலாம்.

கண்டிப்பாக ஒவ்வொரு முஃமினும் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய உலக அமைதிக்கான ,சமாதானத்தின் அடித்தளமாக அமைந்த உரை..

"இறுதி நபியின் இறுதி உரை"


வட்டி, விபச்சாரம், கொலை கொள்ளை போன்ற குற்றங்கள் மிக பாரதூரமானவை என்று விளங்கியுள்ள இந்த முஸ்லிம் சமுதாயம், பிறருடைய மானம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் அலட்சியமாக நடந்து கொள்கிறோம். ஆனால் அது மறுமையில் மிகப் பெரிய பாவமாக வந்து நிற்கும் என்று இஸ்லாம் எச்சரிக்கை செய்கிறது. நபியின் இறுதிப் பேருரையில்….

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِىٍّ الْخَلاَّلُ حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِىٍّ الْجُعْفِىُّ عَنْ زَائِدَةَ عَنْ شَبِيبِ بْنِ غَرْقَدَةَ عَنْ سُلَيْمَانَ بْنِ عَمْرِو بْنِ الأَحْوَصِ حَدَّثَنَا أَبِى
أَنَّهُ شَهِدَ حَجَّةَ الْوَدَاعِ مَعَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ وَذَكَّرَ وَوَعَظَ ثُمَّ قَالَ « أَىُّ يَوْمٍ أَحْرَمُ أَىُّ يَوْمٍ أَحْرَمُ أَىُّ يَوْمٍ أَحْرَمُ ».قَالَ فَقَالَ النَّاسُ يَوْمُ الْحَجِّ الأَكْبَرِ يَا رَسُولَ اللَّهِ.قَالَ « فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ عَلَيْكُمْ حَرَامٌ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِى بَلَدِكُمْ هَذَا فِى شَهْرِكُمْ هَذَا


"பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!"

மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.

(அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா, 2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

இன, நிற அடிப்படையில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடெல்லாம் இஸ்லாத்தில் கிடையாது என்பதை அறிவோமில்லையா? அதை அழுத்தமாகப் பதிய வைக்கும் நிகழ்வொன்று நடந்தது. முஸ்லிம்களின் முதல் முஅத்தின் என்ற பெருமை தோழர் பிலாலுக்குத்தான் அமைந்தது.

தொழுகைக்கு மக்களை அழைக்க பாங்கு வாசகங்கள் முடிவானதும் மதீனாவில் தம்முடைய மஸ்ஜிதில் பாங்கு சொல்லும் உன்னதப் பணிக்கு நபியவர்கள் பிலாலை நியமித்தார்கள். அவருக்குத் துணையாளர் அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் ரலியல்லாஹு அன்ஹு.

அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
அஷ்ஹது அ(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ்
அஷ்ஹது அ(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ்

என்று ஒவ்வொரு தொழுகைக்கும் பிலால் ரலியல்லாஹு அன்ஹு அழைப்பு விடுத்து, விடுத்து, அவரது இனிய குரல் மதீனாவிலும் தோழர்கள் மத்தியிலும் எந்தளவிற்குப் பிரசித்தமானது என்றால், பாங்கோசை என்றால் அது பிலால் என்றாகிப்போனது. இன்றும் உலகின் சில பகுதிகளில், பள்ளிவாசல்களில் தொழுகைக்கு அழைப்பு விடுக்கும் முஅத்தின்களை அறிமுகமில்லாத எவரேனும் சந்தித்து, ‘என்ன தொழில் செய்கின்றீர்கள்?’ எனக் கேட்டால் ‘மஸ்ஜிதில் பிலால் ஆக இருக்கின்றேன்!’ என்று பெருமையுடன் குறிப்பிடுமளவிற்குப் புகழ் பெற்றுவிட்டது அவரது பெயர்.

மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளன்று கஅபாவின் கூரையின்மீது ஏறி நின்று பாங்கு சொல்வதற்கு நபியவர்கள் பிலாலைத்தாம் பணித்தார்கள். அவரது பாங்கொலி மலைக்குன்றுகளில் முட்டி எதிரொலித்தது. குன்றுகளிலும் உயர்ந்த இடங்களிலும் ஓரமாக ஒதுங்கி, தொங்கிய முகங்களுடன் கஅபாவில் நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த குரைஷிகளுக்கு அந்தக் காட்சியை நம்பவே முடியவில்லை. இது கனவா, நனவா? புழுதியில் கிடத்தப்பட்டு, புழுவாக நசுக்கப்பட்ட அந்தக் கறுப்பர் இன்று நம் புனிதக் கருங்கல் ஆலயத்தின் உச்சியில் நின்று உரத்து உரைத்துக் கொண்டிருப்பது விதியா, விசித்திரமா? உயிர் பிரிந்து விடுமோ என்று கிடந்த நிலையில் ஈனஸ்வரத்தில் அன்று அவர் முனகிய வார்த்தைகளை இன்று அந்தக் கஅபாவின் கூரையில் நின்று உச்சபட்ச ஒலியில் ஓங்கி ஒலிப்பது தற்செயலாக இருக்க முடியுமா?

அன்றைய நாள் அத்தனைத் தோழர்கள் அங்குக் குழுமியிருக்க, நபியவர்கள் கஅபாவின் உள்ளே நுழையும்போது தம்முடன் உஸாமா பின் ஸைத், உஸ்மான் இப்னு தல்ஹா ஆகிய இருவரோடு மூன்றாமவராக பிலால் இப்னு ரபாஹ்வையே அழைத்துச் சென்றார்கள்.

இத்தகு நற்பேறெல்லாம் எப்படித் தற்செயலாக மட்டும் இருக்க முடியும்? சித்திரவதையின் உச்சக்கட்டத்தின் போது, உயிர் பிரிந்துவிடும் சாத்தியமிருந்தும் எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல், இணங்கிவிடாமல், ஏகத்துவத்தை உரத்து உரைத்த தன் அடிமைக்கு அந்த ஏக இறைவன் இவ்வுலகில் அளித்த நற்பேறல்லவா இது! ‘லாத், உஸ்ஸா’ என்ற எந்தச் சிலைக்கும் போலி பாவனையில்கூட வாழ்த்துச் சொல்லாமல், ‘அஹதுன்! அஹதுன்! என்று அடிபட்டுக் கிடந்த அவரின் வரலாற்றில் இன்றைய நமக்கு நிறைய பாடமல்லவா உள்ளது.

இம்மையிலேயே அவருக்கு இத்தகு பேறு என்றால் மறுமையில்? அது அளவற்றது என்பதை உணர்ந்து கொள்ள பிலாலின் காலடியோசையைத் தாம் சொர்க்கத்தில் கேட்டதாக நபியவர்கள் தெரிவித்துள்ள ஒரு ஹதீஸ் போதுமே!

நபி(ஸல்) அவர்கள் ஒரு ஃபஜ்ருப் பொழுதில், 'பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பின் நீர் செய்த சிறந்த அமல் பற்றிக் கூறும்! ஏனெனில் உம்முடைய செருப்போசையை சொர்க்கத்தில் கேட்டேன்' என்று பிலால்(ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு பிலால்(ரலி) 'இரவிலோ, பகலிலோ நான் உளூச் செய்தால் அவ்வுளூவின் மூலம் நான் தொழ வேண்டுமென்று நாடியதைத் தொழாமல் இருப்பதில்லை. இதுதான் என்னுடைய செயல்களுள் சிறந்த செயல்' என்று விடையளித்தார்கள் (புகாரீ 1149)

"ஒரு முஃமினின் மானம் காப்போம்"

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னுடைய இறுதி ஹஜ்ஜின் போது, தனது நன்நெறித் தோழர்களுக்கு ஆற்றிய உரையில் பின் வருமாறு குறிப்பிட்டார்கள்:

‘இந்த மாதமும் இந்த புனிதமிக்க மக்கமா நகரமும் இந்த நாளும் எப்படி புனிதமானதோ அவ்வாறே ஒரு முஸ்லிமின் கண்ணியம் உயிர் உடமைகள் புனிதமானவை. ஒரு முஸ்லிமுடைய கண்ணியம் அவனுடய இரத்தம் அவனுடைய சொத்து-செல்வங்கள் மற்ற முஸ்லிம்களுக்கு ஹராமாகும. (அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : புகாரி 1652)

மனிதனின் கண்னியத்தை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்கா நகரத்தின் புனிதத்தன்மைக்கு இனையாக உவமித்திருப்பது மனிதனின் மானம் எவ்வளவு பெருமானம் மிக்கது என்பதையே காட்டுகின்றது.

இறை ஆலையமான கஃபாவையும் அதைச்சூலவுள்ள புனிதப்பகுதியையும் மதிப்பது எவ்வாறு கடமையோ அவ்வாறே தன் சகோதர முஸ்லிமின் கண்ணியத்தை பேணுவதும் கடமையாகும் என்பதை நபிகளாரின் உவமை உணர்த்துகின்றது.

மக்காவுக்குச் செல்லும் முஸ்லிம்கள் ஒரே விதமான வெள்ளை ஆடை தரித்து, தங்களுக்கிடையே எந்த வித நிற, இன மொழி பேதத்தையும் ஏற்படுத்தாமல் கஃபாவை வலம் வருகின்றனர்.

சண்டை சச்சறவு இல்லாமல் பயிர் பச்சைகளைக் கிள்ளாமல் உயிர்ப் பிராணிகளை வேட்டையாடாமல் அதன் புனிதத்துவத்தை மதிக்கின்றனர்.

இவ்வாறு மக்கா நகரத்தின் புனிதத் தன்மையை மதிக்கும் கணிசமான முஸ்லிம்கள், தன் சகோதர முஸ்லிமின் மானம், மரியாதை விடயத்தில் அக்கரை செலுத்துவதில்லை.

இன்னும் சொல்லப்போனால் தூங்கும் போது கிப்லாவை நோக்கி கால்களைக் கூட நீட்டக் கூடாது(?) என எள்ளை கடந்து அதன் புனிதத்தை மதிக்கும் முஸ்லிம்கள் தன் சகோதர முஸ்லிமின் மானம் மரியாதைவிடயத்தில் கால் தூசு அளவு கூட அக்கறை செலுத்துவதில்லை.

காரணம் மக்கா நகரத்தின் புனிதத்தை உணர்ந்த இவர்கள், மனிதனின் கண்ணியம் எவ்வளவு புனிதமானது என்பதை உணரவில்லை. அல்லது அவர்களுக்கு உணர்த்தப்படவில்லை.

ஒரு முஸ்லிமின் கண்ணியத்திலும் மானம் மரியாதையிலும் அத்து மீறுவது மக்கா நகரத்தின் புனிதத்தைக் கெடுப்பதற்கு ஈடாகும் என்பது இந்த நபி மொழியின் சாறமாகும்.

எனவே, இதயத்தில் ஈமான் உள்ள எந்த முஸ்லிமும் தனது சகோதர முஸ்லிமின் மான மரியாதையில் விளையாடத் துணிய மாட்டான்.
மானம் உயிரை விட புனிதமானது

யார் தன் பொருளை பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவர் ஷஹீதாவார்.யார் தன் குடும்பத்தைப் பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவர் ஷஹீதாவார்.யார் தன்னைப் பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவர் ஷஹீதாவார்.யார் தன் மார்க்கத்திற்காக கொல்லப்படுகிறாரோ அவரும் ஷஹீதாவார். ‘என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பர: ஸஈத் இப்னு சைத் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : திர்மிதி 4772, நஸாஈ 4095)

இஸ்லாம் எந்தளவு மனிதனின் மானத்திற்க்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்பதற்கு இந்த நபி மொழி சிறந்த எடுத்துக்காட்டாகும்.

"ஒரு முஸ்லிம் தன்னுடைய மானம்மரியாதையை தன் இந்நுயிரை விட மேலாக மதிக்க வேண்டும்"


ஒரு முஃமின் எந்நிலையிலும் தன் மானத்தை இழந்து விடக்கூடாது. தன் மானம் பறிபோக நேறிட்டால் அதற்காக சண்டையிட்டாவது தன் கண்ணியத்தைக் காத்துக் கொள்ள வேண்டும். அந்தச்சண்டையில் அவர் கொள்ளப்பட்டாலும் சரிதான்.அவருக்கு ஷஹீதின் நன்மை கிடைக்கும் என இஸ்லாம் கூருகின்றது. ஒரு மனிதனின் மானத்தில் கை வைப்பது அவனை கொலை செய்ததற்கு நிகரான குற்றம் என்பதை இந்த நபி மொழி உணர்த்துகின்றது.

இதிலிருந்து மானமிழந்து மறியாதையற்று நடைப்பினமாக வாழ்வதை விட கண்னியத்தோடு மாழ்வதயே இஸ்லாம் வரவேற்கின்றது என்பதை அறியலாம்.

"மானத்தில் கை வைப்பது கொலைக்கு நிகரான குற்றம்"

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

பொறாமை கொள்ளாதீர்கள். (பிறரை அதிக விலை கொடுத்து வாங்க வைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை ஏற்றிக் கேட்காதீர்கள்.கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக்கொள்ளாதீர்கள். ஒருவர் வியாபாரம் செய்துகொண்டி ருக்கும்போது மற்றவர் தலையிட்டு வியாபாரம் செய்ய வேண்டாம். (மாறாக) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார்.அவர் தம் சகோதரருக்கு அநீதியிழைக்கவோ அவருக்குத் துரோகமிழைக்கவோஅவரைக் கேவலப்படுத்தவோ வேண்டாம். இறையச்சம் இங்கே இருக்கிறது. (இதைக் கூறியபோது) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது நெஞ்சை நோக்கி மூன்று முறை சைகை செய்தார்கள். ஒருவர் தம் சகோதர முஸ்மைக் கேவலப்படுத்துவதே அவருடைய தீமைக் குப் போதிய சான்றாகும். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மற்றவரின் உயிர் பொருள் மானம் ஆகியவை தடை செய்யப்பட்டவையாகும்.

இதை அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம் 5010)

ஒரு முஸ்லிமின் உயிரை கொல்வது எவ்வளவு குற்றமோ அதே அளவு குற்றத்தை நபிகளார் மான,மரியாதையை கெடுக்கும் விவகாரத்திற்கும் கொடுத்துள் ளார்கள்.

"அகபாவில் ஓர் உடன்படிக்கை"

மனிதனின் கன்னியத்திற்கு இஸ்லாம் எந்தளவு கவனம் செலுத்தியுள்ளது என்பதற்கு அகபாவில் நடந்த உடன்படிக்கை சிறந்த சான்றாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்கா நகரில் ஏகத்துவப்பிரச்சாரத்தை முடுக்கி விட்டதினால் பல இன்னல்களுக்கும் இடர்களுக்கும் ஆளானார்கள் தன் தாய் நாட்டை துறக்குமளவு சோதனைகள் பல அவரைச்சூள்ந்தன.

இந்த நிலையில் மதீனாலிலிருந்து மக்காவுக்கு வருகை தந்த சில மதீனா வாசிகள் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மதீனாவில் அடைக்கலம் தருவதாக வாக்களித்தனர்.இதை யொட்டி அகபா எனும் பல்லத்தாக்கில் அவர்கள் இரகசியமாக அண்ணலாரைச் சந்தித்து அவரின் திருக்கரத்தில் சத்தியப் பிரமாணம் செய்து இஸ்லாத்தை ஏற்றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த இந்த முக்கியமான நிகழ்ச்சியில் முக்கியமான சில ஒப்பந்தங்கள் எடுக்கப்பட்டன.அந்த ஒப்பந்தங்களில் மனிதனின் மானம்மரியாதை குறித்தும் பேசப்பட்டது உயிருக்கு ஆபத்தான இக்கட்டான நேரத்தில் கூட நபிகளார் மனிதனின் மானம் குறித்தும் கவனம் செலுத்தியுள்ளார்கள் என்றால் மனிதனின் மானம் எவ்வளவு பெருமானம் மிக்கது என்பதையே காட்டுகின்றது.

இதை புகாரியில் பதிவாகியுள்ள பின்வரும் செய்தி உணர்த்துகின்றது

பத்ருப்போரில் கலந்து கொண்டவரும் இரவில் நடந்த அகபா உடன்பாட்டில் கலந்து கொண்ட (பன்னிரண்டு) தலைவர்களில் ஒருவருமான உபாதா பின் அஸ்ஸாமித் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:

(ஒருநாள்) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்மைச் சுற்றிலும் தம் தோழர் களின் ஒரு குழுவினர் அமர்ந்திருக்க, அல்லாஹ்வுக்கு எதையும் (எவரையும்) இணையாக்கமாட்டீர்கள் என்றும்இ திருட மாட்டீர்கள் என்றும், விபசாரம் புரியமாட் டீர்கள் என்றும் உங்கள் குழந்தைகளைக் கொல்லமாட்டீர்கள் என்றும்இ நீங்களாக அவதூறு எதனையும் புனைந்து கொண்டு வரமாட்டீர்கள் என்றும்இ எந்த நல்ல காரியத் திலும் (எனக்கு) மாறு செய்யமாட்டீர்கள் என்றும் என்னிடம் உறுதிமொழி கொடுங்கள்! உங்களில் எவர் (இந்த உறுதிமொழியின் மீது) நிலைத்திருக்கிறாரோ அவருக்கரிய நற்பலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும். இவற்றில் (மேற்கூறப்பட்ட குற்றங்களில்) ஏதேனுமொன்றை ஒருவர் செய்து, அதற்காக அவர் இந்த உலகத்திலயே தண்டிக்கப்பட்டுவிட்டால் அதுவே அவருக்குரிய பரிகாரமாகிவிடும். இவற்றில் ஏதேனுமொன்றை ஒருவர் செய்து அல்லாஹ் அவரது குற்றத்தை (உலகவாழ்வில்) மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுகிறார். அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்; அவன் நாடினால் அவரை மன்னிப்பான் என்ற சொன்னார்கள்.உடனே நாங்கள் அவற்றுக்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம். (பார்க்க: புஹாரி :18) 


இன்னும் சொல்லப் போனால் மாஇஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தன் விபச்சாரக் குற்றத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒப்புக் கொண்டு அதற்குரிய தண்டனையை வழங்கக் கோரிய மூன்று சந்தர்ப்பங்கிலும் அவரின் மானத்தின் புனிதம் கருதி அவரின் இருண்ட விவகாரத்தை வெளிச்சப்படுத்தாமல் அவரை தண்டிக்காது திருப்பி அனுப்பிவைத்தார்கள் நபிகள் நாயகம்.நான்காவது தடைவ அவரே முன் வந்து அதற்குரிய தண்டனையைப் பெற்று இவ்வுலகிலேயே தன்னை பரிசுத்தப்படுத்திக் கொண்டார். (பார்க்க : அபூ தாவுத் : 4421)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு முஃமினின் மானத்தை எனதளவு புனிதமானதாக கருதியுள்ளார்கள் என்பதற்கு இந்நிகழ்ச்சி சிறந்த எடுத்துக் காட்டாகும்.இது போன்று இன்னும் பல சம்பவங்கள் நபிகளாரின் காலத்தில் நடந்தன என்பதற்க்கு பல சான்றாதாரங்கள் காணப்படுகின்றன.

"தலைமைக்கு கீழ் படுவீர்"

மக்களேகளே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள். (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்!

(ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி, 1706)

"அராஜகம் செய்யாதீர்கள்!"

அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகெட்டவர்களாய் இறை நிராகரிப்பாளர்களாய் மாறி விடாதீர்கள்.

(ஸஹீஹுல் புகாரி 4403)

உங்களது இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (இப்படியே வாழுங்கள்!) நீங்கள் அனைவரும் தவறாமல் அல்லாஹ்வின் முன்னிலையில் ஆஜராகப் போகிறீர்கள்! அப்போது அல்லாஹ் உங்களது செயல்களைப் பற்றி விசாரிப்பான். நான் மார்க்கத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களில் எவராவது மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால், அதை அவர் உரிய முறையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்!

(ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹுல் புகாரி 67, 105, 1741, 1742)

"பணியாளர்களைப் பேணுவீர்!"

மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் பணியாளர்கள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நன்றாகப் பராமரியுங்கள்! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்!

(தபகாத் இப்னு ஸஅது, முஹம்மது அந்நபிய்யுல் காதிம் மாஜித் அலீ கான்)

*அநீதம் இழிக்காதீர்கள்.*

"வாரிசுரிமை சட்டங்களில் இறை விதிகளை மீறாதீர்கள்"


"உரிமைகளை மீறாதீர்!"

மக்களே! ஒவ்வொருவருக்கும் சொத்தில் அவரவரின் உரிமைகளை அல்லாஹ் வழங்கி இருக்கின்றான். இனி, எவரும் தமது எந்த வாரிசுக்கும் உயில் எழுதக் கூடாது.(நஸாயி 3642, ஸுனன் அபூதாவூத் 2870, 3565, தபகாத் இப்னு ஸஅது)

"முறைதவறி நடக்காதீர்!"

அறிந்து கொள்ளுங்கள்! குழந்தை விரிப்புக்கே சொந்தமானது. (அனுமதிக்கப்பட்ட திருமண உறவுடன் இருக்கும் கணவனுக்கே குழந்தை உரியதாகும்) மணமுடித்துக் கொண்ட பிறகும் விபசாரம் செய்பவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும்.எவர் தம் தந்தை அல்லாதவரை தம்முடைய தந்தையாக அழைக்கிறாரோ, எவர் தம் உரிமையாளர் அல்லாதவருடன் தம்மை இணைத்துக் கொள்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வுடைய, வானவர்களுடைய இன்னும், மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகட்டும்! அவர்களின் கடமையான உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படாது.

(இப்னு மாஜா 2712, ஸஹீஹுல் ஜாமிஇ1789) 

"பெண்களை மதிப்பீர்!"

கவனியுங்கள்! பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவர்களுக்கு நன்மையே நாடுங்கள்; அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அல்லாஹ்வுடைய அமானிதமாக அவர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்! எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருக்கின்றனவோ, அதே போல் உங்கள் மனைவியருக்கும் உங்கள் மீது உரிமைகள் இருக்கின்றன. அவர்கள் உங்களுக்குச் சிறந்த முறையில் பணிவிடை ஆற்றட்டும்! அவர்களுக்குரிய கடமை என்னவென்றால், நீங்கள் எவரை விரும்ப மாட்டீர்களோ, அவரை அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கட்டும்; இன்னும், மானக்கேடான செயலைச் செய்யாமல் இருக்கட்டும்! அவர்கள் குற்றம் புரிந்தால், அவர்களைத் தண்டிக்கிற உரிமையும் உங்களுக்கு உண்டு. அது அவர்களை இலேசாக காயம்படாதபடி தண்டிப்பதாகும். அவர்களுக்கு ஒழுங்கான முறையில் உணவும் உடையும் வழங்குங்கள்; அவர்களுக்கு நன்மையை நாடுங்கள்; அவர்கள் உங்களின் உதவியாளர்களாகவும் உங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்தே நீங்கள் அவர்களுடன் மணவாழ்க்கை மேற்கொண்டுள்ளீர்கள்!

(ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹ் ஜாமிஇ 7880)

"இரண்டைப் பின்பற்றுவீர்!"

மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின் வழிமுறையும்) விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்!

(ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074) (முஅத்தா இமாம் மாலிக்/மிஷ்காத்182. ஸஹீஹுத் தர்கீப் 40.)

"எச்சரிக்கையாக இருப்பீர்!"

மக்களே! உங்களது இந்த நகரத்தில், தான் வணங்கப்படுவதைப் பற்றி ஷைத்தான் நம்பிக்கை இழந்து விட்டான். ஆனாலும், அவன் மகிழ்ச்சியுறும் விதமாய் நீங்கள் அற்பமாக கருதும் சில விஷயங்களில் அவனுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள். ஆகவே, உங்களது மார்க்க விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்!

(பிக்ஹு சூரா456. ஸஹீஹ் ஜாமிஇ 7880/முஸ்தத்ரகுல் ஹாகிம். ஸஹீஹுத் தர்கீப் 40)

இன்னும், (மகா பொய்யன்) தஜ்ஜாலைப் பற்றியும் உங்களுக்கு எச்சரிக்கிறேன். அல்லாஹ் அனுப்பிய எந்த இறைத்தூதரும் (அவனைப் பற்றித்) தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. (இறைத் தூதர்) நூஹ் அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு) அவனைப் பற்றி எச்சரித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் வருகை தந்த இறைத்தூதர்களும் எச்சரித்தார்கள். மேலும், (என் சமுதாயத்தினரான) உங்களிடையேதான் (இறுதிக் காலத்தில்) அவன் தோன்றுவான். அவனது (அடையாளத்) தன்மைகளில் எதேனும் சில உங்களுக்குப் புலப்படாமல் போனாலும், நிச்சயமாக உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தெரியாதவனல்லன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்! உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அவனோ, (தஜ்ஜாலோ) வலது கண் குருடானவன். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்று இருக்கும்.

(ஸஹீஹ்ல் புகாரி 4402)

"சொர்க்கம் செல்ல வழி!"

மக்களே! உங்கள் இறைவனையே வணங்குங்கள்; உங்கள் இறைவனுக்கே பயந்து கொள்ளுங்கள்; கடமையான ஐவேளைத் தொழுகைகளையும் தவறாது பேணுங்கள்; (ரமழானில்) நோன்பு நோற்று வாருங்கள்; விருப்பமுடன் ஸகாத் கொடுத்து விடுங்கள்; அல்லாஹ்வின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள்; உங்களில் அதிகாரம் உடையோருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; நீங்கள் சொர்க்கம் செல்வீர்கள்!.

(ஜாமிவுத் திர்மிதி616, ஸஹீஹுத் திர்மிதி516, மிஷ்காத் 576, முஸ்னத் அஹ்மத், தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு அஸப்கிர், மஆதினுல் அஃமால் 1108,1109)

"குற்றவாளியே தண்டிக்கபடுவார்!"

ஒருவர் குற்றம் செய்தால் அதற்கான தண்டனை அவருக்கே கொடுப்படும்; மகனுடைய குற்றத்திற்காக தந்தையோ, தந்தையின் குற்றத்திற்காக மகனோ தண்டிக்கப்பட மாட்டார்.

(ஸஹீஹுல் ஜாமிஇ 7880, ஜாமிவுத் திர்மிதி2159,3078, ஸஹீஹுத் திர்மிதி373,461, ஸுனன் இப்னு மாஜா 3055, ஸஹீஹ் இப்னு மாஜா 1015.)

மக்களே! எனக்குப்பின் எந்த ஒர் இறைத்தூதரும் இல்லை; உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் இல்லை. ( ளிலாலுஸ் ஜன்னா 1061)

"உரிமைகளை மீறாதீர்"

"கணவன் மனைவியின் உரிமைகளை பேணி வாழுங்கள்"

"நிறைவான முஃமினஆக இருங்கள்"

"சிறுசிறு வணக்கங்களில் அலட்சியம் செய்யாதீர்கள்"

"என் செய்திகளை பிறருக்கு எத்தி வையுங்கள்"


"இஸ்லாம் முழுமையாகி விட்டது!"

இறுதியில் மக்களை நோக்கி, மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம் என்றார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி "இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! என்று முடித்தார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம் 2334)

"இறுதி இறை வசனம்"


இவ்வாறு அவர்கள் கூறிய அதே இடத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கீழ் வருமாறு இறைவசனம் இறங்கியது:

"இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.) (அல்குர்அன் 5:3)

ஸஹீஹ்ல புகாரி 4406, 4407, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா, தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு கஸீர், அத்துர்ருல் மன்ஸுர்)


இன்னும் ஏராளமாக தன்னுடைய இறுதி பேருரையில் நபியவர்கள் ஒரு உம்மத்தின் இறுதி தலைவராக இந்த உம்மத் மட்டுமல்ல உலக மக்கள் அனைவரும் இப்படிததான் இருக்க வேண்டும் என்பதை மிக அழகாக ரத்தின சுருக்கமாக சொல்லிவிட்டு சென்றுள்ளார்கள்..

இதை நம்முடைய வாழ்வியல் அம்சங்கங்களாக எடுத்து நடப்போமேயானால் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெற்ற முஃமீனாக திகழ முடியும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை..


அல்லாஹ் அப்படிப்பட்ட முஃமின்களாக வாழ செய்வானாக..

ஆமீன்..

Wednesday, 4 November 2020

06/11/2020 ஜூம்ஆ பயான் குறிப்புகள்:- நானிலம் போற்றும் நாயகத்தின் நற்குணங்கள்


 الحمد لله الحمد لله رب العالمين الصلاه والسلام على رسول الله المرسلين وعلى اله وصحبه اجمعين، اما بعد، قال الله تعالى في القران العظيم، والقران المجيد، اعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، (وانك لعلى خلق عظيم)، صدق الله العظيم

 و قال النبي صلى الله عليه وسلم، فقد صح عنه عليه الصلاة والسلام من حديث أبي هريرة رضي الله عنه أنه قال: (إنما بعثت لأتمم مكارم الأخلاق)

கண்ணியமானவர்களே!

இந்த உம்மத்தின் சிறப்புகளில் ஒன்று இறுதி உம்மத், இறுதி நபியின் பல்வேறு வாழ்க்கை குறிப்புகளில் மிக முக்கியமானது, நற்குணத்தின் மொத்த உருவம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

நபியவர்கள் எத்தனையோ அற்புதங்களை காட்டினார்கள், அப்போதெல்லாம் அதிகமான நபர்கள் ஈமான் கொள்ளவில்லை.

நபியவர்கள் எத்தனையோ மனிதர்களுக்கு தானாக சென்று உபதேசம் செய்தார்கள், ஆனால் அதிகமான நபர்கள் ஈமான் கொள்ளவில்லை.

நபியவர்கள் காலத்தில் சில போர்களும் நடந்தது, அதில் கூட அதிகமான நபர்கள் ஈமான் கொள்ளவில்லை.

ஆனால் நபியவர்கள் எப்பொழுது தன் நற்குணத்தை வெளி காட்டினார்களோ, அப்போது மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தின் பக்கம் இணைந்தார்கள்.

நற்குணத்தை பரிபூரணமாக்குவதற்கு தான் நான் அனுப்பப்பட்டேன். என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

عن انس رضي الله عنه: أن النبي صلى الله عليه وسلم كان يزور الأنصار، ويسلم على صبيانهم، ويمسح رؤوسهم [رواه النسائي وصححه الالباني]

ஹஜரத் அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களுடைய தோழர்களை சந்திப்பவர்களாகவும் , சிறுவர்களுக்கு ஸலாம் கூறுபவர்களாகவும் இன்னும் அவர்களுடைய தலையை (அன்பாக) தடவி விடுபவர்களாகவும் இருந்தார்கள்.


"பணியாளர்களிடத்தில் அவர்கள் நடந்துகொண்ட முறை போற்றுதலுக்குரியது"

பணியாளர்களை அடிமைகள் போல் நடத்திய அந்த காலத்தில் நபி(ஸல்) அவர்கள் "பணியாளர்களின் வியர்வை உலரும் முன் அவர்களின் கூலியைக் கொடுங்கள்" என்று பணியாளர்களின் உரிமைகளை பிரகடனப்படுத்தினார்கள். பணியாளர் வேலை செய்ய மறுக்கும்போது கூட கடிந்து கொள்ளவில்லை, வார்த்தைகளால் காயப்படுத்தவில்லை மென்மையைக் கொண்டே அவர்களை மேன்மைப்படுத்தினார்கள். அனஸ்(ரலி) அவர்கள் சொல்வார்கள்.

நபி(ஸல்) அவர்களின் கரத்தைவிட மென்மையானதாக பட்டாடையையோ, பட்டையோ தொட்டதில்லை. அவர்களின் வாடையை விட உயர்ந்த நறுமணமத்தை ஒருபொழுதும் நுகர்ந்ததில்லை. அவர்களுக்கு நான் பத்து ஆண்டுகள் பணிவிடை செய்துள்ளேன். அப்பொழுது அவர்கள் என்னை ஒரு பொழுதும் ”உப்” (சீ) என்று கூறியதில்லை. மேலும் நான் செய்த எந்த செயலுக்கும் நீ ஏன் செய்தாய்? என்றோ, நான் செய்யாத விஷயத்திற்கும், நீ இப்படி செய்திருக்கலாமே! என்றோ அவர்கள் ஒருபொழுதும் என்னிடம் கூறியதில்லை. அனஸ்(ரலி) ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

இன்னும் 'பணியாளரின் குற்றங்களை எத்தனை தடவை மன்னிப்பது?' என்று ஒருவர் மூன்று முறை கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'ஒவ்வொரு நாளும் எழுபது தடவை மன்னித்து வாரும்' என்றார்கள்.

ஆதாரம்: அபூதாவூத், திர்மிதி

இவ்வாறு கருணையே உருவான காருண்ய நபி(ஸல்) அவர்கள் வீட்டில் மட்டுமல்ல வெளியிலும் நற்குண வடிவாய் திகழ்ந்தார்கள்.


"மனைவிமார்களிடமும், வீட்டிலும் எப்படி நடந்து கொண்டார்கள்."

ஒரு ஆணுக்கு மிக நெருக்கமாக இருக்கக்கூடிய, இன்னும் அந்த ஆணை வீட்டின் உள்ளேயும், வெளியேயும் அறியக்கூடியவர் மனைவிதான், அந்த ஆணின் குணத்தைபற்றி அறிந்துக்கொள்ள உதவும் முதல் உறைக்கல்லாவார்கள். 'உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியிடத்தில் சிறந்தவரே' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். அவ்வாறே, தாம் சொன்னதற்கு ஏற்ப தமது மனைவிமார்களை துணைவியாகவும், தோழியாகவும்தான் நடத்தினார்களே தவிர அடிமைகளாகவோ, வேலைக்காரிகளாகவோ நடத்தவில்லை. வீட்டு வேலைகளில் ஒத்தாசை செய்வார்கள், தமது கிழிந்த ஆடைகளைத் தைப்பார்கள், பழுதுபட்ட தமது செருப்பை சரி செய்வார்கள். இன்னும் அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வார்கள் என்பதை பல ஸஹீஹான ஹதீஸ்களில் நம்மால் காணமுடிகிறது. புகாரி 676, 5363, 5190 முஸ்னத் அஹ்மத் 23756, 24176 அபூதாவூத் 2214.

عن عن انس بن مالك رحمه الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم أحسن الناس خلقاً [متفق عليه]

ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

மக்களிலேயே மிகவும் அழகிய நற்குணம் உடையவராக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருந்தார்கள்.

عن عروة رضي الله عنه قال سالت عائشة رضي الله عنها: ما كان النبي صلى الله عليه وسلم يصنع إذا خلاً ؟ قالت: يخيط ثوبه، ويخصف نعله، ويصنع ما يصنع الرجل في أهله [رواه احمد وصححه الالباني]

ஹஜ்ரத் உர்வா ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :நான் ஹஜ்ரத் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் கேட்டேன் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனியாக வீட்டில் இருக்கும் போது என்ன வேலை செய்வார்கள் ? ஹஸ்ரத் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வீட்டில் இருக்கும் போது தங்களுடைய ஆடைகளை தைப்பார்கள் இன்னும் தங்களுடைய செருப்பை தைப்பார்கள் மேலும் ஒரு மனிதர் தன்னுடைய வீட்டில் என்னென்ன வேலைகள் எல்லாம் செய்வார்களோ அதேபோன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் (வீட்டில் வேலை) செய்வார்கள்.


"உணர்வுக்கு மதிப்பளித்த உயர்ந்த குணம் படைத்த நபி"

சிறியவராக இருந்தாலும் பெரியவராக இருந்தாலும் அவர்களுக்கும் சில ஆசைகள் இருக்கும். அது மார்க்கத்திற்கு முரணாக இல்லாத போது அதை நிறைவேற்றி வைப்பது சிறந்த பண்பாகும். இதை நபிகளார் அவர்கள் செய்து சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார்கள்.

2102 – حَدَّثَنِى هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِىُّ وَيُونُسُ بْنُ عَبْدِ الأَعْلَى – وَاللَّفْظُ لِهَارُونَ – قَالاَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنَا عَمْرٌو أَنَّ مُحَمَّدَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ حَدَّثَهُ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ

دَخَلَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- وَعِنْدِى جَارِيَتَانِ تُغَنِّيَانِ بِغِنَاءِ بُعَاثٍ فَاضْطَجَعَ عَلَى الْفِرَاشِ وَحَوَّلَ وَجْهَهُ فَدَخَلَ أَبُو بَكْرٍ فَانْتَهَرَنِى وَقَالَ مِزْمَارُ الشَّيْطَانِ عِنْدَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- فَأَقْبَلَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فَقَالَ « دَعْهُمَا » فَلَمَّا غَفَلَ غَمَزْتُهُمَا فَخَرَجَتَا وَكَانَ يَوْمَ عِيدٍ يَلْعَبُ السُّودَانُ بِالدَّرَقِ وَالْحِرَابِ فَإِمَّا سَأَلْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- وَإِمَّا قَالَ « تَشْتَهِينَ تَنْظُرِينَ ». فَقُلْتُ نَعَمْ فَأَقَامَنِى وَرَاءَهُ خَدِّى عَلَى خَدِّهِ وَهُوَ يَقُولُ « دُونَكُمْ يَا بَنِى أَرْفَدَةَ ». حَتَّى إِذَا مَلِلْتُ قَالَ « حَسْبُكِ ». قُلْتُ نَعَمْ. قَالَ « فَاذْهَبِى

ஒரு பெருநாளின் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி (ஸல்) அவர்கள் தாமாகவோ அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ, நீ பார்க்க ஆசைப்படுகிறாயா? எனக் கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர்.

(பிறகு அவர்களை நோக்கி) அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள் என்று கூறினார்கள். நான் பார்த்துச் சலித்த போது, உனக்கு போதுமா? என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அப்படியானால் (உள்ளே) போ! என்று கூறினார்கள்.

அறி: ஆயிஷா (ரலி),

நூல்: புகாரி (950)

2101 – وَحَدَّثَنِى أَبُو الطَّاهِرِ أَخْبَرَنِى ابْنُ وَهْبٍ أَخْبَرَنِى يُونُسُ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ قَالَ قَالَتْ عَائِشَةُ

وَاللَّهِ لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُومُ عَلَى بَابِ حُجْرَتِى – وَالْحَبَشَةُ يَلْعَبُونَ بِحِرَابِهِمْ فِى مَسْجِدِ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- – يَسْتُرُنِى بِرِدَائِهِ لِكَىْ أَنْظُرَ إِلَى لَعِبِهِمْ ثُمَّ يَقُومُ مِنْ أَجْلِى حَتَّى أَكُونَ أَنَا الَّتِى أَنْصَرِفُ. فَاقْدُرُوا قَدْرَ الْجَارِيَةِ الْحَدِيثَةِ السِّنِّ حَرِيصَةً عَلَى اللَّهْوِ

நபி (ஸல்) அவர்கள் என்னைத் தமது மேல் துண்டால் மறைத்துக் கொண்டிருக்க, பள்ளிவாசலில் (ஈட்டியெறிந்து) விளையாடிக் கொண்டிருந்த அபிசீனியர்களை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். நானாக சடைந்து விடும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன். விளையாட்டுகள் மீது பேராவல் கொண்ட இளம் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக் கொள்ளுங்கள்!

அறி: ஆயிஷா (ரலி),

நூல்: புகாரி 5236

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் விளையாட்டைப் பார்க்க ஆசைப்பட்ட போது அதற்கு நபி (ஸல்) அவர்கள் தடையாக இருக்கவில்லை. மாறாக ஆயிஷா (ரலி) அவர்களுக்காகத் தாமும் பார்த்ததுடன், அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், போதும்! போதும்! என்று சொல்லும் அளவுக்குத் தோள் கொடுத்து நின்று, பார்க்கச் செய்துள்ளார்கள். இறைத் தூதராக இருந்த நபி (ஸல்) அவர்களுக்கு எத்தனையோ பணிகள் இருந்த போதும் மனைவியின் ஆசையையும் நிறைவேற்ற வேண்டும் என்று அறிந்து அதற்கும் நேரத்தை ஒதுக்கியுள்ளார்கள்.

இன்று நாம் நம் வீட்டார்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடக்கிறோம் என்பதை சிந்தனை செய்ய கடமைபட்டுள்ளோம்..


"இறைவனுக்கும், இறை தூதருக்கும் பிரியமானவர்"

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது சில மக்கள் வந்து, அல்லாஹ்வின் அடியார்களில் அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமானவர் யார்? என்று கேட்டனர். அதற்கு குணத்தால் சிறந்தவரே! என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். உஸாமா பின் ஷரீக் (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸல் தபரானியில் உள்ளது.

உங்களில் எனக்கு மிகப் பிரியமானவரை மறுமை நாளில் எனக்கு மிக நெருக்கமானவரை நான் உங்களுக்க அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் ஆம் என்றதும் உங்களில் நற்குணமுடையவரே! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

மறுமையில் ஒரு அடியானின் தராசில் நற்குணத்தை விடவும் கனமானது எதுவும் கிடையாது ( நூல்: அஹ்மத்)


"மக்களோடு மக்களாகவே வாழ்ந்த நபி"

கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு ஆடு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்பொழுது உணவுகள் குறைவாக இருந்த காலம். தமது குடும்பத்தாரிடம் 'இந்த ஆட்டை சமையுங்கள்' என்று கூறினார்கள். பெரிய பாத்திரம் ஒன்று இருந்தது. அதில் அந்த உணவு வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது. உணவு கிடைக்காத தோழர்கள் எல்லாம் அழைக்கப்பட்டனர். நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் அவர்களுடன் அமர்ந்து கொண்டனர். உணவுத் தட்டைச் சுற்றி அனைவரும் அமர்ந்து சாப்பிடலானார்கள். கூட்டம் அதிகமாக இருந்தால் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மண்டியிட்டு அமர்ந்து மற்றவர்களுக்கு இடம் கொடுத்தார்கள். அப்போது ஒரு கிராமவாசி 'என்ன இப்படி உட்கார்ந்திருக்கிறீர்கள்?' என்று கேட்டார். அதற்கு நாயகம் அவர்கள் 'இறைவன் என்னை அடக்கு முறை செய்பவனாகவும் மமதை பிடித்தவனாகவும் ஆக்கவில்லை. பெருந்தன்மை மிக்க அடியானாகவே ஆக்கியுள்ளான்.என்று விடையளித்தார்கள்.

நூல்: அபுதாவுத் 3773, பைஹகீ 14430

இன்று கொஞ்சம் பொருளாதாரததில் உயர்ந்து விட்டால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பிரித்து அடையாளம் காணப்படுகிறோம்.


"முந்திய வேதங்களிலும் சொல்லப்பட்டுள்ள முத்து நபியின் நற்குணம்"

நான் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களைச் சந்தித்து, தவ்ராத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைப் பற்றிக் கூறப்பட்டிருக்கும் வர்ணனையை எனக்குச் சொல்லுங்கள்! என்றேன்.

​​அவர்கள், இதோ சொல்கிறேன்! அல்லாஹ்வின் மீதாணையாக! குர்ஆனில் கூறப்படும் அவர்களுடைய சில பண்புகள் தவ்ராத்திலும் கூறப்பட்டுள்ளன. நபியே! நிச்சயமாக உம்மை சாட்சியம் அளிப்பவராகவும், நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிப்பவராகவும், எழுதப் படிக்கத் தெரியா பாமரர்களின் பாதுகாவலராகவும் நாம் அனுப்பியிருக்கிறோம்! நீர் எனது அடிமையும் எனது தூதருமாவீர்! தம் எல்லாக் காரியங்களிலும் இறைவனையே நம்பியிருப்பவரென்று உமக்கு நான் பெயரிட்டுள்ளேன்! இவ்வாறெல்லாம் கூறிவிட்டு, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அடையாளங்களைக் கூறும் விதத்தில் அவர் கடின சித்தம் கொண்டவராகவோ, முரட்டுத்தனமுடையவராகவோ, கடைவீதிகளில் கத்திப் பேசி சச்சரவு செய்பவராகவோ இருக்கமாட்டார்! தீமைக்கு பதிலாகத் தீமையைச் செய்யமாட்டார்; மாறாக, மன்னித்து, கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்! வளைந்த மார்க்கத்தை அவர் மூலம் நிமிர்த்தாதவரை அல்லாஹ் அவ(ரது உயி)ரைக் கைப்பற்ற மாட்டான்! மக்கள் லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று கூறுவார்கள்; அதன் மூலம் குருட்டுக் கண்களும், செவிட்டுக் காதுகளும், மூடப்பட்ட உள்ளங்களும் திறக்கப்படும் என்று அதில் அவர்களைக் குறித்து வர்ணிக்கப்பட்டுள்ளது! என பதிலளித்தார்கள் என அதா பின் யஸார் அவர்கள் கூறினார்கள்.

​​நூல்: புகாரி 2125,மேலும் பார்க்க புகாரி 6024, 3560, 6033, முஸ்லிம் 4585, 4848, 4849


"கோபத்தை அடக்குவது, கட்டுப்படுத்துவது ஒரு மிகப் பெரிய குணமாகும்"

இதன் சிறப்பை பேசுவது மிக இலகுவானது. ஆனால் நடைமுறையில் கொண்டு வருவது மிகக் கடினம். ஆனால் எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இந்த குணம் ஊறிப் போயிருந்தது.

 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருமை புதல்வி ஜைனப் ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் மக்காவிலிருந்து ஒட்டகத்தில் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு சென்று கொண்டிருந்தார்கள். வழியில் ஹப்பார் இப்னு அஸ்வத் என்பவன் இந்த அளவு வேகமாக ஈட்டியால் அடித்தான்,இதனால் ஹஜ்ரத் ஜைனப் ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் ஒட்டகத்திலிருந்து கீழே விழுந்து விட்டார்கள். அவர்களுடைய கர்ப்பம் கலைந்து விட்டது. இந்த தூக்கம் தாளாமல் சிறிது நாட்களில் மரணமானார்கள். இந்த செய்தி அறிந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகவும் கோபமானார்கள். மேலும் துக்கமடைந்தார்கள். எப்பொழுதெல்லாம் இந்த சம்பவம் ஞாபகம் வருமோ, அப்பொழுதெல்லாம் அழுதுவிடுவார்கள். ஆனால் எப்பொழுது ஹப்பார் இப்னு அஸ்வத் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு வந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் மன்னிப்பு கேட்டார், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடனே மன்னித்தார்கள்.

இதை போன்று வஹ்ஷி இப்னு ஹர்ப் உஹத் உடைய போரில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிரியமான சிறிய தந்தை ஹஜ்ரத் ஹம்ஜா ரழியல்லாஹு அன்ஹு அவர்களை ஷஹீதாக்கியவர். இதனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடைந்த துயரத்திற்கு அளவே இல்லை. எனினும் வஹ்ஷி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்களின் சமூகத்திற்கு வந்த பொழுது அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார்கள். பின்னர் வஹ்ஷி அவர்களிடம் ஹம்ஜா ரழியல்லாஹு அன்ஹு அவர்களை கொலை செய்த முறையை கேட்டார்கள். வஹ்ஷி அவர்கள் அதை விளக்கிய பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழுதுவிட்டார்கள். மேலும் சொன்னார்கள், வஹ்ஷி! உன்னுடைய குறைகள் மன்னிக்கப்பட்டுவிட்டன. எனினும் எனக்கு முன்னால் வராதீர்கள். உங்களை பார்த்தால் என்னுடைய பிரியமான சிறிய தந்தை ஷஹீதான ஞாபகம் வருகிறது என்றார்கள்.

தங்களுடைய மகள் இறப்பதற்கு காரணமாக இருந்தவர், பிரியமான சிறிய தந்தையை கொன்றவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு மன்னிப்பு கேட்ட ஒரே காரணத்தினால் தன்னுடைய கோபம், வெறுப்பு, துக்கம் எல்லாவற்றையும் மறந்து மன்னிப்பதென்பது சாதாரண விஷயமல்ல. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் உயர்ந்த குணத்தின் காரணமாக செய்தார்கள்.

இதை போன்ற சம்பவங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல வரலாற்றில் குவிந்து கிடக்கின்றன.


"உலகத்தில் எத்தனையோ பேர் நற்குணங்களை, நல்ல தன்மைகளை போதித்துள்ளார்கள். ஆனால் அந்த குணங்களை, தன்மைகளை தங்களுடைய வாழ்க்கையில் எடுத்து நடந்தவர்கள் மிக சொற்ப நபர்களே காணக் கிடைப்பார்கள்"

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னுடைய போதனைகளை முழுமையாக தங்களுடைய வாழ்க்கையில் எடுத்து நடந்தார்கள். யாராலும் இதில் குறை காணவே முடியாது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்தவொரு நன்மைக்குரிய செயலாக இருந்தாலும், அதை செய்வதில் எல்லோருக்கும் முன்னால் இருப்பார்கள்.

மக்கா வெற்றியின் சமயம் கஃபாவின் முற்றத்தில் குறைஷிகளின் பெரும், பெரும் தலைவர்கள், இஸ்லாத்தை அழிப்பதற்கு கடுமையாக ஓடியவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது கல் எறிந்தவர்கள், திட்டியவர்கள், கடுமையான வார்த்தைகளில் சாடியவர்கள், கொலை செய்ய துடித்தவர்கள், ஸஹாபாக்களை சித்திரவதை செய்தவர்கள் எல்லோரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன் குற்றவாளிகளாக நிற்கிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பின் பத்தாயிரம் வீரர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கட்டளையை எதிர்பார்த்து ஆயுதங்களுடன், இப்படிப்பட்ட சூழ்நிலையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள்?

உலகத்தாருக்கு தங்களின் நற்குணத்தின் சான்றை நிருபித்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவாசிகளை முன்னோக்கி சொன்னார்கள். குறைஷிகளே! இன்று நான் உங்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? அவர்கள் சொன்னார்கள். நாங்கள் நல்ல விஷயத்தை ஆதரவு வைத்துள்ளோம். நீங்கள் கண்ணியமான சகோதரராக இருக்கிறீர்கள். மேலும் சங்கைக்குரிய சகோதரரின் மகனாக இருக்கிறீர்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் நான் உங்களுக்கு யூஸுப் (அலை) அவர்கள் தங்களுடைய சகோதரர்களுக்கு சொன்னதை போலவே சொல்கிறேன்.

  ”لا تثریب علیکم الیوم اذہبوا فانتم الطلقاء“

"இன்று உங்களின் மீது எந்த பழிவாங்குதலும் இல்லை. செல்லுங்கள்! நீங்கள் எல்லோரும் சுதந்திரமானவர்கள்". 

இதை போன்ற நற்குணத்திற்கு சான்றை இன்று வரை, இல்லையில்லை கியாமத் நாள் வரை உலகம் காட்டுவதற்கு சாத்தியமேயில்லை.


"பொற்குண நபியின் நற்குணங்களை சொல்லி முடிக்க காலம் போதாது"

எப்பொழுதும் குப்பையை கொட்டும் பெண்மணி சில நாட்களாக வரவில்லை என்றதும், விசாரித்தார்கள் நபி, அந்த கிழவிக்கு உடல் நிலை சரியில்லை என்றதும் நோய்விசாரிக்க சென்ற நபியின் குணம் எங்கே ..?

பக்கத்து வீட்டானின் குப்பை நம் வீட்டு பக்கம் வந்தால் நம் நிலை மாறும் நம் குணம் எங்கே..?

நுபவ்வத்திற்கு முன் அபு ......

என்பவர் நபியிடம் கொடுக்கல் வாங்கல் வைத்திருந்தார்.

ஒரு நாள் பணம் தர ஒரு இடத்தில் நிற்க வைத்து சென்றவர் மறந்து மூன்று நாட்கள் கழித்து நினைவு வர வாக்குறுதி தவறாத வள்ளல் நபி அங்கேயே நின்றிருந்தார்கள் .

வந்தவர் மன்னிப்பு கேட்டார் "என்னை கஷ்டத்தில் ஆழ்த்தி விட்டீரே" என்ற ஒரு சொல்லோடு நபி அவர்கள் திரும்பிய நிகழ்வு உலகில் எவராலும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதியை நமக்கு சொல்லி காட்டுகிறது.

குழந்தையின் அழுகைக்காக இபாதத்தை சுருக்கிய நபியின் குணம், குழந்தை அழுதால் எரிச்சல் கொண்டு முகம் மாறும் நமக்கு உயர்ந்த படிப்பினை

இவ்வாறுஏராளம் ஏராளம் வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவிலும் குணங்களில் அழகானவர்களாவே திகழ்ந்தார்கள் சலல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

இது போன்று நாமும் நபியுடைய முழு வாழ்க்கையையும் பேணி நடப்பதற்கு அல்லாஹ் தௌபீக் செய்வானாக!

08/01/2021 ஜூம்ஆ குறிப்புகள்:- பேனுதலை கடைப்பிடிப்போம், பேரின்பத்தை பெற்றுக்கொள்வோம்

பேணுதலை கடைபிடிப்போம், பேரின்பத்தை பெற்றுகொள்வோம் أخرجه الترمذي (2442) ، وأحمد (1630) ، وابن حبان (722) عن الحسن بن علي رضي الله...